Powered By Blogger

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

பொங்கி வரும் காவேரி என


பொங்கட்டும் புது வாழ்வு

சீறிவரும் காளைபோல

சிரிக்கட்டும் புது வருடம்



வருகின்ற மகிழ்ச்சிகளை

மூளையில் வைப்போம்

வந்த துன்பங்களை

மூலையில் வைப்போம்



வீசுகின்ற தென்றலுக்கு

ஜன்னல் திறப்போம்

வீசிய சூறாவளிக்கு

வாதில் அடைப்போம்



வருகின்ற காலம்

வசந்த காலம் ஆகட்டும்

வீசுகின்ற காற்றெல்லாம்

தென்றல் காற்றாகட்டும்



வருகின்ற மழையால்

மரங்களெல்லாம் சிரிக்கட்டும்

வருடுகின்ற மகிழ்ச்சியால்

மனமெல்லாம் மகிழட்டும்



வருகின்ற புத்தாண்டு

புத்துணர்ச்சி கொடுக்கட்டும்

காழ்ப்புணர்ச்சி இல்லாமல்

விழிப்புணர்ச்சி உண்டாகட்டும்



கையில் காசு வைத்திருப்போர்

இல்லாதவர் பையில் வையுங்கள்

பையில் வைத்திருப்போர்

இல்லாதவர் கையில் கொடுங்கள்



கட்டுகின்ற கட்டிடமெல்லாம்

கல்விமையம் ஆகட்டும்

தீட்டுகின்ற திட்டமெல்லாம்

திறன்பட செயல்படட்டும்



சாதி மதம் இல்லையென

சான்றிதல் கொடுப்போம்

சமத்துவம் ஒன்றேயென

தம்பட்டம் அடிப்போம்



வறுமையே இல்லை என

வாழ்த்திடலாம் வாருங்கள்

திறமை இருக்கும் இடத்தை

போற்றிடலாம் வாருங்கள்



அநாதை இல்லங்களை

அரவணைக்க வாருங்கள்

ஊனமுற்ற குழந்தைகளுக்கு

ஊக்கம் கொடுக்க வாருங்கள்



அன்பிருக்கும் இடத்தை

ஆதரிப்போம் வாருங்கள்

குணம் இருக்கும் இடத்தை

கும்பிடலாம் வாருங்கள்



முதியோர் இல்லங்களை

மூட வைப்போம்

பெற்றோரை விரட்டியடித்த

மூடர்களை முதுகில் அடிப்போம்



பெற்ற தாய்க்கு

பெருமை சேர்ப்போம்

நற்ற மரக்கன்றை

நாளும் வளர்ப்போம்



கல்வி கற்றவரை

அரசியலுக்குத் தேர்ந்தெடுப்போம்

குடும்ப அரசியலுக்குக்

கொல்லிப் போடுவோம்



கலை வளர்க்கும்

கலைஞர்களை ஊக்குவிப்போம்

கொலை செய்யும் வெறியர்களை

கூண்டோடு அழிப்போம்



வேலையில்லாத திண்டாட்டத்தை

வேரறுக்க செய்திடுவோம்

பட்டினிஇல்லாத பாரதத்தை

பரந்து விரியச்செய்வோம்



நோயுற்றுக் கிடப்போரை

நோகாமல் கவனித்திடுவோம்

பாய் எனக் கிடப்போரை

பரம்பால் புடைத்திடுவோம்



இல்லம் இல்லாதவர்க்கு

இருக்க இடம் கொடுப்போம்

கல்வி கல்லாதவர்க்கு

கல்வி கற்றுக்கொடுப்போம்



படிக்காதவர்களே இல்லை என

பறை சாற்றிடுவோம்

இல்லாதவர்களே இல்லை என

இதயம் திறந்து சொல்லிடுவோம்



நிழல் தரும் மரங்களை

நெடுகெங்கிலும் வைப்போம்

நிஜம் சொல்லும் மனிதர்களை

நெஞ்சத்தில் வைப்போம்



சுவை தரும் கனியை

தினம் தோறும் உண்போம்

சுகம் தரும் பாடலை

தினம்தோறும் கேட்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக