Powered By Blogger

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

குறைந்த தண்ணீரில் சரக்கடித்தல்






நண்பர்களே, சரக்கடிக்கும் பொழுது சிறிது தண்ணீர் மட்டுமே வைத்துகொண்டு, அதனுடன் சில சிப்சையோ, முருக்கையோ கடித்து கொண்டு வாந்தி எடுக்காமல் சரக்கடிப்பது எவ்வளவு கடினம் தெரியுமா ?



ஒரு புகழ் பெற்ற குடிகாரர் ஒரு பாருக்கு சென்றார். அங்கு அவர் குடிக்க அழைக்கப் படவில்லை. வேடிக்கை பார்க்க தான் சென்றிருந்தார். பார் திறந்த உடன் , அங்கு குழுமியிருந்த குடிகாரர்கள் இவரை அடையாளம் கண்டு, இவரை குடிக்குமாறு வேண்ட, சரக்கை எடுத்து, தாம் எவ்வளவு சரக்கடிக்க வேண்டும் என வினவினார். மக்களோ எவ்வளவு சரக்கு வேண்டுமானாலும் அடியுங்கள் எனக் கூற, குடிகாரரோ, அதிக சரக்கு குடிக்க அழைத்தீர்கள் என்றால் நான் எளிதாகப் குடித்து விடுவேன். ஒரு பிரச்னையுமில்லை. ஆனால் நாலு பெக் மட்டுமே அடிக்கவேண்டுமேனில், அதற்கு நான் ஒரு பீர் முழுவதும் அடித்து , பிறகு தான் சரக்கடிக்க வேண்டும் எனக் கூறினார். காரணம் என்ன வெனில், என்ன சரக்கு வேண்டுமானாலும் அடிக்கலாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அடிக்கலாம் என்றால் அது எளிது. கை வந்த கலை. ஆனால் குறிப்பிட்ட சரக்கை, அதுவும் குறைந்த தண்ணீரோடு அடிக்க வேண்டுமெனில், அது கடினமான செயல்.



ஏனெனில் குறைந்த தண்ணீரில் ஒரு பெக்கினை, ஒரு குவாட்டரை, ஒரு புல்லினை அடிக்க வேண்டுமெனில், அதற்கு அதிகம் பயிற்சி வேண்டும். குறித்த தண்ணீரில் , அடிக்க வேண்டியவைகளை எல்லாம் அடிக்க வேண்டும். போதை ஏற அடிக்க வேண்டும். எவ்வளவு குடித்தாலும் வாந்தி வராமல் இருக்கணும். அது அனுபவத்தில் தான் வரும். திட்டமிட்டால் தான் வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக