Powered By Blogger

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

குறைந்த தண்ணீரில் சரக்கடித்தல்






நண்பர்களே, சரக்கடிக்கும் பொழுது சிறிது தண்ணீர் மட்டுமே வைத்துகொண்டு, அதனுடன் சில சிப்சையோ, முருக்கையோ கடித்து கொண்டு வாந்தி எடுக்காமல் சரக்கடிப்பது எவ்வளவு கடினம் தெரியுமா ?



ஒரு புகழ் பெற்ற குடிகாரர் ஒரு பாருக்கு சென்றார். அங்கு அவர் குடிக்க அழைக்கப் படவில்லை. வேடிக்கை பார்க்க தான் சென்றிருந்தார். பார் திறந்த உடன் , அங்கு குழுமியிருந்த குடிகாரர்கள் இவரை அடையாளம் கண்டு, இவரை குடிக்குமாறு வேண்ட, சரக்கை எடுத்து, தாம் எவ்வளவு சரக்கடிக்க வேண்டும் என வினவினார். மக்களோ எவ்வளவு சரக்கு வேண்டுமானாலும் அடியுங்கள் எனக் கூற, குடிகாரரோ, அதிக சரக்கு குடிக்க அழைத்தீர்கள் என்றால் நான் எளிதாகப் குடித்து விடுவேன். ஒரு பிரச்னையுமில்லை. ஆனால் நாலு பெக் மட்டுமே அடிக்கவேண்டுமேனில், அதற்கு நான் ஒரு பீர் முழுவதும் அடித்து , பிறகு தான் சரக்கடிக்க வேண்டும் எனக் கூறினார். காரணம் என்ன வெனில், என்ன சரக்கு வேண்டுமானாலும் அடிக்கலாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அடிக்கலாம் என்றால் அது எளிது. கை வந்த கலை. ஆனால் குறிப்பிட்ட சரக்கை, அதுவும் குறைந்த தண்ணீரோடு அடிக்க வேண்டுமெனில், அது கடினமான செயல்.



ஏனெனில் குறைந்த தண்ணீரில் ஒரு பெக்கினை, ஒரு குவாட்டரை, ஒரு புல்லினை அடிக்க வேண்டுமெனில், அதற்கு அதிகம் பயிற்சி வேண்டும். குறித்த தண்ணீரில் , அடிக்க வேண்டியவைகளை எல்லாம் அடிக்க வேண்டும். போதை ஏற அடிக்க வேண்டும். எவ்வளவு குடித்தாலும் வாந்தி வராமல் இருக்கணும். அது அனுபவத்தில் தான் வரும். திட்டமிட்டால் தான் வரும்.
குவாட்டரை குடித்தேன்:உடல்வலி நிவாரணம் 1/4


சென்ற மாதம் எனக்கு காது வலி வந்தது. அதன் விளைவாக நடுவிரல் வீங்கிக் கொண்டது. நீண்ட நேரம் கீழே தொங்க விட்டிருந்தால் வீக்கம் அதிகமாகி ஆயிரம் டைனோசர் கடித்தது போல் வலித்தது; கடுத்தது. விரலை கீழே தொங்க விடாமல் மேல் நோக்கி வைத்திருந்தால் வலியும் வீக்கமும் குறைந்தது. அதனால் நடுவிரலை எப்போதும் மேல்நோக்கி வைத்து மற்ற விரல்களை மடக்கி இருக்கும் ஸ்டைலிலேயே வைத்திருக்க வேண்டி ஆனது. ஆனால் இதை மற்றவர்கள் தங்களுக்குத் தரப்படும் அவமரியாதை என்று எடுத்துக் கொண்டு விட்டார்கள்.



என்னை அடுத்து புஜ்ஜிகுட்டிக்கும் காதுவலி வந்து அதற்கும் நடுவிரல் வீங்கியது; ஆயிரம் டைனோசர் கடித்தது போல் கடுத்தது(உனக்கு எப்படி தெரியும்னு கேட்க கூடாது). அது வேறு கத்தல் திலகம் என்பதால் ஒரே ரகளை. (அதுக்கிட்ட கேட்டால் ‘வாலுதான் குரைத்தல் திலகம் ’ என்னும். அது குடிப்பதில்லை என்பதால் அதோட தரப்பு கேட்பார் இல்லாமல் போகிறது). வலியால் அது குரைப்பதை பார்த்துப் பார்த்து சலிப்படைந்து என் வலி பற்றி வெளியில் சொல்வதையே நிறுத்திக் கொண்டேன். ஒயின்ஷாப்பில் கேட்டதில் இந்த வலி சரக்கடித்தால் சரியாகும் என்றார். சரக்கடித்தல் என்பது குவாட்டரா, ஆஃபா, ஃபுல்லா என்று கேட்டதற்கு என்னை ஒருமாதிரி பார்த்து விட்டு “ஓரிரண்டு ஃபுல்கள் ” என்றார்.



மற்ற ஒயின்ஷாப்பில் விசாரித்த போதும் அந்த பதிலே கிடைத்தது. இரண்டு ஃபுல்லை எப்படி அடிப்பது? பல சமயங்களில் ராவா அடிக்கலாமா என்ற அளவுக்கு வலி. இதற்கிடையில் டிசம்பர் 31 அன்று நியூஇயர் கொண்டாட்டத்துக்கு டாஸ்மாக் போய் சரக்க அடிக்கவேண்டும்.



” சரக்கடிக்க வேண்டுமானால் டாஸ்மாக் செல்ல வேண்டுமே; இந்த விரலை வைத்துக் கொண்டு எப்படிச் செல்வது? ” யோசித்தேன்.



எப்படியோ மடக்கி மடக்கி மறைத்து சேர்ந்து விட்டோம். ஒயின்ஷாப் வாசல். சக குடிமகன்கள் சரக்கு வாங்கும் நேரம்.



என்னைப் பார்த்து ” என்னா வேணும்? ” என்று கேட்டார். நான் புஜ்ஜிகுட்டியை சுட்டிகாட்டி ” கடந்த ஐந்து நாட்களாக மாற்றி மாற்றி இதுக்கு கொட்டாவி வந்து நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது சேல்ஸ்மேன். இதை சரிப்படுத்த வேண்டும் ” என்றேன். அப்போதைய பிரச்சினையான காதுவலியை பற்றியும் சொன்னேன்.



” அப்படியா? புஜ்ஜிகுட்டி இதுபற்றி எதுவும் சொன்னதில்லையே? ” என்று சொல்லி விட்டு, கீழே குனிந்து ஒரு உருட்டைகட்டை மாதிரியான ஒரு தடியை புஜ்ஜிகுட்டியின் தலையில் ஒன்னு போட்டார்.



அடுத்து, சில அடிகள் காதில் விழுந்தது. அப்போது காலை மணி பண்ணிரெண்டு. காலையிலிருந்து அவருடைய நடமாட்டங்களை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். காலையிலிருந்தே ஒரு நிமிடம் கூட விடாமல் ராவாக சரக்கு அடித்தது போல் அங்கே ஒரு ஆட்டம், இங்கே ஒரு கும்மாளம் என்று ஆடிக் கொண்டிருந்தார். ஒரு வாய் சைடிஷ் கூட சாப்பிட்டிருப்பாரா என்பது சந்தேகம். இன்னும் பலர் சரக்குவாங்க காத்துக் கொண்டிருந்தார்கள். சரக்கு வாங்கி மீண்டும் பாருக்குள் செல்ல வேண்டும். அநேகமாக இரவு 12 மணிக்குத்தான் அவரால் சைடிஷ் சாப்பிடமுடியும்.



என்னைப் பார்த்து அந்த அற்பமான சிரிப்புடன் “புஜ்ஜிகுட்டிக்கு சரியாயிருச்சு. உனக்கும் ரெண்டு போடட்டுமா? ” என்று கேட்டார்.



“சேல்ஸ்மேன், இன்னும் நீங்கள் காலையிலிருந்து சாப்பிடக் கூட இல்லை என்று நினைக்கிறேன்... ”



“ஆமாம் என்ன இப்போ... ”



என்னதான் சேல்ஸ்மேன் என்றாலும் சரக்கடிச்சா சைடிஷ் சாப்பிடனும் தானே? இருந்தாலும் நாள் பூராவும் சைடிஷ் தண்ணீர் இன்றி குடிமக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தப் மகாகுடிமகன் மீது ஒரு குடிகாரனுக்கு தன் சரக்கின் மீது எத்தனை அன்பும், பாசமும் சுரக்குமோ அப்படி ஒரு உணர்வு ஏற்பட்டு என் மனம் நெகிழ விடை பெற்றேன்.



சொன்னால் நம்பவே மாட்டீர்கள். ஆனால் என் கண்களால் அந்த அதிசயத்தைக் கண்டேன். புஜ்ஜிகுட்டி எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சர்வ சாதாரணமாக தாவி தாவி ஓடியது.



வீடு திரும்பும்போது என் நடுவிரல் நீட்டி கொண்டிருப்பது பற்றி சேல்ஸ்மேனிடம் ஒன்றும் சொல்லவில்லையே என்று நினைத்தேன். மறுநாள் விடிந்ததும் சேல்ஸ்மேனுக்கு ஒரு போன் பண்ணினேன்.



போன் பேசியதும் நேரில் வந்து உருட்டைகட்டையால் காதிலும், கையிலும் செமத்தியா அடித்தார் அன்றே, அந்தக் கணமே காதுவலி சரியாகி விட்டது. நடுவிரலும் கொஞ்சம் கொஞ்சமாகக் மடங்கிப் போனது.



டாஸ்மாக் பார் என்ற பெயரால் அழைக்கப்படும் அந்த அற்புதமான சொர்க்கப்பூமியை நீங்கள் பார்க்க விரும்பினால் தினமும் காலை 10 மணியிலிருந்து மாலை 10 மணி வரை தெருவுக்கு தெரு பார்க்கலாம். அங்கே குடித்து கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுடனும் கலந்து கொள்ளலாம். அவர்களோடு பேசலாம். உங்கள் குடிபிரதாபங்களை சொல்லலாம். அவரது ஆலோசனைகள் பெறலாம். அடிதடி இலவசம்.



தொடர்புக்கு:டாஸ்மாக், ஊரெங்க்கும்
1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?


ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....

அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....



2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....

காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....

இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?



3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......

சீனாவுல தான் பிறந்தது.....

ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.



4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல்

தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்"

போடுவது என்கிறோம்....



5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....

நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..

நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....



6) மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?

b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?

c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?



7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...

என்ன கொடும சார் இது?....



8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...

தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....



9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...



10) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...

சொல்லட்டுமா?

பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...

ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....



11) True GK Facts:

** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.

** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.

** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.

** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....









12) ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !

அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!



13) மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...

கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?



14) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!

1. சிரிப்பு

2. அழகு

3. நல்ல டைப்

4. கொழந்த மனசு...

5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....



15) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.



16) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....

முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....



17) தத்துவம் 2010

"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!

"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!

இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....





18) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?

மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!



19) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?

?

?

?

?

?

?

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........
இந்த பதிவில் இருக்கும் கேள்விகளுக்கு என்னை தான் பதில் எழுத சொன்னாரு! எனக்கு ஆணி அதிகமா இருந்ததால என்னோட கேர்ள்பிரண்டு பதிலை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்! பார்த்து கலாய்ங்க மக்களே!






****************





அவசமாக டாய்லட் போக வேண்டிய தருணத்தில் கழிவறை கிடைக்காமல் திண்டாடியிருக்கிறீர்களா?



ஆமாம், ஒருமுறை என்னுடய கல்லூரியில் கேரளா சுற்றுலா அழைத்து சென்றனர். உணவு விடுதியில் நிறுத்திய போது நாங்க அனைவரும் ஓடியது அங்கே தான்!, அங்கிருந்ததோ இரண்டே அறை, ஒன்று ஜென்ஸ், மற்றொன்று லேடிஸ், நாங்க இருந்தது 20 பேர், வேற வழியில்லாம ஜென்ஸ் ரூமையும் நாங்களே ஆக்ரமிச்சிகிட்டோம்!, பசங்க தான் பாவம் முளிச்சிகிட்டே நின்னானுங்க!







யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள்?



நம்ம யாரை பார்த்து பொறாமை படுறது.நம்மல பாத்து தான் மத்தவங்க பொறாமை படனும்.கொஞ்சம் மொக்கையா இருக்குல.







எதிர்பாராமல் கிடைத்த கிளுகிளு அனுபவம் ஏதாவது?





ம்ம்ம்ம்.நெறய இருக்கு.நானும் என்னோட பிரண்டு கொடைகானல் போனோம்.நாங்க போனப்ப சீசன் டைம்.நல்ல கிளுகிளுன்னு குளிருச்சு.அத என்னால மறக்க முடியாது.அடுத்து முணாறு போனோம்.அங்க பார்த்தால் இன்னும் கிளுகிளுனு குளிருசு.இந்த மாதிரி நெறய கைவசம் இருக்கு.அடுத்து ஊட்டி போனோம்.. ஐயோ அடிக்க வர வேண்டாம்..(குளுகுளுன்னு தான் குளிரனும்னு சட்டமா என்ன?)







நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?



என்னோட முஞ்சியில எப்பவும் அசடு வழியும்.அத வேற ஒரு சம்பவமா சொல்லன்னுமாகும்.







இன்றளவும் உறுத்திக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு ஏதாவது இருக்கிறதா?



ஆமாம்.ஒன்னு இருக்கு.என்னோட காதலன் கிட்ட நான் வேண்டும் என்று சண்டை போட்டேன்(காரணம் இல்லாமல்).சண்டை போட்டு பிரிந்தோம்.அது தான் எனக்கு குற்ற உணர்வு உள்ள சம்பவம்.(தப்பிச்சிகிட்டானோ)









சினிமாவுக்கு பிளாக்கில் டிக்கட் வாங்கிச் சென்றிருக்கிறீர்களா?



காலேஜ் கட்டடிச்சிட்டு சினிமாவுக்கு போலாம்னு கிளம்ப லேட்டாயி போய் நின்னா பயங்கர கூட்டம்! ஒரு ஃப்ரெண்டு பேச்சை கேட்டு ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி உள்ளே போனபிறகு சொல்றா, ப்ளாக் டிக்கெட் வாங்கினா போலீஸ் பிடிக்கும்னு, அப்புறம் லைட் எரிஞ்சாலே பயம் வந்துசுருச்சு, யாருமே ஒழுங்கா படம் பார்க்கல! ப்ளாக்குனாலே அதிலிருந்து அலர்ஜி! அதுவும் வால்பையன் ப்ளாக்குனா செம அலர்ஜி!



நீங்கள் மீறியதிலேயே பெரிய சட்ட மீறல் எது?



என்ன தான் பிராக்டிகல் எக்ஸாம்னாலும் நமக்கு மொள்ளமாரித்தனம் கை வந்த கலை ஆச்சே, எப்படி தான் சிஸ்டத்துல ப்ரோக்ராமை அழிச்சாலும் நாம எப்புடியும் பாத்து தான் எழுத போறோம்.முக்கியமா எவ்ளோ தான் படிச்சுட்டு போனாலும் டீச்சர் முகத்த ஒரு தடவ பார்த்தா போதும்.எல்லா ப்ரோக்ராமும் மறந்து போயிரும்.நான் பரீட்சைல பிட் அடிச்சது தான் பெரிய சட்ட மீறல்.



அனானி கமெண்ட் போட்டிருக்கிறீர்களா? ஆமெனில் யாருக்கு? எப்போது?



கமெண்ட் போடுறது வால்பையன் ப்ளாக்குல மட்டும் தான், ஒரு தடவை ஸ்மார்ட்ங்கிறவர் பதிவுல கமெண்ட் போட்டேன்! அனானி கமெண்டுனா எனக்கு என்னான்னு தெரியல







அன்றைய சரோஜாதேவி இன்றைய மஜா மல்லிகா யாருடைய எழுத்து சூப்பர். ஒப்பிடவும்.





அன்பே வா படத்துல சரோஜாதேவி நடிச்சிருக்காங்க தெரியும், ஆனா அவுங்க புத்தகமெல்லாம் எழுதியிருக்காங்கன்னு தெரியாது!, மஜா படத்துல நடிச்சது அசின் தானே மல்லிகா யாரு?
இந்தியர்களின் அந்த கால வயர்லெஸ் தொழில்நுட்பம்






அமெரிக்கர்கள் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள் கிடைத்தன. உடனே அவர்கள் அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள் மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தியிருக்கிறார்கள்.”



இரஷ்யர்கள் அவர்கள் நாட்டில் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள் கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள், “எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே டெலிபோனை பயன்படுத்தியிருக்கிறார்கள்.”



இந்தியர்களும் தோண்டினார்கள். 1000 அடி தாண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை. உடனே அறிவித்தார்கள், “எங்களது மூதாதையர் வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்
பொங்கி வரும் காவேரி என


பொங்கட்டும் புது வாழ்வு

சீறிவரும் காளைபோல

சிரிக்கட்டும் புது வருடம்



வருகின்ற மகிழ்ச்சிகளை

மூளையில் வைப்போம்

வந்த துன்பங்களை

மூலையில் வைப்போம்



வீசுகின்ற தென்றலுக்கு

ஜன்னல் திறப்போம்

வீசிய சூறாவளிக்கு

வாதில் அடைப்போம்



வருகின்ற காலம்

வசந்த காலம் ஆகட்டும்

வீசுகின்ற காற்றெல்லாம்

தென்றல் காற்றாகட்டும்



வருகின்ற மழையால்

மரங்களெல்லாம் சிரிக்கட்டும்

வருடுகின்ற மகிழ்ச்சியால்

மனமெல்லாம் மகிழட்டும்



வருகின்ற புத்தாண்டு

புத்துணர்ச்சி கொடுக்கட்டும்

காழ்ப்புணர்ச்சி இல்லாமல்

விழிப்புணர்ச்சி உண்டாகட்டும்



கையில் காசு வைத்திருப்போர்

இல்லாதவர் பையில் வையுங்கள்

பையில் வைத்திருப்போர்

இல்லாதவர் கையில் கொடுங்கள்



கட்டுகின்ற கட்டிடமெல்லாம்

கல்விமையம் ஆகட்டும்

தீட்டுகின்ற திட்டமெல்லாம்

திறன்பட செயல்படட்டும்



சாதி மதம் இல்லையென

சான்றிதல் கொடுப்போம்

சமத்துவம் ஒன்றேயென

தம்பட்டம் அடிப்போம்



வறுமையே இல்லை என

வாழ்த்திடலாம் வாருங்கள்

திறமை இருக்கும் இடத்தை

போற்றிடலாம் வாருங்கள்



அநாதை இல்லங்களை

அரவணைக்க வாருங்கள்

ஊனமுற்ற குழந்தைகளுக்கு

ஊக்கம் கொடுக்க வாருங்கள்



அன்பிருக்கும் இடத்தை

ஆதரிப்போம் வாருங்கள்

குணம் இருக்கும் இடத்தை

கும்பிடலாம் வாருங்கள்



முதியோர் இல்லங்களை

மூட வைப்போம்

பெற்றோரை விரட்டியடித்த

மூடர்களை முதுகில் அடிப்போம்



பெற்ற தாய்க்கு

பெருமை சேர்ப்போம்

நற்ற மரக்கன்றை

நாளும் வளர்ப்போம்



கல்வி கற்றவரை

அரசியலுக்குத் தேர்ந்தெடுப்போம்

குடும்ப அரசியலுக்குக்

கொல்லிப் போடுவோம்



கலை வளர்க்கும்

கலைஞர்களை ஊக்குவிப்போம்

கொலை செய்யும் வெறியர்களை

கூண்டோடு அழிப்போம்



வேலையில்லாத திண்டாட்டத்தை

வேரறுக்க செய்திடுவோம்

பட்டினிஇல்லாத பாரதத்தை

பரந்து விரியச்செய்வோம்



நோயுற்றுக் கிடப்போரை

நோகாமல் கவனித்திடுவோம்

பாய் எனக் கிடப்போரை

பரம்பால் புடைத்திடுவோம்



இல்லம் இல்லாதவர்க்கு

இருக்க இடம் கொடுப்போம்

கல்வி கல்லாதவர்க்கு

கல்வி கற்றுக்கொடுப்போம்



படிக்காதவர்களே இல்லை என

பறை சாற்றிடுவோம்

இல்லாதவர்களே இல்லை என

இதயம் திறந்து சொல்லிடுவோம்



நிழல் தரும் மரங்களை

நெடுகெங்கிலும் வைப்போம்

நிஜம் சொல்லும் மனிதர்களை

நெஞ்சத்தில் வைப்போம்



சுவை தரும் கனியை

தினம் தோறும் உண்போம்

சுகம் தரும் பாடலை

தினம்தோறும் கேட்போம்
நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்..!


(ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்..!





1. ஆபீஸில் சும்மா உட்கார்ந்திருக்கும் போது பாஸூடைய கையெழுத்தைப் போட்டுப் பழகலாம். ஃப்யூச்சரில் உதவும்.

2. வெளியில் போய் நின்று கொண்டு போகிற வருகிற வண்டிகளை எண்ணிக்கொண்டிருக்கலாம்.

3. உங்கள் வைரி யாரேனும் இருந்தால் அவரது வண்டியின் பெட்ரோல் டேங்கில் கொஞ்சமாக சர்க்கரை போட்டு வைக்கலாம்.







4. நெட் கனெக்ஷ்ன் இருந்தால் சீரியல், சினிமா கதைகளை படித்து வைக்கலாம். வீட்டுக்குப் போய் டி.வி பார்க்கும் நேரம் மிச்சம்.







5. கடிகாரத்தைத் தூக்கிப் போட்டு ஒரே அடி... அதுதான் உண்மையிலேயே நேரத்தைக் கொல்வது.







6. பல்லிடுக்குகளை நாக்கினால் துழாவி ஏதேனும் உணவுத்துணுக்கு மாட்டுகிறதா என்று பார்க்கலாம், மாட்டினால் அதை மென்று கொண்டு இருக்கலாம்.







7. இன்டர்வியூவுக்காக வந்திருக்கும் ஏதேனும் ஒரு பிகரை பிக்கப் பண்ண டிரை பண்ணலாம். அவர் இன்டர்வியூவுக்காக வந்திருப்பதால் கண்டிப்பாக சிரித்துப் பேசுவார்.







8. கார்ட்டூன் போட்டுப் பழகலாம். முக்கியமாக உயரதிகாரிகளை. ஆனால் அந்தப் பேப்பர் அவரது கைகளில் மாட்டாமல் பார்த்துக்கொள்வது அதி முக்கியம்.







9. கண்களை மூடியபடி பகல் கனவு காணலாம், ஸ்கூல் நாட்களில் கணக்கு, பெளதீகம், ஹிஸ்டரி முதலிய வகுப்புகளில் செய்தது போல. கனவில் நமீதா, ரம்பா வகையறாக்களை வரவழைத்தல் நலம்.





10. கேஸ் எப்படி ஃபார்ம் ஆகிறது, கொட்டாவி, ஏப்பம் முதலியவை எப்படி உருவாகின்றன போன்றவற்றை யோசிக்கலாம்.



11. காபியைத் கை தவறிக் கொட்டி விட்டு ஹவுஸ் கீப்பிங் பையனிடம் அவன் தான் கொட்டி விட்டதாக வம்பிழுக்கலாம். இன்னொரு காபி கொண்டு வரச்சொல்லலாம். (ஆனால் இதை வீட்டில் முயற்சிக்கக் கூடாது.)





12. பேப்பரில் ஏரோப்ளேன், ராக்கெட் முதலிய கைவினைப் பொருட்களை செய்து பழகலாம். யார் அதிக தூரம் விடுவது என கொலீக்குடன் போட்டி வைக்கலாம். ஆனால், வேலை பார்க்கும் யார் மேலாவது மோத விட்டு பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.





13. இஷ்ட தெய்வத்தின் மேல் பாடல் எழுதலாம். இஷ்ட தெய்வம் இல்லையா? பிடித்தவர்கள் மேல் எழுதலாம். கானா எழுத முயற்சித்தால் நிறைய எழுத முடியும்.



14. ரெஸ்ட் ரூமுக்குப் போய் முகத்தை அஷ்ட கோணலாக ஆக்கி அழகு பார்க்கலாம். செல்போன் கேமரா இருந்தால் படம் பிடித்தும் வைக்கலாம்.







15. எல்லாவற்றையும் விட எளியதான ஒரே வழி தூக்கம்.





16. தொந்தியை வருடிக்கொடுப்பது போன்ற சிறு சிறு தேகப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.



17. கேஃபடேரியாவில் / கேன்டீனில் கூட்டம் அதிகமாக இருந்தால் ஸ்நாக்ஸை ஆர்டர் செய்ய குறுக்கு வழிகளை யோசிக்கலாம்.



18. வேறு யாராவது எழுதிய ஈ.மெயிலில் தப்பு கண்டுபிடிக்கலாம். முடிந்தால் அவரிடமே சொல்லி வெறுப்பேற்றலாம்.



19. யாரையாவது கம்பெனி சேர்த்துக் கொண்டு உங்கள் ஃப்ளோர் (தளம்) தவிர மற்ற ஃப்ளோர்களுக்கு ஒரு விஸிட் போய் வரலாம். லிஃப்டை தவிர்த்து படிகளில் நடந்து போனால் நேரமும் அதிகமாகும், அரட்டையும் அதிகமாகும்.



20. வீட்டிலுள்ள சுட்டிகளின் கம்ப்யூட்டர் கேம்ஸை கொண்டு வந்து டவுன்லோடு செய்து வைக்கலாம். போரடிக்கும் நேரங்களில் விளையாட உதவும்.



21. தொடக்கூடாத ஏதேனும் ஒரு பட்டனை தட்டிவிட்டு கம்ப்யூட்டரை ஹேங் செய்யலாம். சிஸ்டம் டிபார்ட்மெண்ட் ஆட்களை வரவழைத்தால் ஒரு முழு நாளையும் ஓட்டலாம்.



22. ஏதாவது ஒரு மியூஸிக் சேனலுக்கு போன் செய்து பிடித்த பாடல் கேட்கலாம். அதை உங்கள் சுபீரியருக்கு டெடிகேட்-டும் செய்யலாம்.



23. உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாருக்காவது போன் செய்து (ஆபீஸ் போனிலிருந்து தான்) நலம் உசாவலாம். முன்னதாக போன் உரையாடல் ரெக்கார்ட் ஆகிறதா என்பதை மட்டும் செக் செய்து கொள்வது உசிதம்.
"நேரத்திட்டமிடலில்” வெற்றியடைய 10 சுலபமான வழிகள்!!


வேகமான இன்றைய உலகில், நாமும் வேகமாவும், விவேகமாவும் இல்லையென்றால் வாழ்க்கை ஓட்டத்தில் மிகவும் பின்தங்கிவிடுவோம் என்பதுதான் நிதர்சனம். இந்தப் புரிதலினால், நம்மில் பலர் இன்று வாழ்வியல் முறைகளில் பலவகையான மாற்றங்களை அவ்வப்போது செய்துகொண்டு, வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை நோக்கி பயணிக்கிறோம்.



வாழ்வியல் முறை மாற்றங்களில் மிக முக்கியமானதும், எளிதில் கைவரப்பெறாததுமாய் ஒன்று இருக்குமென்றால், அது நேரத்திட்டமிடலே என்பது நம்மில் பலர் அறிந்திருக்கும் ஒன்று. நேரத்திட்டமிடல் குறித்த புரிதல்களையும், சில/பல நுணுக்கங்களையும் புத்தகங்கள், துறை வல்லுனர்கள், நண்பர்கள் மூலமாக எனப் பலவாறாக சேகரித்து வைத்திருப்போர் பட்டியலில் நம்மில் பலர் கண்டிப்பாக இருப்போம்!







நேரத்திட்டமிடல் குறித்த திட்டங்கள், ஆயத்தங்கள், முயற்ச்சிகள் என எல்லாம் இருந்தும் சில/பல சமயங்களில் அதில் வெற்றியடைவது என்பது நம்மில் பலருக்கு “கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட முடவன் கதையாய் போய்விடுகிறது!”. இதற்க்கு காரணம், நேரத்தை நாம் எப்படி அணுகுகிறோம் அல்லது நேரத்துடன் நம்மை நாம் எப்படி தொடர்புபடுத்திக்கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்!





நேரத்துடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வதென்பது கிட்டத்தட்ட முதலீடு செய்வதைப்போல. அதாவது, நேரத்துடனான நம் உறவு/தொடர்பு ஒரு கொடுக்கல்-வாங்கல் போலத்தானாம்?! தொடக்கத்தில் நாம் முதலீடு செய்யும் ஒரு குறிப்பிட்ட கால அளவானது இறுதியாக நமக்கு நல்ல லாபத்தைக் தரும் என்கிறார்கள் உளவியலாளர்கள்!





என்னங்க ஒன்னும் புரியலீங்களா? எனக்கும் அப்படித்தான் இருக்கு. அதுக்காக அப்படியே விட்றவா முடியும். வாங்க நேரத்திட்டமிடலா நாமளா அப்படீன்னு ஒரு கை பார்த்துடுவோம்……













நேரத்திட்டமிடலில் வெற்றியடைய முத்தான 10 சுலபமான வழிகள்!



நம்ம நேரத்தை நன்றாக திட்டமிட்டு செலவு செய்ய, அப்படிச்செய்தபின் அதற்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கும் 10 முத்தான, அதேசமயம் மிகவும் சுலபமான (?) வழிகளை பின்வரும் பட்டியலில் பார்ப்போம்…..



1.ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதை நிறுத்துங்கள் (Stop multitasking): சமீபகாலங்கள்ல, பொதுவாக பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது. அடிப்படையில், அறிவியல்ரீதியாக பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு தாவுவது/மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது என்பது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது!





2.முக்கியத்துவம் வாய்ந்த செயல்களை தேர்வு செய்து கொள்ளுங்கள் (Set your priorities): ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்துகொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைப்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, தீப்பற்றிக்கொண்ட ஒரு கட்டிடத்தை விட்டு வெளியேறுவதைவிட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்கவேண்டுமென்பது முக்கியமானதல்ல!





3.உடற்பயிற்ச்சி செய்யுங்கள் (Exercise): உங்கள் உழைப்புத்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மனநலம் என்பது மிக அவசியம்! அதனால், புதிய யுக்திகளை கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும், பணிக்கிடையில் நல்ல காற்றை சுவாசித்து காலாற நடந்துவிட்டு வாருங்கள்!





4.‘முடியாது’ என்பதை கனிவாக சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் (Learn to say ‘no’ with kindness): நம் பணிகளுக்கிடையில் நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம்தான் என்றாலும், அச்சிறு உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, அயற்ச்சியைத் தருபவையாக, முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக “என்னால் இவ்வுதவி செய்ய இயலவில்லை” எனச் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்! இது உங்கள் நேரத்தை சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும்!





5.காலையில் ஒரு 15 நிமிடம் முன்பாக எழ முயற்ச்சியுங்கள் (Get up fifteen minutes early): ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்கும்முன் தியானம் செய்யவோ, உங்களின் டைரிக் குறிப்பு எழுதவோ பழகிக்கொள்ளுங்கள். உடல் நலனைப்போலவே மனநலனும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது! உடற்பயிற்ச்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்!





6.போதுமான அளவு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் (Get enough rest): ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு மணி நேரம், உங்களின் அடுத்த நாளின் ஒரு மணி நேர வேலையை குறைப்பதில்லை. ஓய்வின்றி வேலைசெய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்கிறது உளவியல்!





7.எதிர்பார்ப்புகளை மேலான்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள் (Manage expectations): உங்கள் அறையக் குப்பையாக்கிவிட்டு, விழுந்து விழுந்து சுத்தம் செய்வதற்க்கு பதிலாக, குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்துவிட்டால், குப்பையை சுத்தம்செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படும்!





8.மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தை திட்டமிட்டு வைத்துக்கொள்ளுங்கள் (Check email at set times): ஒவ்வொரு மின்னஞ்சலும் குட்டி போடும் தெரியுமா உங்களுக்கு?! அதாங்க, நீங்க அனுப்புற ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் ஒரு பதில் மின்னஞ்சல் வருமே அதைச்சொன்னேன். அதாவது, மின்னஞ்சல்களை தினசரி சரியாக கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதேமாதிரி, வேறு வேலை செய்யும்போது மின்னஞ்சல்களை பார்க்காதீங்க, கவனச்சிதறல் ஏற்படுவதை தவிர்க்க!





9.தேவையில்லாதபோது இணையம்/செல்பேசியை அணைத்துவிடுங்கள் (Unplug): அசினும், நயன்தாராவும் அடுத்த எந்த படத்துல நடிக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கலைன்னா, ஒன்னும் குடி முழுகிப்பொயிடாது. அதனால, இணையத்தை உலாவுவதிலும், செல்பேசியில் குறுச்செய்தி அனுப்பவதிலுமே காலத்தைக் கழிக்காமல், இரண்டையும் சிறிது நேரம் அணைத்துவிட்டு, உடற்பயிற்ச்சியோ தியானமோ செய்து ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!





10.செயல்பட அதிக நேரம் இருப்பதாய் எண்ணிக்கொள்ளுங்கள் (Embrace time-abundant thinking): ஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம் இருக்கும்பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்கவேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். மாறாக, மனதுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபட்டு மனதையும் லேசாக்கி, நேரத்தையும் சரியாக செலவு செய்யவேண்டும்.





நாம் எப்போதும் இறந்தகாலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்வதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொண்டோமானால் மனஅழுத்தம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துபோகும். நேற்றும் நாளையும் மாயைகள். அவை இனி இல்லை, இந்தக் கணம்தான் உண்மை என்று எண்ணி வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்ளுங்கள். வெற்றி நமக்கே…..!! மீண்டும் சந்திப்போம்.







இது தவிர, உங்களுக்குத் தெரிந்த நேரத்திட்டமிடல் குறித்த உத்திகள், பரிந்துரைகள் எதாவது இருந்தா சொல்லுங்களேன்……
நினைத்ததை நடத்தியே முடிக்க ஆசையா?!


நினைத்ததை நடத்தியே முடிக்க ஆசையா?!







-சில முயற்சிகள், சிறப்புப் பயிற்சிகள்





'உங்களின் வெற்றி ரகசியம் என்ன?' என்று உலகப் புகழ் பெற்ற செய்தியாளர் டயானே சாயரிடம் ஒரு மாணவர் கேட்டபோது அவர் தந்த பதில், 'எதிலும் முழுமையான கவனம் செலுத்தினால் வெற்றி பெற முடியும். அதுவே நான் கற்ற பாடம்!'





நண்பர்களே உலகில் இரண்டே வகையான மனிதர்கள்தான் இருக்கிறார்கள். ஒரு வகையினர்-கழுத்தை நெரிக்கும் டெட்லைனில் முழுக் கவனம் செலுத்திக் காரியத்தை முடிப்பவர்கள். இன்னொரு வகையினர்- இந்தச் செயலுக்கு இந்த அளவு கவனம் போதும் என்று நிதானமாகச் செய்து முடிப்பவர்கள். சினிமா, செல்போன், டி.வி, இன்டர்நெட், கேர்ள்/பாய் ஃப்ரெண்ட் என உங்கள் கவனம் கலைக்க இன்று காரணங்கள் ஆயிரம். இந்த வெளிப்புறக் காரணிகள் போக... மன சஞ்சலம், பயம், தயக்கம், தாழ்வு மனப்பான்மை என உள்ளே இருந்து உருட்டி மிரட்டும் சாத்தான்கள் வேறு! இவற்றைத் தாண்டி எந்த ஒரு காரியத்திலும் முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்தினால்தான் வெற்றி வசமாகும். இந்த நிலையில் 'மன ஒருமைப்பாட்டை' வளர்த்துக்கொள்வது எப்படி?







மனசே... கவனம் ப்ளீஸ்!







"மன ஒருமைப்பாடு என்பது ஒரு வகையில் நல்ல நடத்தையைக் குறிக்கும். சிதறாத கவனம் இருக்கிறவர்களிடத்தில் நல்ல குணங்களும், வெற்றி பெறுவதற்கான தகுதிகளும் அதிகமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது!" என்று ஆரம்பிக்கிறார் உளவியல் நிபுணரான கீதாஞ்சலி ஷர்மா. "நல்ல கவனம் இருப்பவர்கள் எதையும் சரியாக உள்வாங்கிக்கொள்ள முடியும். உள்வாங்கிக்கொண்டதைச் சிந்தித்து அதன் மூலம் கிடைக்கின்ற காரணங்களை வைத்துக்கொண்டு சூழ்நிலைகளைச் சமாளித்துவிடுவார்கள்.







மன ஒருமைப்பாடு சமநிலையில் இல்லாவிட்டால், தங்களால் எது செய்ய முடியும், எது செய்ய முடியாது என்று வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாது. எந்த நேரத்தில் எதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற திட்டம் இல்லாததால் மனது அதைச் செய்யலாமா, இதைச் செய்யலாமா என்று அலைபாய்ந்துகொண்டே இருக்கும்.







உதாரணமாக, வகுப்பில் நீங்கள் அமர்ந்திருக்கலாம். ஆனால், உங்கள் மனம் நேற்று பார்த்த திரைப்படத்தில் லயித்திருக்கும். உங்கள் மேலதிகாரி உங்களிடத்தில் முக்கியமான விஷயத்தைப்பற்றிப் பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால், உங்கள் கண்கள் அறையை அளந்துகொண்டு இருக்கும். நீங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால், உங்கள் கைகள் வேறு எதையோ கிறுக்கிக்கொண்டு இருக்கும். இங்கே கவனம் எதிலும் பதியவில்லை. ஒப்புக்கு இருக்கிறீர்கள். இது ஒரு வகை.







உங்களுக்குப் பிடித்த சினிமா பாட்டைக் கேட்கிறீர்கள். உங்களை மெய்மறந்து அந்த வரிகளை முணுமுணுக்கிறீர்கள். யார் கூப்பிட்டாலும் உங்கள் காதில் விழுவது இல்லை. சேனலில் பரபரப்புச் செய்தி வாசித்துக்கொண்டு இருக்கும்போது, 'அவ போட்டிருக்கிற செயின் ரொம்ப நல்லாருக்குல்ல!' என்று கேட்கிறீர்கள். இங்கே உங்கள் மனம் ஒன்றில் மட்டும்... குறிப்பாக, உங்களுக்குப் பிடித்த ஒரு காரியத்தில் மட்டும் கவனம்கொண்டு இருக்கிறது. இது இன்னொரு வகை!







இந்த இரண்டு வகைகளிலும் அடிப்படை விஷயம் ஒன்றுதான். ஆனால், அது அமைந்திருக்கிற சூழ்நிலை, செயல்பாடுகள் வேறு வேறு. கான்சன்ட்ரேஷன் எனும் 'மன ஒருமைப்பாடு' வெறும் கவனித்தல் சார்ந்து இயங்குவது அல்ல. ஒரு செயல் செய்யப்படுகிற இடம், காலம், மனிதர்கள் ஆகியோரும் முக்கியம். அவற்றை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதில் இருக்கிறது சாமர்த்தியம்.







இப்போது மேற்சொன்ன இரண்டு விஷயங்களை வேறு விதத்தில் காண்போம். வகுப்பில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். ஆனால், பேராசிரியர் பாடம் எடுக்காமல் உங்கள் 'ஆளை' செமினார் எடுக்கச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது உங்கள் கவனம் முழுக்க அவர்கள் மீதே பதிந்திருக்கும் இல்லையா? இங்கு உங்களுக்குப் பிடித்த ஒரு விஷயமும் பிடிக்காத ஓர் அம்சமும் இணைந்திருக்கையில் நீங்கள் வெறுக்கும் ஒரு செயல் இனிமையாக இருக்கிறது. அதனால் கவனம் ஓர் இடத்தில் மட்டும் இருக்கிறது. அந்தக் கவனம் எதில் இருக்கிறது என்பதுதான் இங்கு கேள்வி. அவரின் அழகிலோ அல்லது பாடம் நடத்தும் விதத்திலோ இருக்கலாம். அவர் நடத்துகிறார் என்பதாலேயே உங்களுக்குப் பாடம் கவனிக்க விருப்பம் இருக்கலாம்.







உங்களுக்குப் பிடித்த சினிமா பாட்டை மெய்மறந்து பாடிக்கொண்டு இருக்கும் சமயத்தில் டி.வி-யில் கிரிக்கெட் மேட்ச் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்போது என்ன செய்வீர்கள்? இரண்டிலும் கவனம் செலுத்தியபடியே இருப்பீர்கள். காரணம், இரண்டும் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள். இங்கே கவனம் இரண்டிலும் சரிபாதியாகச் சிதறுகிறது. இதை 'ஸ்காட்டர்ட் திங்கிங்' என்பார்கள்.







நிமிடத்துக்குப் பல ஆயிரம் சிந்தனைகள் நம் மூளையில் தோன்றி மறைவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அப்படி இருக்கையில் ஏதேனும் ஒரு காரியத்தில் மட்டும்தான் கவனம் செலுத்த முடியும். இரட்டைக் குதிரை சவாரி செய்யலாம்தான். ஆனால், பாதுகாப்பாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் இலக்கை அடைவதும் முக்கியம். தியானம், யோகா போன்ற சில பயிற்சிகளைச் செய்வதன் மூலமும் திட்டமிடுதல் மூலமும் நம் மன ஒருமைப்பாட்டை மேம்படுத்திக்கொள்ள முடியும்!" என்கிறார் கீதாஞ்சலி ஷர்மா.







மனசே... நீ ஒரு மந்திரவாதி!







"தினமும் படிக்கும் பக்க அளவுகளைவிடக் கூடுதலாக ஐந்து பக்கங்கள் அதிகமாகப் படியுங்கள். அல்ஜீப்ரா கணக்குப் பாடத்தில் தினமும் போட்டுப் பார்க்கும் கணக்கு அளவுகளைவிடக் கூடுதலாக ஐந்து கணக்குகள் வொர்க்-அவுட் செய்யுங்கள். ஜிம்மில் கொஞ்சம் கூடுதலாக புல்-அப்ஸ் எடுங்கள். இவை மனதை ஒருமுகப்படுத்த உதவும் அடிப்படைப் பயிற்சிகள்!" என்று உற்சாகப்படுத்துகிறார் அஸ்வின். இவர் கல்லூரி மாணவர், கார்ப்பரேட் ஊழியர் களுக்கு 'மன மேம்பாடு' பயிற்சியளித்து வரும் 'வின் டிரெய்னிங்' நிறுவனத்தின் தலைவர் மற்றும் பயிற்சியாளர்.







"எப்படி ஒரு விளையாட்டு வீரர் தொடர்ந்து பயிற்சிகளை அதிகப்படுத்திக்கொண்டே இருந்து தன் சாதனை எல்லைகளை நீட்டித்துக்கொள்கிறாரோ, அதே போல மனதுக்கும் சில பயிற்சிகளை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும். ஆரம்பத்தில் இரண்டு விநாடிகள் கவனமாக இருக்கும் மனம், அடுத்த சில மைக்ரோ நொடிகளில் வேறு ஒன்றுக்குத் தாவிவிடும். ஆனால், தொடர் பயிற்சிகள் மூலம் 'இரண்டாவது மனதை' அடைந்துவிடுவீர்கள். அப்போது உங்கள் மன ஒருமைப்பாடு, கவனம் இன்னும் அதிகமாகும்!" என்பவர் அதற்கென சில பயிற்சிகளையும் பரிந்துரைக்கிறார்.







ஆப்பிள் அல்லது பென்சில் அல்லது உங்கள் குழந்தையின் போட்டோ இப்படி ஏதேனும் ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். ஓர் அமைதியான அறையில் அந்தப் பொருட்களை உங்கள் கண் முன்வைத்து அதையே ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு உற்றுப் பார்க்கவும். அப்படிப் பார்க்கும்போது கண்கள் மட்டும் அங்கேயே நிலைகுத்தி இருக்கும். மனம் வேறெங்கோ அலைந்துகொண்டு இருக்கும். மீண்டும் உங்கள் மனதை அதே பொருளின் மீது இழுத்து வாருங்கள். மீண்டும் மீண்டும் இதைச் செய்வதன் மூலம் மனம் எங்கே இருந்தாலும் அதை இப்போதைய, இந்த நிமிடத்தில் உங்களால் நிலை நிறுத்த முடியும்.







'இந்த செயலை என்னால் முடிக்க முடியுமா?' என்று உள்ளுக்குள் சந்தேகம் தோன்றியவுடனே நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் படம் பார்ப்பது! ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம். ஒவ்வொரு செயலைச் செய்யும் முன்பும் நீங்கள் படம் பார்க்க வேண்டும். ஆனால், இந்தப் படம் திரையரங்குகளில் ஓடும் படம் அல்ல. உங்கள் மனத் திரையில் ஓட்டிப் பார்க்க வேண்டிய படம். சந்தேகமோ, குழப்பமோ, நம்பிக்கை இழந்துபோகிற சமயங்களிலோ நீங்கள் செய்ய வேண்டிய செயல்களை மனத்திரையில் காட்சிகளாக ஓட விடுங்கள். எப்படிச் செய்தால் இது சரியாக வரும், அந்தச் செயலை முடிக்க முடியும் என்பது போன்ற விளக்கங்கள் இதில் தெரிய வரும்.







ஒரு கடிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எதைப்பற்றியாவது சிந்தியுங்கள். அடுத்த வாரம் தோழியை சினிமாவுக்குக் கூட்டிப் போவது, வோடஃபோன் நிறுவனத்தின் ஜூஜூ விளம்பரம் - இப்படி எதுவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம். அந்த சிந்தனை ஆரம்பிக்கிற நேரத்தைக் குறித்துக்கொள்ளுங்கள். அதே சிந்தனை எந்த இடத்தில் முடிந்து இன்னொரு சிந்தனை ஆரம்பிக்கிறதோ அந்த நேரத்தையும் குறித்துக்கொள்ளுங்கள். இப்போது அந்த நேர இடைவெளிதான் எவ்வளவு நேரம் நம்மால் ஒரு நினைவில் தாக்குப்பிடிக்க முடிகிறது என்பதை உணர்த்துவது. இந்தப் பயிற்சியை ஒரு நாளைக்கு 10 முறை செய்யும்போது ஒன்றின் மீது கவனம் செலுத்துகிற நேரம் அதிகரித்துக்கொண்டே இருப்பதை உணர்வீர்கள்!







'சும்மா இருப்பதே சுகம்' என்பது சித்தர்கள் வாக்கு. ஓர் அமைதியான அறையில் ஒரு நாற்காலி போட்டு அமருங்கள். அப்படியே 10 நிமிடங்கள் அமர்ந்திருக்கவும். உடலில் தன்னிச்சையாக எந்த ஓர் அசைவையும் ஏற்படுத்தாமல் உட்கார்ந்திருக்க வேண்டும். இயல்பாக, ரிலாக்ஸ்டாக இருங்கள். அதற்காக, 'ரிலாக்ஸாக இருக்க முயற்சிக்கிறேன் பேர்வழி' என்று உங்களைக் கஷ்டப்படுத்திக்கொள்ள வேண்டாம். இதனை தீவிரமான பயிற்சியாகச் செய்துவந்தால் உடல் அளவிலும், மனதளவிலும் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் உங்களால் ஒரு செயலில் முழுக் கவனம் செலுத்த முடியும்.







செய்தித்தாள் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வந்திருக்கும் கட்டுரையைப் படிக்கவும். படித்து முடித்தவுடன் எவ்வளவு வார்த்தைகள் அந்தக் கட்டுரையில் இருந்ததோ அவற்றில் சிலவற்றையாவது ஞாபகத்துக்குக் கொண்டுவர முடிகிறதா என்று முயற்சியுங்கள். அப்படி உங்கள் நினைவில் இருக்கும் சில வார்த்தைகளை ஒரு காகிதத்தில் எழுதவும். இப்போது மீண்டும் அந்தக் கட்டுரையைப் படிக்கவும். முடித்தவுடன் அதை எழுதவும். முன்பைவிட இரண்டு மூன்று வார்த்தைகள் கூடுதலாகி இருந்தால், உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக்கொள்ளுங்கள். இப்படி நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் பயிற்சி செய்வது உங்கள் கவனத்தை மட்டுமல்லாமல் நினைவுத் திறனையும் அதிகரிக்கும்.







ஒரு செயலைச் செய்துகொண்டு இருக்கும்போது தலையைச் சொறிவது, விரல் நக அழுக்குகளை எடுப்பது, பேனாவை உதட்டில் உருட்டி விளையாடுவது போன்ற தேவை இல்லாத அசைவுகளைத் தவிர்க்கவும். நேரம் மிச்சமாவதுடன் கவனமும் அதிகரிக்கும்.







முழுக் கவனத்துடன் ஒரு வேலையைச் செய்துகொண்டு இருக்கும்போது உங்கள் மனதில் வேறு ஏதேனும் எண்ணங்கள் தோன்றினால், உடனே அதை ஒரு காகிதத்தில் குறித்துக்கொண்டு, 'இந்தச் செயலை... இந்தத் தேதியில்... இத்தனை மணிக்குச் செய்ய வேண்டும்' என்று எழுதிவைத்துவிடுங்கள். உங்கள் திட்டங்களை வகுத்ததுபோலவும் இருக்கும், உங்கள் கவனம் சிதறாமலும் இருக்கும்.







இவை தவிர, எந்த ஒரு செயலைச் செய்யும்போதும் அதில் ஏனோதானோ என்று இல்லாமல், உங்களின் முழு ஈடுபாட்டையும் செலுத்துங்கள். காரணம், ஈடுபாடு இல்லாமல் போனால், மன ஒருமைப்பாடு வெறும் கனவு மட்டுமே!







"அர்ஜுனா! உன் கண்களுக்கு அந்தப் பறவை தெரிகிறதா?" என்று துரோணாச்சாரியார் கேட்க, "இல்லை... எனக்கு அந்தப் பறவையின் கண்கள் மட்டுமே தெரிகின்றன" என்றான் அர்ஜுனன். "அப்படியானால் அம்பைச் செலுத்து!" துரோணரின் கட்டளை காற்றில் கரையும் முன் அம்பை எய்தினான். குறி தப்பவில்லை.







ஆம் ... முழுக் கவனத்துடன் எய்தினால், வெச்ச குறி தப்பாது !
மொக்கையோ மொக்கை






மொக்கை1







ஹாக்கி பிளேயர் ஹாக்கி விளையாடலாம்;







கிரிக்கெட் பிளேய கிரிக்கெட் விளையாடலாம்;







சி.டி பிளேயர் சி.டி விளையாடுமா?







மொக்கை2







தங்கச் செயினை உருக்கினா



தங்கம் வரும்.







வெள்ளிச் செயினை உருக்கினா



வெள்ளி வரும்.







சைக்கிள் செயினை உருக்கினா



சைக்கிள் வருமா?







மொக்கை3







டிவியை



வாட்ச் பண்ணமுடியும்.







வாட்ச்சை



டிவி பண்ண முடியுமா?







மொக்கை4







ஹீரோவில சின்ன ஹீரோ பெரிய ஹீரோ இருக்கலாம்.



ஜீரோவில சின்ன ஜிரோ பெரிய ஜிரோ இருக்க முடியுமா?







மொக்கை5







கையால் போட்டால் கையெழுத்து;



காலால் போட்டால் காலெழுத்தா?







கைவெட்டு என்றால்



கைதுண்டாகும்







கால்வெட்டு என்றால்



கால்துண்டாகும்







மின்வெட்டு என்றால்



மின்சாரம் துண்டாகுமா?







மொக்கை6







முட்டை போடுற கோழிக்கு



ஆம்லெட் போடத் தெரியாது.







ஆம்லெட் போடுற நமக்கு



முட்டை போடத் தெரியாது.







மொக்கை7







மனிதனுக்கு வந்தால் அது



யானைக்கால் வியாதி!







யானைக்கு வந்தால்



அது மனிதக்கால் வியாதியா?







மொக்கை8







குக்கர் விசிலடிச்சா



பஸ் போகாது







கண்டக்டர் விசிலடிச்சா



சோறு வேகாது!
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை!

நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகிற கேள்வி -ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும் ?



இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும்போதெல்லாம் புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம்.



அது ஒரு கிராமம்... சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று ! காப்பாற்று ! என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக்கதறுகிறது. உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் ! என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, நான் உன்னைச் சத்தியமாகச் சாப்பிடமாட்டேன் ! என்னைக் காப்பாற்று ! என்று கண்ணீர்விடுகிறது.



முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்... சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது. பாவி முதலையே... இது நியாயமா ? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க... அதற்கென்ன செய்வது ? இதுதான் உலகம்... இதுதான் வாழ்க்கை ! என்று சொல்லிவிட்டுச் சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்குச் சாவது பற்றிக்கூட கவலை இல்லை. ஆனால், நன்றிகெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்தத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.



முதலையின் வாய்க்குள் மெள்ளப் போய்க் கொண்டிருக்கும் சிறுவன், மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான் - முதலை சொல்வது மாதிரி... இதுதான் உலகமா ? இதுதான் வாழ்க்கையா ? அதற்குப் பறவைகள், எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம்... ஆனால், அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன... அதனால் சொல்கிறோம், முதலை சொல்வது சரிதான் !



ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதையைப் பார்த்து சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான்...



நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி நடை தளர்ந்துபோனபோது எனக்குத் தீனி போட முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை ! என்றது கழுதை.



சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ! கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான். இல்லை ! முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை ! முதலை பிதற்றுகிறது என்று முயல் சொல்ல... முதலைக்குக் கோபம் வந்து விட்டது. சிறுவனின் காலைக் கவ்வியபடியே வாதாடத் தொடங்கியது. ஊஹூம்! சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை என்றது முயல்.



பெரிதாகச் சிரித்த முயல் புத்தியில்லாத முதலையே ! உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய் ? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே. என்று நினைவுபடுத்த... முதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேசத் துவங்கியது. அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து நிற்காதே ! ஓடிவிடு ! என்று கத்த.. சிறுவன் ஓடுகிறான்.



முதலை, சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது. அதன் நினைவுக்கு வந்தது ! சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னது - புரிந்ததா... இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை !



சிறிது நேரத்துக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வர... அவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள். அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்தி... சிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது..சிறுவன் பெருமூச்சு விடுகிறான். இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை என்று சமாதானம் ஆகிறான்.



வாழ்கையின் அநேக விஷயங்களை நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது ! என்று இந்து மத ரிஷிகள் சொன்னதைத்தான் புத்தமதமும் சொல்கிறது.

..............

.......

....

..



இப்படியாய் போகின்றது சுவாமி சுகபோதானந்தாவின் (Swami Sukhabodhananda) "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" புத்தகம். இப்புத்தகம் இப்போது ஆடியோ வடிவிலும் (MP3) கிடைப்பது மிக அருமை. நிழல்கள் ரவி தன் சொந்த குரலில் இந்த புத்தகத்தை ஒலி வடிவாக்கியிருக்கின்றார்.

FRINDS

ஏய் தோழா! முன்னால் வாடா!

உயிர் காப்பான் தோழன் என முன்பு சொல்லி வைத்தார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது . ஆனால் கார்ப்பரேட் உலகில், வானளாவ உயர்ந்திருக்கும் அநேக கார்ப்பரேட்களுக்கு உயிர் கொடுத்தது தோழர்கள் தாம் என்றால் அது மிகையாகாது. இன்றைக்கு வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும் அநேக கார்ப்பரேட்களின் ஆரம்ப காலத்தை திரும்பிப்பார்த்தால் இரு தோழர்களின் விடா முயற்சி இருந்திருக்கும்.



மென்பொருள் ஜையண்ட் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவ பில்கேட்ஸுக்கு பால் ஆலன் உறுதுணையாய் இருந்தார். (Microsoft-Bill Gates and Paul Allen)























நம் எல்லாருக்கும் அபிமானமான கூகுள் தேடு பொறியை உருவாக்கியதில் நண்பர்கள் லேரி பேஜ்க்கும் செர்ஜி ப்ரின்-குக்கும் பங்கு உண்டு. (Google-Larry Page and Sergey Brin)





















போர்ட்டல் மன்னன் யாகூ உருவாக ஜெர்ரி யாங்-கும் டேவிட் பிலோவும் கூட்டு சேர வேண்டியிருந்தது. (Yahoo-Jerry Yang and David Filo)



டேட்டாபேஸ் புகழ் ஆரக்கிளை உருவாக்க லேரி எலிஸன், பாப் மைனர் என இருவர் தேவைப்பட்டார்கள். (Oracle-Larry Ellison and Bob Minor)

















சிறுசுகளை விளாசிக்கொண்டிருக்கும் இன்றைய ஹீரோ மைஸ்பேசை உருவாக்க தாமஸ் ஆண்டர்சனும் கிறிஸ்டோபர் டிவோல்பும் இணைந்து உழைத்தார்கள். (Myspace-Thomas Anderson and Christopher DeWolfe)



















இளசுகளை இசையால் மயக்கும் ஐபாட் உருவாக்கிய முண்ணணி நிறுவனமான ஆப்பிளை உருவாக்க ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு ஆரம்பகாலத்தில் இன்னொரு ஸ்டீவ் துணையாய் உடனிருந்தார். (Apple-Steve Jobs and Steve Wozniak)





























ஏன்? வன்பொருள் வித்துவான் கார்டன் மூர்-க்கு கூட இண்டெலை நிறுவ நண்பன் ராபட் நோய்ஸ்-ன் உதவி தேவையாய் இருந்தது. (Intel-Gordon Moore and Robert Noyce)



Single Founder கம்பெனிகளை விட இது மாதிரி Co-Founder சகிதம் வந்து கலக்கிய கம்பெனிகளே அதிகம் போல் தெரிகின்றது.



தனியே, தன்னம் தனியே சாதிப்பதை விட இருவராய் அல்லது சிறு குழுவாய் அதிகம் சாதிக்கலாம் என இவர்கள் எடுத்துக்கூறுகின்றார்கள். நம்மூரில் கூட இன்போஸிஸ், சன் டிவி நெட்வொர்க் போன்ற பல வளர்ந்த நிறுவனங்களின் வரலாற்றை திருப்பி பார்த்தால் கடுமையாய் உழைத்த இருவர் அல்லது ஒரு குழு கண்ணில் அகப்படும்.



அகத்தில் அசாத்தியமானதொரு கருவோடு, கொஞ்சம் கனவுகள், பெரிய தரிசனங்களுடன் அலைகின்றீர்களா?. நல்லதொரு தோழனைத் தேடுங்கள். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என சும்மாவா சொன்னார்கள்?

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

நீங்கள் ஒருவேளை பாலிவுட் ரசிகர்களானால் அல்லது ஹோலிவுட் ரசிகர்களானால் இந்த தளம் உங்களுக்கு உதவலாம்.புதுப் புது பாலிவுட்,ஹாலிவுட் திரைப்படங்களின் ரேப்பிட் சேர் சுட்டிகள் அல்லது பிற கோப்பு கிடங்குகளின் சுட்டிகளை இனி தேடவேண்டியதில்லை.இங்கே அப்பப்போ சூடாக சுட்டிகளை தேடி சுட்டு போடுகிறார்கள்.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கொடுக்கப்பட்ட சுட்டியை சொடுக்கி கோப்புகளை இறக்கம் செய்ய வேண்டியது தான்.கூடவே மென்பொருள்கள்,இந்தி இசை ஆல்பங்கள் மற்றும் கேம்ஸ் மென்பொருள்களும் அடக்கம்
உதாரணமாக இப்போது இறக்கத்துக்கு இருக்கும் சில கோப்புகள் கீழே.

Kabul Express
Apna sapna money money
Renaissance
AutoCad 2007
Dhoom2
Cyber Sunday
Umrao Jaan
Vivah
JaaneMann
Charlies Angels
The Fast and the Furiousn Tokyo Drift
The Black Dahlia
Microsoft Office 2007 Enterprise Edition
FIFA 2007
Mistress of Spices etc

போன்றவை இறக்கத்துக்கு உள்ளன.You got to register first.

ஆமாம்.எல்லாமே சுட்டவை.DVD Rip.பதிப்புரிமை படி சட்டவிரோதமே
இது நானா
இது நானா
எனை நானே ரசித்தேனா
மெய் தானா மெய் தானா
நான் மீண்டும் பிறந்தேனா
கண்ணாளன் வந்த நேரம்
நான் காற்றாய் கரைந்தேனா
என் வாழ்வில் நிறம் இல்லை
அவன் வண்ணம் சேர்த்தானா
ஓ ஓ
இது நான்னா
இது நான்னா
எனை நானே ரசித்தேனா
ஆ ஆ
ஆ ஆ
ஆ ஆ

என் வானில் மேற்க்கே போன மேகம் ஒன்று
மீண்டும் வந்து சேர்ந்ததே
என் காட்டில் வெல்லம் போட்ட வெள்ளம் வந்து
வேரைத் தேடி பாய்ந்ததே
பார்வையில் இனிமேல் பூ பூப்பேன்
ஸ்பரிசத்தினாலே காய் காய்ப்பேன்
என் ஆசை கனவே
எனை ஆளும் திமிரே
உன் கையின் நீளம் காலின் நொறுங்கி
மார்பின் ரோமம் மன்மத மச்சம்
தனி தனியே ரசிக்க விடு
தவணையிலே துடிக்க விடு
இது நானா
இது நானா
எனை நானே ரசித்தேனா

வாடா வா
ஒற்றை கட்டில்
ஒற்றை தலையணை
ஒட்டி கொண்டு சேருவேன்
வாடா வா
கற்றை கூந்தலை உந்தன் இடுப்பில்
கட்டிக் கொண்டு தூங்குவேன்
சமைத்ததை தருவேன் ருசி விளங்க
சமைந்ததை தருவேன் பசி அடங்க
என் தென்னங் குளமே
தினம் துள்ளும் அணிலே
என் தென்னங் குளமே
தினம் துள்ளும் அணிலே

கட்டில் மேலே ரெட்டை வாலே
உடல் வளர்த்தேன் எனக்காக
உயிர் வளர்த்தேன் உனக்காக

இது நானா
இது நானா
எனை நானே ரசித்தேனா
மெய்தானா மெய்தானா
நான் மீண்டும் பிறந்தேனா
கண்ணாளன் வந்த நேரம்
நான் காற்றாய் கரைந்தேனா
என் வாழ்வில் நிறம் இல்லை
அவன் வண்ணம் சேர்த்தானா
ஓ ஓ
இது நானா
இது நானா
எனை நானே ரசித்தேனா

TAMIL

NYtimes மூலம் சுட சுட நியூயார்க் டைம்ஸ் படிக்க முடிகின்றது.
Stitcher மூலம் பிபிசி முதலான ரேடியோ பாட்காஸ்ட்களை எப்போவேண்டுமானாலும் கேட்க முடிகின்றது.
Coolris மூலம் இணையத்திலிருக்கும் படங்களை யூடியூப் வீடியோக்களை 3டி எபக்டில் திகட்ட திகட்ட முழு ஸ்கிரீனில் பார்க்கமுடிகின்றது.
NetNewswire மூலம் பல செய்தி ஓடைகளை(RSS) படிக்க உதவுகின்றது.
Dictionaire மூலம் தெரியாத பல வார்த்தைகளுக்கு அர்த்தம் காண முடிகின்றது.
Units மூலம் தெரியாத பல அளவீடுகளை தெரிந்த அளவுகளாக மாற்ற முடிகின்றது.
Wikipanion மூலம் விக்கிபீடியாவை எளிதாக படிக்க முடிகின்றது.
Airsharing மூலம் கணிணியிலிருக்கும் கோப்புகளை ஐபோனுக்கு கொண்டுவர முடிகின்றது.
Box.net மூலம் இணையத்தில் சேமித்து வைத்திருக்கும் கோப்புகளை பார்வையிட முடிகின்றது.
Fring மூலம் இலவச அல்லது குறைந்த விலையில் சர்வதேச போன்கால்கள் செய்ய முடிகின்றது.
Flashlight மூலம் இருட்டில் வெளிச்சம் கிடைக்கின்றது.
Voicenotes மூலம் நம் குரலை எளிதாக பதிவு செய்ய முடிகின்றது.
Google mobile app-பிடம் சொன்னாலே போதும்.அது தேடி தருகின்றது.
Google earth ஒரு அமேசிங் எக்ஸ்பீரியன்ஸ்.Google Map-ல் இப்போது Streetview-ம் தெரிகின்றது.
புதிதாக வந்திருக்கும் The weather Channel தி அல்டிமேட்.
NYtimes மூலம் சுட சுட நியூயார்க் டைம்ஸ் படிக்க முடிகின்றது.
Stitcher மூலம் பிபிசி முதலான ரேடியோ பாட்காஸ்ட்களை எப்போவேண்டுமானாலும் கேட்க முடிகின்றது.
Coolris மூலம் இணையத்திலிருக்கும் படங்களை யூடியூப் வீடியோக்களை 3டி எபக்டில் திகட்ட திகட்ட முழு ஸ்கிரீனில் பார்க்கமுடிகின்றது.
NetNewswire மூலம் பல செய்தி ஓடைகளை(RSS) படிக்க உதவுகின்றது.
Dictionaire மூலம் தெரியாத பல வார்த்தைகளுக்கு அர்த்தம் காண முடிகின்றது.
Units மூலம் தெரியாத பல அளவீடுகளை தெரிந்த அளவுகளாக மாற்ற முடிகின்றது.
Wikipanion மூலம் விக்கிபீடியாவை எளிதாக படிக்க முடிகின்றது.
Airsharing மூலம் கணிணியிலிருக்கும் கோப்புகளை ஐபோனுக்கு கொண்டுவர முடிகின்றது.
Box.net மூலம் இணையத்தில் சேமித்து வைத்திருக்கும் கோப்புகளை பார்வையிட முடிகின்றது.
Fring மூலம் இலவச அல்லது குறைந்த விலையில் சர்வதேச போன்கால்கள் செய்ய முடிகின்றது.
Flashlight மூலம் இருட்டில் வெளிச்சம் கிடைக்கின்றது.
Voicenotes மூலம் நம் குரலை எளிதாக பதிவு செய்ய முடிகின்றது.
Google mobile app-பிடம் சொன்னாலே போதும்.அது தேடி தருகின்றது.
Google earth ஒரு அமேசிங் எக்ஸ்பீரியன்ஸ்.Google Map-ல் இப்போது Streetview-ம் தெரிகின்றது.
புதிதாக வந்திருக்கும் The weather Channel தி அல்டிமேட்.
உலகின் மிக பழமையான நகரத்தின் பெயர் "ஊர்" (Ur) என்கின்றார்கள். இது பற்றிய குறிப்பு பைபிளிலும் உள்ளது. அட இது நம்ம தமிழ் வார்த்தையல்லவா?.

சிங்கம்+ஊர்=சிங்கப்பூர் ஆச்சுதாம். Singam+Ur=Singapore. உலகில் ஒரு நாட்டின் பெயரே தமிழில் இருக்கின்றது நமக்கு பெருமையல்லவா?.

யானையையே கொல்லும் பாம்பு - அதை ஆனை கொன்றான் எனலாம்- அது ஆனைகொண்டான் ஆகி- அப்படியே Anaconda ஆனது- திரைப்படமும் வந்தது.

அரிசி (Arici) Rice ஆனது
கட்டுமரக்காரன் Catamaran ஆனது
காசு Cash என ஆனது
சுருட்டு Cheroot ஆனது
குருந்தம் அல்லது குருவிந்தம் Corundum ஆனது
கயிறு Coir ஆனது
கறி Curry ஆனது
கிடங்கு Godown ஆனது
பச்சை இலை Perfume Patchouli ஆனது

முன்பு மயில்-ஐ தோகை என அழைத்தார்களாம்- இதில் தோகை எனும் வார்த்தை Tuki ஆகி பின் மயில் போல் சிறகு விரிக்கும் வான்கோழியை பார்த்து ஏமாந்து Turkey என்றார்கள்.

அது போல்
இஞ்சிவேரிலிருந்து Ginger-ரும் ,
பப்பாளியிலிருந்து Papaaya-வும்,
சக்கவிலிருந்து Jack-கும்,
தேக்குவிலிருந்து Teak-கும்,
கொய்யாவிலிருந்து Guava-வும்,
வெற்றிலயிலிருந்து Betel-லும் வந்தது.

அது போல
Vettri (வெற்றி) தான் Victory ஆனதோ?
Parisu (பரிசு) தான் Prize ஆனதோ?
Idhara (இதர) தான் Other ஆனதோ?
Sarkkarai (சர்க்கரை) தான் Sugar ஆனதோ?
Pathukavar (பாதுகாவலர்) தான் Father ஆனதோ?
Tharai (தரை) தான் Terra ஆனதோ?
Akkam (அக்கம்) தான் Aqua ஆனதோ?
Tholai (தொலை) தான் Tele ஆனதோ?

"காசுக்கு எட்டு" எனும் தமிழ் வார்த்தை Cashew nut ஆன கதையை இங்கே படியுங்கள்.
அதே கொல்லாங்கொட்டை கப்பலண்டி ஆன சுவாரஸ்ய கதையை இங்கே படியுங்கள்.

இப்படி தமிழின் மகத்துவம் சொல்லித்தீராதவை.
என்ன, இலங்கையிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் வரும் செய்திகள் தான் இப்போது நம்மை கவலையுற வைக்கின்றன.

புதன், 4 ஆகஸ்ட், 2010

1.ரன்னிங் ரேஸ்ல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் பிரைஸ் கைக்குத்தான் கிடைக்கும்.

2.தண்ணீரை தண்ணினு சொல்லலாம் ஆனா பன்னீர பன்னினு சொல்லமுடியாது.

3.உலகம் தெரியாம வளர்ரவன் வெகுளி.கிரிக்கெட் தெரியாம விளையாடரவன் கங்குலி

4.என்னத்தான் மீனுக்கு நீந்த தெரிஞ்சாலும் அதால மீன் குழம்புல நீந்த முடியாது.

5.குவாட்டர் அடிச்சிட்டு குப்புர படுக்கலாம் ஆனா குப்புர படுத்துட்டு குவாட்டர் அடிக்கமுடியாது

6.வாழ்க்கை தத்துவம்-நீ எவ்ளோ பெரிய டான்சர்ரா இருந்தாலும் உன் சாவுக்கு உன்னால ஆட முடியுமா?

7.பணம் வரும் போகும்
பதவி வரும் போகும்
கவலை வரும் போகும்
காதல் வரும் போகும்
ஆனா எயிட்ஸ் வரும் போகாது.

8.பாய்சன் 10 நாள் ஆனா பாயாசம் ஆகாது.ஆனா பாயாசம் 10 நாள் ஆனா பாய்சன் ஆயிடும்.

9.பஸ்ல நீ ஏறினாலும் பஸ் உன் மேல ஏறினாலும் டிக்கட் வாங்கப் போறது நீதான்.

10.சைக்கிள் கேரியரில் டிபன் வைக்கலாம்.ஆனா டிபன் கேரியரில் சைக்கிள் வைக்க முடியாது

11.டிக்கெட் வாங்கிட்டு உள்ள போறது சினிமா தியேட்டர்.உள்ளே போய்ட்டு டிக்கட் வாங்கறது ஆப்பரேசன் தியேட்டர்

12.வாயால நாய்-னு சொல்ல முடியும் ஆனா நாயால வாய்னு சொல்லமுடியாது.
1.காலண்டர் ஏன் ரொம்ப பந்தா பண்ணுது?
Because it has a lot of dates!

2.கம்ப்யூட்டர் ஏன் தும்மிட்டே இருக்கு?
virus காய்ச்சலாம்!

3.Why did the parents put their son in the fridge?
Because they didn't want to spoil him!

4.Who built the ark?
I have Noah idea!

5.Which is faster: heat or cold?
Heat, becase you can always catch a cold!

6.What do you call a row of dolls?
A Barbieque!

7.What is the most dangerous city?
Electricity!

8.What is the capital of Washington?
The W!

9.What is full of holes but can still carry water?
A sponge!

10.What starts with T, ends with T, and is full of T?
A teapot!

11.What word is always pronounced wrong?
Wrong.
பிரபல வாகனங்களும் அதன் பிறப்பிடமும்
Alfa Romeo-இத்தாலி
Audi-ஜெர்மனி
Austin-பிரிட்டன்
Benz-ஜெர்மனி
BMW-ஜெர்மனி
Bristol-பிரிட்டன்
Chrysler-அமெரிக்கா
FIAT-இத்தாலி
FORD-அமெரிக்கா
General Motors-அமெரிக்கா
HONDA-ஜப்பான்
Hyundai Motor Company (HMC)& Kia- தென் கொரியா
ISUZU-ஜப்பான்
Jaguar-பிரிட்டன்
Kia- தென் கொரியா
Lambert-அமெரிக்கா
LAND ROVER-பிரிட்டன்
Lexus-ஜப்பான்
Mazda-ஜப்பான்
Mercedes-ஜெர்மனி
Mitsubishi-ஜப்பான்
Opel-ஜெர்மனி
Peugeot-பிரான்ஸ்
Porsche-ஜெர்மனி
Renault-பிரான்ஸ்
Standard-பிரிட்டன்
Subaru-ஜப்பான்
Suzuki-ஜப்பான்
Toyota -ஜப்பான்
Volkswagen-ஜெர்மனி
Volvo-ஸ்வீடன்
எல்லா ஆணும் ஒரு நாள் கல்யாணம் பண்ணியே ஆகவேண்டும்.பின்னே என்ன சிலர் மட்டும் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாய் இருக்கலாமா?


*பிரம்மாச்சாரிகள் கட்டாயம் அதிகம் வரிகட்ட வேண்டும்.பின்னே அநேகர் நொந்து போய் இருக்கும் போது இவர்கள் மட்டும் சந்தோஷமாய் இருப்பது நியாயமல்ல-ஆஸ்கார் வைல்ட் (மனுஷன் அனுபவபட்டிருக்கார்)

*தீவிரவாதம் பற்றி நான் கவலைப்படுவதில்லை.எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடமாகிறது-ஸாம் கினிசன்

*உங்கள் மனைவியின் பிறந்த நாள் நினைவுக்கே வருவதில்லையா?.அதை நினைவில் வைக்க ஒரு எளிய வழியுள்ளது.ஓரு முறை மறந்து பாருங்கள். :)

*திருமணமானவன் ஆயுள் அதிகம் என்பதெல்லாம் உண்மை அல்ல.ஆயுள் அதிகம் போல் தோன்றுகிறது.அவ்வளவுதான்.

*ஒரு ஆண் தனியாய் இருக்கும் வரை அவன் முழுமை அடையாதவன்.திருமணம் ஆனவுடன் சகலமும் முடிந்துபோய்விடுகிறது.

*பணத்துக்காக கல்யாணம் பண்ணாதே.இப்போதெல்லாம் சுலபத்தில் கடன் (அட்டை)கிடைக்கிறது.

*கார் கதவை மனைவிக்கு ,கணவன் திறந்து விடுகிறான் என்றால் ஒன்றை புரிந்து கொள்.ஓன்றில் கார் புதுசு.இல்லை மனைவி புதுசு.

*காதலுக்கு கண்ணில்லை.கல்யாணம் கண்ணை திறந்து விடுகிறது.

*பெண்துணை இல்லாத ஆண்,சைக்கிள் இல்லாத மீன் போல-யூ2

*இரண்டு விதத்தில் பெண்ணைவிட ஆண் கொடுத்து வைத்தவன்.தாமதமாக திருமணம் செய்கிறான்,சீக்கிரமாய் செத்துப்போகிறான் -ஏச்.எல்.மென்கென்

*பிரம்மச்சாரிகளுக்கு பெண்களைப் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கிறது.இல்லை என்றால் அவர்களும் திருமணம் செய்திருப்பார்களே-ஏச்.எல்.மென்கென்

*நானும் எனது மனைவியும் இருபதுவருடங்கள் சந்தோசமாய் வாழ்ந்தோம்.அப்புறமாய் இருவரும் சந்தித்தோம்.- ரொட்னெய் டய்ன்செர்பீல்ட்

*ஒரு நல்ல மனைவி தான் தவறு செய்யும் போது தன் கணவனை மன்னித்து விடுகிறாள்.-மில்டொன் பெர்லெ

*மகிழ்வான மணவாழ்வின் ரகசியம்,இன்னும் ரகசியமாகவேயுள்ளது- கென்ன்ய் யங்மன்

*உன்மனைவியை எவனாவது திருடினால் விட்டுவிடு.அப்படி தான் சரியாய் பழிவாங்கவேண்டும்.

*கடந்த இருவருடமாக என் மனைவியிடம் நான் பேசவில்லை.அவளை ஏன் நான் தடுக்க வேண்டும்.

*என் பெண்நண்பி என்னை கவர்ச்சியாய் இருக்க சொன்னாள்.இன்னும் இரு பெண்நண்பிகளை சேர்த்துக்கொண்டேன்

*கிரெடிட் அட்டை காணாமல் போன என் நண்பன் போலீஸில் புகார் செய்யவேயில்லை.மனைவியைவிட குறைவாய் தான் அத்திருடன் செலவளிக்கிறானாம்

*கல்யாணம் என்னும் கல்லூரியில் ஆண் தன் Bachelors பட்டத்தை இழக்கிறான்.பெண் தன் Masters பட்டத்தை பெறுகிறாள்.
முதலாம் ஆண்டு ஆண் பேசுகிறான் பெண் கேட்கிறாள்
இரண்டாம் ஆண்டு பெண் பேசுகிறாள் ஆண் கேட்கிறான்
மூன்றாம் ஆண்டு இருவரும் பேசுகிறார்கள் பக்கத்து வீட்டார் கேட்கின்றார்கள்.

*"எல்லாமேஇருந்தது.கைநிறைய பணம்,தேவதை போல ஒரு பெண்,அழகிய வீடு..ஊப்ஸ்..எல்லாமே ஒரே நாளில் போய்விட்டது."
"என்னாச்சு"
"என் மனைவி அதை கண்டுபிடித்துவிடடாள்"

*ஒருவன் சொன்னான் "என் மனைவி ஒரு தேவதை."
இன்னொருவன் சொன்னான் "நீ அதிஷ்டகாரன்.என் மனைவி இன்னும் உயிரோடு இருக்கிறாள்"
கடி வாங்கலையோ கடி
1.இரட்டை குழந்தைகளில் ஒருத்தன் பெயர் பீட்டர் என்றால் இன்னொருத்தன் பெயர் இன்னா?
Repeater

2.கடலை பாத்து tide என்னா சொல்லி இருக்கும்?
Long time no sea

3.கணக்கு புத்தகம் ஏன் பெஜாரா இருக்கு?
It has got lot of problems to solve

4.முருகனால நெட் ப்ரொஸ் பண்ணமுடில ஏன்?
Because mouse is with pillaiyaar

5.காக்கை ஏன் கருப்பா இருக்கு?
Because its mummy and dady is black