இந்த பதிவில் இருக்கும் கேள்விகளுக்கு என்னை தான் பதில் எழுத சொன்னாரு! எனக்கு ஆணி அதிகமா இருந்ததால என்னோட கேர்ள்பிரண்டு பதிலை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்! பார்த்து கலாய்ங்க மக்களே!
****************
அவசமாக டாய்லட் போக வேண்டிய தருணத்தில் கழிவறை கிடைக்காமல் திண்டாடியிருக்கிறீர்களா?
ஆமாம், ஒருமுறை என்னுடய கல்லூரியில் கேரளா சுற்றுலா அழைத்து சென்றனர். உணவு விடுதியில் நிறுத்திய போது நாங்க அனைவரும் ஓடியது அங்கே தான்!, அங்கிருந்ததோ இரண்டே அறை, ஒன்று ஜென்ஸ், மற்றொன்று லேடிஸ், நாங்க இருந்தது 20 பேர், வேற வழியில்லாம ஜென்ஸ் ரூமையும் நாங்களே ஆக்ரமிச்சிகிட்டோம்!, பசங்க தான் பாவம் முளிச்சிகிட்டே நின்னானுங்க!
யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள்?
நம்ம யாரை பார்த்து பொறாமை படுறது.நம்மல பாத்து தான் மத்தவங்க பொறாமை படனும்.கொஞ்சம் மொக்கையா இருக்குல.
எதிர்பாராமல் கிடைத்த கிளுகிளு அனுபவம் ஏதாவது?
ம்ம்ம்ம்.நெறய இருக்கு.நானும் என்னோட பிரண்டு கொடைகானல் போனோம்.நாங்க போனப்ப சீசன் டைம்.நல்ல கிளுகிளுன்னு குளிருச்சு.அத என்னால மறக்க முடியாது.அடுத்து முணாறு போனோம்.அங்க பார்த்தால் இன்னும் கிளுகிளுனு குளிருசு.இந்த மாதிரி நெறய கைவசம் இருக்கு.அடுத்து ஊட்டி போனோம்.. ஐயோ அடிக்க வர வேண்டாம்..(குளுகுளுன்னு தான் குளிரனும்னு சட்டமா என்ன?)
நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?
என்னோட முஞ்சியில எப்பவும் அசடு வழியும்.அத வேற ஒரு சம்பவமா சொல்லன்னுமாகும்.
இன்றளவும் உறுத்திக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு ஏதாவது இருக்கிறதா?
ஆமாம்.ஒன்னு இருக்கு.என்னோட காதலன் கிட்ட நான் வேண்டும் என்று சண்டை போட்டேன்(காரணம் இல்லாமல்).சண்டை போட்டு பிரிந்தோம்.அது தான் எனக்கு குற்ற உணர்வு உள்ள சம்பவம்.(தப்பிச்சிகிட்டானோ)
சினிமாவுக்கு பிளாக்கில் டிக்கட் வாங்கிச் சென்றிருக்கிறீர்களா?
காலேஜ் கட்டடிச்சிட்டு சினிமாவுக்கு போலாம்னு கிளம்ப லேட்டாயி போய் நின்னா பயங்கர கூட்டம்! ஒரு ஃப்ரெண்டு பேச்சை கேட்டு ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி உள்ளே போனபிறகு சொல்றா, ப்ளாக் டிக்கெட் வாங்கினா போலீஸ் பிடிக்கும்னு, அப்புறம் லைட் எரிஞ்சாலே பயம் வந்துசுருச்சு, யாருமே ஒழுங்கா படம் பார்க்கல! ப்ளாக்குனாலே அதிலிருந்து அலர்ஜி! அதுவும் வால்பையன் ப்ளாக்குனா செம அலர்ஜி!
நீங்கள் மீறியதிலேயே பெரிய சட்ட மீறல் எது?
என்ன தான் பிராக்டிகல் எக்ஸாம்னாலும் நமக்கு மொள்ளமாரித்தனம் கை வந்த கலை ஆச்சே, எப்படி தான் சிஸ்டத்துல ப்ரோக்ராமை அழிச்சாலும் நாம எப்புடியும் பாத்து தான் எழுத போறோம்.முக்கியமா எவ்ளோ தான் படிச்சுட்டு போனாலும் டீச்சர் முகத்த ஒரு தடவ பார்த்தா போதும்.எல்லா ப்ரோக்ராமும் மறந்து போயிரும்.நான் பரீட்சைல பிட் அடிச்சது தான் பெரிய சட்ட மீறல்.
அனானி கமெண்ட் போட்டிருக்கிறீர்களா? ஆமெனில் யாருக்கு? எப்போது?
கமெண்ட் போடுறது வால்பையன் ப்ளாக்குல மட்டும் தான், ஒரு தடவை ஸ்மார்ட்ங்கிறவர் பதிவுல கமெண்ட் போட்டேன்! அனானி கமெண்டுனா எனக்கு என்னான்னு தெரியல
அன்றைய சரோஜாதேவி இன்றைய மஜா மல்லிகா யாருடைய எழுத்து சூப்பர். ஒப்பிடவும்.
அன்பே வா படத்துல சரோஜாதேவி நடிச்சிருக்காங்க தெரியும், ஆனா அவுங்க புத்தகமெல்லாம் எழுதியிருக்காங்கன்னு தெரியாது!, மஜா படத்துல நடிச்சது அசின் தானே மல்லிகா யாரு?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக