Powered By Blogger

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

உலகின் மிக பழமையான நகரத்தின் பெயர் "ஊர்" (Ur) என்கின்றார்கள். இது பற்றிய குறிப்பு பைபிளிலும் உள்ளது. அட இது நம்ம தமிழ் வார்த்தையல்லவா?.

சிங்கம்+ஊர்=சிங்கப்பூர் ஆச்சுதாம். Singam+Ur=Singapore. உலகில் ஒரு நாட்டின் பெயரே தமிழில் இருக்கின்றது நமக்கு பெருமையல்லவா?.

யானையையே கொல்லும் பாம்பு - அதை ஆனை கொன்றான் எனலாம்- அது ஆனைகொண்டான் ஆகி- அப்படியே Anaconda ஆனது- திரைப்படமும் வந்தது.

அரிசி (Arici) Rice ஆனது
கட்டுமரக்காரன் Catamaran ஆனது
காசு Cash என ஆனது
சுருட்டு Cheroot ஆனது
குருந்தம் அல்லது குருவிந்தம் Corundum ஆனது
கயிறு Coir ஆனது
கறி Curry ஆனது
கிடங்கு Godown ஆனது
பச்சை இலை Perfume Patchouli ஆனது

முன்பு மயில்-ஐ தோகை என அழைத்தார்களாம்- இதில் தோகை எனும் வார்த்தை Tuki ஆகி பின் மயில் போல் சிறகு விரிக்கும் வான்கோழியை பார்த்து ஏமாந்து Turkey என்றார்கள்.

அது போல்
இஞ்சிவேரிலிருந்து Ginger-ரும் ,
பப்பாளியிலிருந்து Papaaya-வும்,
சக்கவிலிருந்து Jack-கும்,
தேக்குவிலிருந்து Teak-கும்,
கொய்யாவிலிருந்து Guava-வும்,
வெற்றிலயிலிருந்து Betel-லும் வந்தது.

அது போல
Vettri (வெற்றி) தான் Victory ஆனதோ?
Parisu (பரிசு) தான் Prize ஆனதோ?
Idhara (இதர) தான் Other ஆனதோ?
Sarkkarai (சர்க்கரை) தான் Sugar ஆனதோ?
Pathukavar (பாதுகாவலர்) தான் Father ஆனதோ?
Tharai (தரை) தான் Terra ஆனதோ?
Akkam (அக்கம்) தான் Aqua ஆனதோ?
Tholai (தொலை) தான் Tele ஆனதோ?

"காசுக்கு எட்டு" எனும் தமிழ் வார்த்தை Cashew nut ஆன கதையை இங்கே படியுங்கள்.
அதே கொல்லாங்கொட்டை கப்பலண்டி ஆன சுவாரஸ்ய கதையை இங்கே படியுங்கள்.

இப்படி தமிழின் மகத்துவம் சொல்லித்தீராதவை.
என்ன, இலங்கையிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் வரும் செய்திகள் தான் இப்போது நம்மை கவலையுற வைக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக