Powered By Blogger

வியாழன், 2 டிசம்பர், 2010

நம்புசொத்தாம் ங்கள் இவ்வளவுதான் கலைஞரின்




முதலமைச்சர் தனது சொத்துக்கணக்கை வெளியிட்டார். கோபாலபுரம் வீட்டைத் தவிர எந்த சொத்தும் வாங்கவில்லை என்று அவர் கூறி உள்ளார்.







இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,





’’தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அம்மையார் ஜெயலலிதா தொடங்கி, அந்தக் கட்சியிலே உள்ள அடிமட்டத் தொண்டர்கள் வரையிலும் - ஏன், தமிழகத்திலே உள்ள வேறுசில கட்சிகளின் நண்பர்கள் ஒரு சிலரும் - என்னைப் பற்றி குறிப்பிடும் போது - நான் ஏதோ "சல்லிக்காசு'' கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும் - இன்றைக்கு ஆசியாவிலேயே முதலாவது பணக்காரனாக இருப்பதாகவும் - என் பெயரில் ஏராளமான சொத்துக்களையும், எஸ்டேட்டுகளையும் வாங்கிக் குவித்திருப்பதைப் போலவும் பேசி வருகிறார்கள், எழுதி வருகிறார்கள்.





என்னைப் பொறுத்தவரையில் - என்னுடைய சொத்துகள் என்ன என்பதைப் பற்றி குறை கூறுபவர்களுக்கும் - அதை நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு விளக்கம் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை என்று கருதுகிறேன்.



என்னதான் அவர்கள் என் குடும்பத்தைப் பற்றி குறைவாக எழுதினாலும், நான் சிசு பருவத்திலே இருந்த போதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவிற்கும் - உயர்நிலைப் பள்ளியில் படிக்கவே திருவாரூரில் கொண்டு போய் சேர்க்கக் கூடிய அளவிற்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம் தான் என்னுடையது.





மந்திரிகுமாரி நாடகம்





எனக்கு 18 வயதாகும் போது "முரசொலி'' வாரப்பத்திரிகையைத் தொடங்கி விட்டேன். அப்போதே நாடகங்களை எழுதுகின்ற முயற்சியிலும் ஈடுபட்டேன். திராவிடர் கழகப் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்துகொண்டேன். 1949-ம் ஆண்டு சேலம் மாடர்ன் தியேட்டர்சில் எழுத்தாளராக பணியிலே அமர்ந்தேன்.



அந்தக் காலத்திலேயே அதற்காக மாத ஊதியமாக 500 ரூபாய் பெற்றேன். அதே ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதியன்று ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையிலே தி.மு.கழகம் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டபோது, அந்தக் கூட்டத்திலே கலந்துகொண்டேன்.





அந்தக் கூட்டத்திற்கு வந்த போது விருதுநகர் நாடார் லாட்ஜில் தான் தங்கினேன். என்னுடைய "மந்திரி குமாரி'' நாடகம் சேலம் மாடர்ன் தியேட்டர்சாரால் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது எங்கள் குடும்ப வாழ்க்கை சேலத்தில் தொடங்கியது. அப்போது சேலம் வந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், என்னைச் சந்தித்து அவருடைய "மணமகள்'' திரைப்படத்திற்கு நான் தான் திரைக்கதை வசனம் எழுத வேண்டு மென்று கேட்டு ஒப்புதல் அளித்தேன். அந்தக் காலத்திலேயே அதற்காக 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாகப் பெற்றேன்.





கலைவாணர் பந்தயம்





அதுபோலவே "இருவர் உள்ளம்'' திரைப்படத்திற்காக உரையாடலை நான் எழுதிய போது, அந்தப் படம் நூறு நாளைத் தாண்டி ஓடிய காரணத்தால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர், அருமை நண்பர் எல்.வி.பிரசாத் என் இல்லத்திற்கே வந்து முதலில் கொடுத்த பத்தாயிரம் ரூபாயைத் தவிர்த்து, மேலும் பத்தாயிரம் ரூபாயை என்னிடம் அளித்தார்.





நான் அந்தத் தொகையைக் கொண்டு என்னுடைய சொந்த ஊரான திருக்குவளையில் என் பெற்றோர் பெயரால் ஒரு தாய் சேய் நல விடுதியினைக் கட்டி, அதை அன்றைய முதல்-அமைச்சர் பெரியவர் பக்தவத்சலனாரை அழைத்துச் சென்று 12-11-1964-ல் திறந்து வைத்தேன். அண்ணாவால் அடிக்கல் நாட்டப்பட்ட அந்தக் கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு நாவலர் தலைமை தாங்கினார்.





அப்போது நான் எதிர்க்கட்சியிலே இருந்தபோதிலும், முதல்-அமைச்சரை அழைத்துச்சென்று அந்த நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்தினேன்.





அந்தக் கால கட்டத்தில் சென்னைக்கே நான் குடிபெயர்ந்து தியாகராயநகரில் ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தினேன். அப்போது ஒரு நாள் கலைவாணர் என்னிடம் ஒரு பந்தயம் கட்டி, அதிலே ரூ.5 ஆயிரம் எனக்கு லாபம் கிடைத்தது.



அது கண்டு வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்த கலைவாணர் அதற்குமேல் தேவையான பணத்தைத் தானே போட்டு எனக்கு ஒரு கார் வாங்கித் தருவதாகச் சொல்லி விட்டுச் சென்றார்.



மறுநாளே ஒரு புதிய கார் என் வீட்டிற்கு வந்தது. அதிலே என்னை உட்கார வைத்து, கலைவாணரே ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றார். அந்தக் காரின் எண் கூட எனக்கு நினைவிலே உள்ளது - "வாக்சால்'' -4983.









இவைகளைத் தொடர்ந்து இன்று வரை 75 படங்களுக்கு மேல் நான் திரைக்கதை வசனம் எழுதி ஊதியம் பெற்றுள்ளேன். 1957-ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் நின்று சட்டப் பேரவை உறுப்பினராக ஆனது முதல் இதுவரை தொடர்ந்து பேரவை உறுப்பினராகவோ, மேலவை உறுப்பினராகவோ இருந்து வருகிறேன்.



முரசொலி நாளிதழும் எத்தனையோ ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிழமை இதழ்களாக குங்குமம், முத்தாரம், வண்ணத் திரை போன்றவைகளும், "ரைசிங் சன்'' ஆங்கில இதழும் நான் தொடங்கியவைதான்.





1967 முதல் 1969 வரை பொதுப்பணித்துறை அமைச்சராகவும், அதன் பின்னர் ஐந்து முறை முதல்-அமைச்சராகவும் இருந்திருக்கிறேன். இந்தியாவிலே உள்ள அனைத்து மாநில முதல்-அமைச்சர்களையும் எடுத்துக்கொண்டால் எல்லா முதல்-அமைச்சர்களுடைய வீடுகளையும் விட வசதி குறைவான எளிமையான வீட்டிலேதான் நான் வாழ்ந்து வருகிறேன் என்பதை வெளிநாட்டிலிருந்து வந்த முக்கிய பிரமுகர்களே நேரில் கண்டு வியப்பு தெரிவித்துள்ளனர்.





செய்தியாளர்களைச் சந்திக்கக் கூட இடம் இல்லாத அளவிற்கு அவர்களே மிகுந்த சிரமத்திற்கு ஆளாகக்கூடிய வகையிலே உள்ள வீட்டிலேதான் இன்றளவும் வாழ்ந்து வருகிறேன். ஒவ்வொரு முறை முதல்-அமைச்சராக நான் தேர்ந்தெடுக்கப்படும் போதும் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவியேற்போர் - தம்பி துரைமுருகன் போன்றவர்கள் - அரசு சார்பில் உள்ள வீடுகள் ஒன்றில் நான் தங்க வேண்டுமென்று கேட்டு அழைத்துச் சென்றும் காட்டியிருக்கிறார்கள். எனினும் நான் தங்கி வந்த அதே "ஸ்ட்ரீட் வீடு'' என்பார்களே, அதாவது தெருவில் வரிசையாக உள்ள வீடுகளில் உள்ள ஒரு வீட்டிலேதான் வசித்து வருகிறேன்.





45 ஆயிரம் ரூபாய்க்கு வீடு





இந்த வீடு கூட நான் அமைச்சராக ஆவதற்கு முன்பு 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வீடுதான். அந்த வீட்டிலே ஒரு சில மாற்றங்கள் உதவியாளர்களின் வசதிக்காக செய்யப்பட்டிருக்கலாம். என் பிள்ளைகள் எல்லாம் கூட திருமணம் ஆகும் வரைதான் இந்த வீட்டிலே இருந்தார்கள். அதற்குப் பிறகு இந்த வீட்டிலே இடம் இல்லாமல் அவர்களே சொந்தத்தில் வீடு வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.





என்னிடம் செய்திகளைச் சேகரிக்க வரும் பத்திரிகையாளர்கள் இந்த வீட்டிலே என்னைச் சந்திக்கும் போது எவ்வளவு இன்னலுக்கு நெரிசல் காரணமாக ஆளாகிறார்கள் என்பதை அவர்களே நன்கறிவார்கள். ஆனால் அந்தப் பத்திரிகையாளர்கள் கூட நான் இத்தனை ஆண்டுக் காலம் இத்தனைப் பொறுப்புகளிலே இருந்தும் கூட, இவ்வளவு எளிமையாக இதே வீட்டில் வாழ்கிறேன் என்பதைப் பற்றி அவர்களே அதை உணர்ந்திருந்த நிலையிலும் அதைப் பற்றி எழுதாமல், அதிலேயும் ஒரு சிலர் - என்னைப் பற்றி அவதூறாக நான் பணக்காரன் என்று எதிர்தரப்பினர் விமர்சனம் செய்வதை எழுதும்போது - அவர்கள் கூட அதை நம்புகிறார்களா என்ற வேதனை என் மனதிலே தோன்றாமல் இருப்பதில்லை.





நான் இத்தனை பொறுப்புகளையும் என்னுடைய 87 வயதிற்குள் பார்த்திருக்கிறேன் என்ற போதிலும் சென்னையில் உள்ள இந்த ஒரு வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்டுகளையோ விலைக்கு வாங்கியதும் இல்லை. அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதும் இல்லை. குறைந்த விலைக்கு பெற்றுக்கொண்டதும் இல்லை. ஆனால் என்னை ஆசியாவிலேயே பெரிய கோடீஸ்வரன் என்றெல்லாம் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.





ரூ.10 கோடி கிடைத்தது





முரசொலி மாறன் மறைவுக்கு பின்னர் சன் தொலைக்காட்சி நிறுவனத்தை தனியாக நடந்த விரும்பி கேட்டதால் நானும் அதற்கு உடனடியாக ஒப்புகொண்டேன். அப்படி பிரிந்து சென்ற நேரத்தில் 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம், "சன்'' தொலைக் காட்சி நிறுவனத்தின் சார்பில் எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்தார்கள். அந்தத் தொகைக்கான வருமான வரியாக 22 கோடியே 50 லட்சம் ரூபாய் உரிய காலத்தில் முறைப்படி என்னால் செலுத்தப்பட்டுள்ளது.



எஞ்சிய தொகையான 77 கோடியே 50 லட்ச ரூபாயை என்னுடைய மகன்களுக்கும், மகள்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தேன். அதிலே எனக்கும் ஒரு பங்காக பத்து கோடி ரூபாய் கிடைத்ததில், ஐந்து கோடி ரூபாயை வங்கியிலே இருப்பு செய்து, அந்தத் தொகையைக் கொண்டு "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை'' ஒன்று தொடங்கப்பட்டு, அதிலே கிடைக்கின்ற வட்டித் தொகையிலே இருந்து ஏழை-எளியோர்க்கு மருத்துவ உதவியாகவும், கல்வி வளர்ச்சி உதவியாகவும் 8.12.2005 முதல் 8.11.2010 வரை 2,145 பேர்களுக்கு 1 கோடியே 72 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறேன்.





புத்தக கண்காட்சி





வங்கியில் இருப்பு செய்யப்பட்ட இந்த ஐந்து கோடி ரூபாயில் -ஆண்டுதோறும் நல்ல புத்தகங்களை, சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகள் தாங்கிய புத்தகங்களை, எதிர்கால இளைஞர்களுக்கு ஆக்கபூர்வமாக வழிகாட்டுகின்ற அறிவார்ந்த புத்தகங்களை எழுதும் சிறந்த எழுத்தாளர்கள் ஐந்து பேரைத் தேர்வு செய்து, அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் - பொற்கிழியாக வழங்கிட தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினேன்.





அந்த ஒரு கோடி ரூபாய் நிதியைக் கொண்டு, அந்தச் சங்கம் "கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை'' என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் இருந்து, 2008-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அந்தச் சங்கத்தின் மூலமே சிறந்த எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு 2008, 2009, 2010 ஆகிய மூன்றாண்டுகளில் மொத்தம் இது வரை 17 அறிஞர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழிகள் வழங்கப்பட்டுள்ளன.









செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத் தொடக்க விழா 30.6.2008 அன்று நடை பெற்ற போது ஆண்டுதோறும் செம்மொழித் தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் அறிஞருக்கு 10 லட்ச ரூபாய் பொற்கிழி விருது வழங்கிட ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என நான் அறிவித்து, அதன்படி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் "கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை'' தொடங்கிட 21.7.2008 அன்று ஒரு கோடி ரூபாய் வழங்கினேன்.





கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா அவர்களுக்கு இந்த அறக்கட்டளையின் முதல் விருதாக பத்து லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.





2004-2005-ம் ஆண்டில் "மண்ணின் மைந்தன்'' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 11 லட்சம் ரூபாய் - "கண்ணம்மா'' படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 10 லட்சம் ரூபாய் இரண்டையும் சேர்த்து 21 லட்சம் ரூபாயை "சுனாமி நிவாரண நிதி''யாக அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம், மு.க.ஸ்டாலின் வாயிலாக நேரில் வழங்கப்பட்டது.





உளியின் ஓசை படம்





2008-ம் ஆண்டு, "உளியின் ஓசை'' திரைப்படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் 25 லட்சம் ரூபாயில் வருமானவரி போக, 18 லட்சம் ரூபாய் திரைத்துறையிலே பணியாற்றிய நலிந்த கலைஞர்களுக்கு 9.7.2008 அன்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர், ராம.நாராயணன் முன்னின்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் என்னால் நேரடியாக வழங்கப்பட்டது.





2009-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட "பெண் சிங்கம்'' திரைப்படத்திற்காகக் கிடைத்த 50 லட்சம் ரூபாயுடன், சொந்த நிதி 11 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து - 14-9-2009 அன்று தமிழக அரசின் முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலே சேர்த்து, தமிழகத்திலே உள்ள அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்வி பயிலும் 56 மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 1,165 மாணவர்கள் என மொத்தம் 1,221 மாணவ -மாணவியருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் 61 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கல்வி வளர்ச்சி நிதியாக 26.10.2009 அன்று துÖய்மைப் பணிபுரிவோர் நலவாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டது.





மேலும், தற்போது தயாரிக்கப்பட்டுவரும் "இளைஞன்'' திரைப்படத்திற்குரிய கதை வசனம் எழுதியமைக்கு 24.4.2010 அன்று வருமானவரி போக அளிக்கப்பட்ட 45 லட்சம் ரூபாய் ஊதியத்தைத் தமிழக அரசின் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலே ஒப்படைத்து, அந்தத் தொகையினை - தமிழகத்திலே உள்ள மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காகச் செலவிட வழங்கப்பட்டது.





ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி





23.7.2009 அன்று நடைபெற்ற கலைஞர் காப்பீட்டுத் திட்டத் தொடக்க விழாவில் உரையாற்றிய பொழுது சென்னை கோபாலபுரத்தில் நான் வசித்து வருகின்ற வீட்டை, பிற்காலத்தில் ஏழை-எளியோர்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் மருத்துவமனையாக மாற்றிட நன்கொடையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி உரிய பத்திரப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.





14.4.2010 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக சென்னை மறைமலைநகரில் நடைபெற்ற அம்பேத்கார் பிறந்தநாள் விழாவில் "அம்பேத்கார் சுடர்'' எனும் விருது எனக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் தரப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் பொற்கிழியினை 15.4.2010 அன்று முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியில் சேர்க்க என்னால் வழங்கப்பட்டது.





25.5.1990 அன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பாக - "தென்பாண்டிச் சிங்கம்'' என்ற பெயரில் நான் எழுதிய நாவல் சிறந்த புதினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்காக "ராஜராஜன் விருது''ம், அந்த விருதுக்குரிய ஒரு லட்ச ரூபாய் பொற்கிழியும் எனக்கு அன்றைய குடியரசுத் துணைத் தலை வராக இருந்த சங்கர் தயாள் சர்மா ஆளுநராக அப்போதும் இருந்த பர்னாலா முன்னிலையில் வழங்கப்பட்ட போது, அந்த நிதியை அந்தப்பல்கலைக் கழகத்திடமே திரும்பக் கொடுத்து, அந்தத் தொகைக்குரிய வட்டியினைக் கொண்டு ஆண்டு தோறும் என் பெற்றோர் பெயரால் அறக்கட்டளை சொற்பொழிவுகளை நடத்துமாறு கேட்டுக்கொண்டேன். இந்த ஆண்டு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அந்தச் சொற்பொழிவுகள் நடைபெற்றன.





பிறந்தநாள் விழா



என்னுடைய பிறந்த நாளன்று மாலைக்குப் பதிலாகவும், பொன்னாடைக்குப் பதிலாகவும் கழகத் தோழர்கள் அளித்த நிதியையும் கூட முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலே தான் சேர்த்திருக்கிறேன். 3.6.1986 அன்று என்னுடைய பிறந்த நாள் விழாவின்போது உண்டியலில் குவிந்த 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை இலங்கை விடுதலைப் போராளிகள் இயக்கங்களுக்கு பகிர்ந்தளிப்பது என்று கழகப் பொதுக் குழுவிலேயே முடிவெடுத்து அவ்வாறே வழங்கப்பட்டது. அதைப் போலவே என்னுடைய வேறு சில பிறந்த நாள்களில் உண்டியலில் குவிந்த நிதிகளிலிருந்து மறைமலை நகரில் (காட்டாங்குளத்தூர்) உள்ள சிவானந்த குருகுலத்தில் பயிலும் சிறுவர்களின் கல்வி செலவுகளுக்காக 13.6.1988-ல் 50 ஆயிரம் ரூபாயும், 7.6.1993-ல் 70 ஆயிரம் ரூபாயும், 6.6.1996-ல் ஐந்து லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டன. மேலும் 1994-ம் ஆண்டு பிறந்த நாளில் அளிக்கப்பட்ட நிதி பெங்களூரில் உள்ள தமிழ்ச் சங்கத்திற்கு என்னால் வழங்கப்பட்டது.





நான் கலந்து கொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளில் எனக்கு பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்குவதுண்டு. அவற்றைக்கூட அரசு விழாக்களில் அவைகள் வழங்கப்பட்டால், அவற்றை தலைமைச் செயலகத்திலும், கட்சி நிகழ்ச்சிகளிலே வழங்கப்பட்டவை என்றால் அவற்றை கழகத் தலைமைக் கழகம், அண்ணா அறிவாலயத்திலே உள்ள கருவூலத்திலும் ஒப்படைத்திருக்கின்றேன். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, தங்க நாணயங்கள் கோர்க்கப்பட்ட மாலைகள், வெள்ளியிலான பல்வேறு பொருள்கள் எல்லாம் இப்போதும் அண்ணா அறிவாலயத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பதை யார் வேண்டுமானாலும் சென்று காணலாம்.





எந்த சொத்தும் வாங்கவில்லை





இறுதியாக தற்போது என் கணக்கிலே எவ்வளவு இருப்பு உள்ளது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். `சன்' தொலைக்காட்சி வாயிலாக எனக்குக் கிடைத்த பத்து கோடி ரூபாயில் "கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை''க்காக ஐந்து கோடி ரூபாய் கொடுத்ததைப் பற்றி நான் முதலில் குறிப்பிட்டிருப்பதைப்போல கொடுத்ததை அன்னியில் - எஞ்சிய 5 கோடி ரூபாயை வைப்பு நிதியாக வங்கியிலே செலுத்தி, அதற்காக கிடைத்த வட்டித்தொகையெல்லாம் சேர்ந்து -தற்போது வைப்பு நிதியாக 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134 ரூபாயும் - சேமிப்புக்கணக்கில் (எஸ்.பி. அக்கவுண்ட்) 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 ரூபாயும் இன்றைய தேதியில் உள்ளது.





நான் வசிக்கின்ற இந்த வீட்டைக் கூட மருத்துவமனை அமைப்பதற்காக எழுதிக் கொடுக்க நான் அறிவித்த போது - நான் வாழ்ந்த இல்லம் என்பதற்காக இதை வைத்துக் கொள்ள வேண்டுமென்று வீட்டார் எண்ணிய போதும், நான் அழைத்து அவர்களை கையெழுத்திட்டுத் தருமாறு கேட்டபோது மறுவார்த்தை பேசாமல் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டார்கள். இந்த ஒரு வீட்டைத் தவிர என் பெயரில் நான் எந்தச் சொத்தையும் வாங்கிடவில்லை, சேர்த்திடவில்லை.





அதிக ஊதியம் பெற்றவன்





தமிழ்த் திரைப்பட உலகத்திலே திரைக்கதை வசனம் எழுதுவதற்காக முதன் முதலில் அதிக ஊதியம் பெற்றவன்; தி.மு. கழகத்திலே சென்னையில் முதன் முதலில் சொந்தமாக ஒரு வீடும், காரும் - நான் எந்தப் பதவி பொறுப்புக்கும் வராத போதே வாங்கியவன் என்ற பெயர் எனக்கு உண்டு என்பதை அனைவரும் அறிவர்.





இதுதான் என்னுடைய சொத்துக் கணக்கு. இதை வைத்துத்தான் நான் ஆசியாவிலேயே முதல் கோடீஸ்வரன் என்கிறார்கள். லஞ்சம், ஊழல் ஆகியவைகளைப் பொறுத்து என் உதவியாளர்கள் கூறுவது போல நான் ஒரு "நெருப்பு'' மாதிரி! நான் முதன் முறையாக முதல்-அமைச்சராக இருந்தபோதே தஞ்சையில் கூட்டுறவு நிறுவனம் ஒன்றில் எனக்கு மிகவும் வேண்டிய உயிர் நண்பர் வழக்கறிஞர் தவறு செய்த போது, அவர் மீது நடவடிக்கை எடுத்து, அதன் காரணமாக அவர் தனது வழக்கறிஞர் பணியினையே செய்ய முடியாத அளவிற்கு ஆயிற்று! அது போலவே தான் சென்னை மாநகராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பிலே இருந்தபோது, "மஸ்டர் ரோல்'' ஊழல் நடைபெற்றதாக பேரவையிலே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபோது, சட்டப்பேரவையிலேயே எழுந்து அந்த மாநகராட்சி மன்றம் கலைக்கப்படும் என்றும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து அவ்வாறே செயல்முறை படுத்தியவன்தான் நான்.











இன்னும் சொல்லவேண்டுமேயானால் எனக்கு மிகவும் வேண்டிய நண்பர்களில் ஒருவர் கவிஞர் கருணானந்தம். அவருடைய ஒரே மகன் குலோத்துங்கனுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர ஒரு மதிப்பெண் குறைந்தது. முதல்-அமைச்சர் மனது வைத்தால் சேர்த்துக்கொள்ளலாம் என்று கேட்டபோது கூட நான் அதற்கு இணங்கவில்லை. அதனால் அந்தக் குடும்பத்துக்கு என் மீது எழுந்த கோபம் இன்னும் தீரவில்லை. இதுபோன்ற சம்பவங்களை நான் எழுதிக் கொண்டே போகலாம்.



நான் இதையெல்லாம் எழுதுவதற்குக் காரணம் யாரிடமும் சான்றிதழ் பெறவேண்டும் என்பதற்காக அல்ல, என்னுடைய குணம், இயல்பு அப்படி என்பதை என் மீது குறை காண்போர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.





என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உற்றார் உறவினர்கள் அவரவர்கள் உழைத்து, ஒரு சிலர் தங்களுக்கென வீடுகளையோ, சொத்துக்களையோ வாங்கியிருக்கலாம். ஆனால் அதற்காக நான் எந்த விதமான நிதி உதவியோ, அரசு சார்பிலான உதவியோ செய்தது இல்லை என்பதையும் இந்த நேரத்தில் நான் உறுதிப் படுத்திட விரும்புகிறேன்.







நான் பல முறை சொல்லியிருப்பது போல மிக மிகச் சாதாரணமான, சாமான்யமான குடும்பத்திலே பிறந்த என்னை, இந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பேன் என்ற நம்பிக்கையோடு ஐந்து முறை முதல்-அமைச்சராக்கி, 1957 முதல் 11 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி, 1969 முதல் நாற்பதாண்டு காலத்திற்கு மேலாக ஒரு கட்சியின் தலைவராக்கி இருக்கிறார்கள் என்றால்,



திராவிடத் தமிழ் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி செலுத்துகின்ற நேரத்தில் என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்பதை அவர்களுக்கெல்லாம் தெளிவாக்கிடவும், என் மீது இன்னமும் குறை காண்கின்ற ஒரு சிலரும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன்.







என் எஞ்சியுள்ள காலத்தையும் திராவிடத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவே செலவிடுவேன் என்று உறுதி கூறி - என்றைக்கும் ஏழையெளிய மக்களின் கவலை தீர்ப்பதையும், கண்ணீர் துடைப்பதையும் கடமையாகக் கொள்வேன் என்பதற்காகவே இந்தக் கணக்கைக் காட்டியிருக்கிறேன், கண்ணுடையோர் காண்பதற்காக! முகத்தில் இரண்டு புண்ணுடையோர்க்கல்ல!’’என்று தெரிவித்துள்ளார்.
தொலைந்து போன திறமைகள்


இப்பதிவில் நான் குறிப்பிடப்போகும் திறமைகள் என்னிடம் மெதுவாக ஒட்டிக் கொண்டத் திறமையோ, என்னையறியாமலே வந்த திறமையோ, எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே இருந்த திறமையோ அல்ல.



எங்கள் வீட்டுக்கருகில் இருக்கும் மளிகைக் கடையில் பெரிய லிஸ்டைக் கொடுத்து சாமான்களை எடுத்து, அவற்றுக்கு பில் போடும்போது கடைக்காரர் ஒவ்வொரு பொருளுக்குமான தொகைகளை எழுதும்போதே நான் அவற்றை மனதிலேயே ஒன்றன் பின் ஒன்றாகக் கூட்டி விடுவேன். நான்கு/மூன்றிலக்கத் தொகைகளை சுலபமாகவே கூட்டிட இயலும். எல்லாவற்றையும் எடுத்து எழுதி அவர் கால்குலேட்டரை எடுக்கும்போது மொத்தத் தொகையையும் முதலிலேயே கூறி விடுவேன். அவர் கூட்டி முடித்துப் பார்த்தால் கிட்டத்தட்ட 100% சதவிகிதம் நான் சொன்னதுதான் வந்திருக்கும். சில சமயம் சரியாக வராமல் போவது அவர் எழுதும் எண்களை மாற்றிப் படிப்பதால் வரும். உதாரணத்துக்கு சிலர் 4 என எழுதுவது 9 போலத் தோன்றும் அபாயம் உண்டு.



நான் கடைக்கு சென்றால் இதை நாங்கள் எல்லோருமே ஒரு விளையாட்டாகவே பாவிப்போம். இதில் என்ன திறமை வந்தது என்றால், மனதுக்குள்ளேயே கணக்கு போடும் திறமைதான். நாங்கள் பள்ளீயில் படிக்கும்போது 4 மற்றும் ஐந்தாம் வகுப்பில் மனக்கணக்குகளை அதிகம் போடச் சொல்வார்கள். பிறகு நான் மேல் வகுப்புகளுக்கு சென்றபோது அந்த பழக்கமே கிட்டத்தட்ட அழிந்தது எனக் கொள்ளலாம்.



இப்போதெல்லாம் எல்லாவர்றுக்கும் கால்குலேட்டரையே எடுக்கிறார்கள். நான் பார்த்த ஒரு பிரெஞ்சு பிரகஸ்பதி 10 + 2 = 12 என்பதற்கும் கால்குலேட்டரைத் தேடியதை என்னால் இன்னும் மறக்கவியலவில்லை. சிலர் கூறலாம் கால்குலேட்டர்கள் இருக்கும்போது ஏன் மண்டையை உடைத்துக் கொள்ளவேண்டும் என. அவர்கள் இந்தத் திறமையின் மிகச்சிறந்த அனுபவத்தையே இழக்கிறார்கள் என்பேன். நாங்கள் அக்காலத்தில் லாகரிதம் எல்லாம் கற்றோம். இப்போதும் அதைக் கற்பிக்கிறார்கள் என நினைக்கிறேன். சமீபத்தில் 1990-91 கல்வியாண்டில் இரு ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு நான் கணக்கு சொல்லிக் கொடுத்த போதும் அது இருந்தது, இன்று இன்னும் இருக்கிறது என நம்ப விரும்புகிறேன்.



பொருளாதார நிர்ப்பந்தங்களால் பல திறமைகள் தேவையின்றியும் போயுள்ளன. அவற்றில் முக்கியமானது நல்ல கையெழுத்துடன் எழுதுவது. அக்காலங்களில் பத்திரங்கள் எழுத நல்ல காப்பி ரைட்டர்கள் தேவைப்பட்டனர். ஆனால் இப்போது அவர்களுக்கு தேவையின்றி கணினி ஃபாண்டுகள் வந்து விட்டன. பாட்டுகளை கம்போசிங் செய்வதிலும் கணினியின் உபயோகம் வந்துள்ளதக அறிகிறேன்.



இவை எல்லாம் நல்லதுக்கா இல்லையா என்பதை எளிதாகக் கூறிவிட முடியாது. பொருளாதார மாறுதல்கள் சில திறமைகளைத் தேவையில்லாமல் ஆக்கினாலும் நான் முதலில் கூறிய மனக்கணக்கு திரமைகள் மாணவர்களிடம் இல்லாமல் போவது நல்லதுக்கல்ல என்றே கூறுவேன். ஆகவே மாணவர்களிடம் எடுத்த எடுப்பிலேயே கால்குலேட்டர்கள தராது பார்த்துக் கொள்ள வேண்டும்.



நான் வழக்கமாக பத்திரிகைகள் வாங்கும் கடை முதலாளிக்கு பத்தாம் வகுப்பில் படிக்கும் ஒரு சுட்டிப் பெண் இருக்கிறாள். அக்குழந்தையை நான் அவளது ஐந்தாம் வகுப்ப்லிருந்தே கவனித்து வருகிறேன். நான் 100 ரூபாயைக் கொடுத்து 34.50 க்கு பத்திரிகைகள் எடுத்திருப்பதாகக் கூறினால், அந்த சுட்டிப் பெண் மீதி 65.50 என்பதை ஆங்கிலத்தில் உரக்கக் கூறிவண்ணம் சரியான சில்லறை தருவாள். அவள் பெற்றோகளோ முதலில் ஐம்பது பைசாவை எடுத்து 35 எனக்கூறிவிட்டு, 5 ரூபாயை எடுத்து 40 எனக்கூறி, பிறகு முறையே 10 மற்றும் ஐம்பது ரூபாய் நோட்டுக்களை சேர்த்து 100 எனக் கூட்டி நம்மிடம் தருவார்கள். சில்லறை நோட்டுகள் கைவசம் ரெடியாக இல்லாவிட்டால் கால்குலேட்டரே துணை. தென்றல் என்னும் பெயருடைய அந்தச் சுட்டிப் பெண் ஆறாம் வகுப்பிலேயே கணக்குக்கான ஒலிம்பியாட்டில் கலந்து கொண்டு மூன்றாம் பரிசு பெற்றவள். சகபோட்டியாளர்கள் பலர் அச்சமயம் அவளை விட 4 அல்லது 5 வயது பெரியவர்கள்.



இந்தச் சுட்டிப் பெண் போல குழந்தைகள் இருக்கும்வரை நமது இளைய சமுதாயத்தின் மேல் உள்ள எனது நம்பிக்கை குறையாதுதான்.
உலக அளவில் ஒரே கரன்சி

Globalization அதாவது உலகமயமாக்கலின் தாக்கம் இன்று எல்லாராலுமே உணரப்படுகின்றது. வால்ஸ்டிரீட்டின் நெளிவு சுழிவுகள் உலக பங்குசந்தைகளில் எதிரொலிக்கின்றன. ஈரானில் போர் மேகம் சூழ்ந்தால் சீனாவில் பெட்ரோல் விலை ஏறுகின்றது. அமெரிக்காவில் Day Light Saving Time மாற்றப்பட்டால் சென்னையில் கால் சென்டரில் வேலை செய்யும் மனோஜ் சீக்கிரமாக வேலைக்கு போக வேண்டியுள்ளது. இப்படி வீடுவரை குடிவந்துள்ள உலகமயமாக்கல் பாதி கிணறே தாண்டியுள்ளதால் தாம் இன்றைய உலக எக்கானமி தடுமாறுகின்றது என்கின்றது ஒரு ஆய்வு. அதாவது இன்று Economic imbalance, Economic instability பிரபலமான வார்த்தைகள்.



இதற்க்கெல்லாம் தீர்வு அரைவேக்காட்டு தனமாய் உள்ள உலகமயமாக்கலை முழுதாக்க வேண்டுமாம். அதாவது ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து யூரோ எனும் கரன்சி கொண்டு வந்துள்ளார்கள். அரபு நாடுகளும் இது போன்ற ஒரு பொது கரன்சிக்கு தயாராகின்றார்கள். ஏன் தெற்காசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் உட்பட சில நாடுகள் சேர்ந்து பொது கரன்சி உருவாக்கவும் திட்டம் போட்டுள்ளன. அமெரிக்காவும் கனடாவும் மெக்ஸிகோவும் இணைந்து North American Union- என "The Late Great U.S.A" உருவாக்கி அதில் பொது கரன்சி உலவ விட திட்டங்கள் உள்ளன.



இந்த போட்டிகளையெல்லாம் விட்டு விட்டு பேசாமல் உலக அளவில் ஒரு பொது கரன்சி உருவாக்கி, அதற்கொரு உலக ரெசர்வ் பாங்க் உருவாக்கினால் பெரும்பாலான தலைவலிகள் தீரும் என்கின்றார்கள் பெரும்பாலானோர். இதைத்தான் Single Global Currency.org-ம் வலியுறுத்துகின்றார்கள். 2025-க்குள் உலக அளவில் ஒரு பொது கரன்சி கொண்டு வருவது தான் இவர்கள் நோக்கம். பலரின் விருப்பமும் அதுதான்.முன்னாள் U.S Federal Reserver Chair Paul Volcker இவ்வாறாக கூறினார் "A global economy requires a global currency."



உலக பொது கரன்சியானால் உலகில் அனைவருக்கும் சம்பளம் ஒரே கரன்சியில் வழங்கப்படுவதால் ஏற்றத்தாழ்வுகள் வெகுவாக குறையும். பெரும்பாலான பொருளாதார குளறுபடிகள் சரியாகும் என நம்புகின்றார்கள்.



அப்படியே உலக அளவில் ஒரு பார்லிமெண்ட் அமைத்து உலகளாவிய அரசு ஒன்றும் ஆட்சி செய்தால் பிரச்சனையே இருக்காது போங்க.
அம்பலம் ஏறும் அந்தரங்கங்கள்

டிஜிட்டல் உலகில் எல்லாமே செம ஸ்பீடு. டிஜிட்டலைஸ்ட் ஆகிய நடிகையின் கவர்ச்சி படமாகட்டும் அல்லது ரகசிய கசமுசா வீடியோவாகட்டும் அல்லது டிஜிட்டலைஸ்ட் ஆகிய ஒரு மென்புத்தகமாகட்டும் நொடிப்பொழுதில் உலகெங்கும் விஷ காய்ச்சல் போல் இணையம் வழி பரவிவிடும். என்னத்தான் பாதுகாப்பு முறைகள் கடைபிடித்தாலும் கலிபோர்னிய காட்டு தீ போல் இவை

பரவுகின்றன. உருவாக்குதல் தான் கடினம், காப்பி செய்ய சில நொடிப்பொழுதுகள் போதும். மில்லியன் டாலர்கள் செலவு செய்து ஆயிரக்கணக்கானோரின் உழைப்பில் வெளியாகும் வீடியோ கேம்கள், விலைமிக்க மின் பொருள்களின் கதையும் அதுதான்.



ஏதோ ஒரு விபரீத ஆசையில் யாருக்கும் தெரியாமல் சிட்டி ஹாலின் மதிப்புமிக்க மேயர் ஆசனத்தில் தன் மனைவியை துளி கூட துணியின்றி அவரை அமரவைத்து படம் எடுத்து தன் வீட்டு கணிணியில் வைத்திருந்தார் ஒரு பிரிட்டன் நகர மேயர். தன் வீட்டு பசங்க வீட்டில் ஒரு பார்ட்டி வைக்க வெளியூர் சென்றிருந்தார் மேயர். அவர் பிள்ளைகளின் நண்பர்கள் மேயர் வீட்டு கணிணியில் விளையாட தவறுதலாய் சிக்கியது அந்த படம். எவ்வளவு நேரமாகும்? ஒரே கிளிக்கில் உலகெங்கும் பறந்தது அந்த ஜோடியின் அந்தரங்கம்.



இப்படி படமாயும், வீடியோவாயும் மாட்டி நோந்து போனோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதில் புதிது இப்போது ஒலிவடிவம்.



நண்பரிடம், நன்கு தெரிந்தவரிடம், காதலரிடம் தானே பேசுகிறேன் என்ற நினைப்பில் அந்தரங்கமாய் ஏதேதோ கிளுகிளுப்பாய் பேச அப்பேச்சுக்கள் முழுவதும் எதிர்முனை நபரால் பதிவு செய்யப்பட்டு MP3 ஒலி வடிவில் எடுக்கப்பட்டு இணையத்தில் உலவ விடப்பட்டால் எப்படி இருக்கும்?. டிஜிட்டல் உலகில் இது போன்றவை எளிதாய் சாத்தியம். வெளிவரும் செல்போன்கள் அனைத்துமே இது போன்ற வாய்ஸ் ரெக்கார்டிங் கொண்டிருப்பது ஒரு பயமுறுத்தும் செய்தி. "நேரில் காதுள் பேசு. போனில் அதுவும் பேசாதே" என புதுசாய் சொற்றொடர் உருவாக்கவேண்டியுள்ளது.



அப்படியே எசகு பிசகாய் எதாவது ஆர்வக்கோளாரில் பேசினாலும் பேசும்போது கவனமாய் போனில் பேசவும். முக்கியமாய் "அது" போன்ற பேச்சுகளிடையே உங்கள் விலாசம், பெயர், மொபைல்நம்பர் போன்ற தகவல்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
மின்சாரக் கனவு

முதலில் எங்கோ உருவாக்கப்பட்ட ஒலி அலைகளை கம்பியின்றி தொலை வானொலிகளுக்கு கடத்தி வெற்றி பெற்றார்கள். அதோடு ஒளியையும் சேர்த்து கலந்து இனிதாய் ஒலியும் ஒளியுமாய் தொலைகாட்சிகளுக்கு பின் கடத்தினார்கள்.இப்படி வெற்றிகரமாய் வயர்லெஸ் வழி ஒலியையும் ஒளியையும் கடத்தியாயிற்று.



இப்படியே மின்சாரத்தையும் கம்பியின்றி கடத்த முடியுமா?



அப்படி கடத்த முடிந்தால் எத்தனை மாற்றங்கள் உலகில் உருவாகும்.யூகிக்க கூட முடியாத ஒன்று.



நெடுஞ்சாலைகளில் மைல்கணக்கில் வேகமாய் நம் கூடவே வரும் அந்த பருத்த மின்கம்பங்களும், கம்பிகளும் காணாமல் போய்விடும்.



பாக்கெட்டில் இருக்கும் செல்போன் தானாய் வயர்லெஸ்ஸாய் சார்ஜ் ஆகிவிடும்.EB-க்கு தனியாய் காசு கட்டலாம்.



மின்சார பேருந்துகள் ஓடிக்கொண்டே இருக்க வயர்லெஸ்ஸாய் அதற்கு கரண்ட் சப்ளை ஆகிக்கொண்டேயிருக்கும். இப்படி எல்லாமே மாறிப்போகும்.



இதெல்லாம் சாத்தியமா? சமீபத்திய ஆய்வுகள் சில இவை சாத்தியம் என்கின்றன. இதை Wireless Electricity Power Transfer என்கின்றார்கள். மைக்ரோவேவ் ஓவன் மாதிரி ஒர் அறையை இந்த மின்னலைகளால் நிறைத்து அந்த அறை முழுவதும் மின்சாரத்தை கம்பியின்றி கடத்த முயன்றிருக்கிறார்கள். கி.பி 3000-த்தில் உங்களிடமுள்ள மின்கருவிகள் எல்லாம் வயர்கள் தொல்லைகள் எதுவும் இன்றி தானாய் இயங்க உலகமே இவ்வலைகளால் நிறைந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்?



அட குடி தண்ணீரை கூட குழாயின்றி கடத்தலாம்ங்க. மேகம் டன் டன்னாய் வானில் தண்ணீரை குழாயின்றி கடத்த வில்லையா என்ன? :)



ஆனால் ஒன்று. அதுவரை மாறி மாறி குண்டு வைத்து தகர்த்து தன்னை தானே கொல்லும் மனித ஜன்மம் தான் இருக்குமோ என்னவோ தெரியவில்லை.
பூ பூக்கும் அந்த நொடியில் பலமான ஓசை எழுவதுண்டாம். எங்கோ படித்த நியாபகம். ஆனால் நம்மால் தான் அதை கேட்க முடிவதில்லை. காரணம் நம் காதுகளால் அந்த அலைவரிசை கூடின ஒலி அலைகளை கிரகிக்க முடிவதில்லை. பொதுவாக 20 Hz முதல் 20 kHz வரையேயான ஒலிகளையே நம் சாதாரண காதுகளால் கேட்க முடியும். அதனால் பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை என எதுகை மோனையோடு பாடி விட்டு அமைதியாகி விடவேண்டியது தான்.




சிறுசுகளுக்கும் பொடிசுகளுக்கும் கேட்கும் சத்தங்கள் கூட நம்மைப் போன்ற முப்பது அல்லது நாற்பது வயதான பெரியவர்களுக்கு கேட்பதில்லை. உதாரணத்துக்கு 15kHzக்கும் மேல் வரும் சத்தத்தை 25 வயதுக்கு மேற்பட்டவர்களால் கேட்க முடியாதாம். கீழ்கண்ட MP3-யை ஓட்டிப் பாருங்கள் (எச்சரிக்கை:மிக அதிக ஓசை எழுப்பும் கிளிப் இது)



Teenager Tone Mp3 Clip



உங்கள் காதுகளில் எதாவது கேட்டால் நீங்கள் 25வயதுக்கும் கீழ்பட்டவர் என அர்த்தம். எதுவும் கேட்காவிட்டால் உங்களுக்கு வயதாகிவிட்டது என அர்த்தம். வகுப்பறையில் ஆசிரியர் காதுகளில் கேட்காமல் ஆனால் தங்களுக்கு மட்டும் கேட்கும் படியான ரிங்டோன் வைக்க தங்கள் கைப்பேசிகளில் பதின்மர்கள் நாடும் MP3 இது. இதையே எதிர்மாறாக பதின்மர்கள் உங்கள் அறையில் நுழைந்து தொல்லை செய்யாதிருக்க இக்கிளிப்பை தொடர்ந்து ஓடவிட்டுக் கொண்டிருக்கலாம். எரிச்சலூட்டும் இந்த ஒலியை கேட்டு சிறுவர்கள் உங்களை நெருங்கவே மாட்டார்கள். நீங்களோ நிம்மதியாக உக்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பீர்கள்.



கீழே வெவ்வேறு அலைவரிசைகளில், வெவ்வேறு கிளிப்கள். எந்த அலைவரிசை வரை உங்களால் கேட்கின்றதுவென பாருங்கள்.என்னால் 14 kHz-யை தாண்டமுடியவில்லை. வயசாகிவிட்டது.





•8 kHz

•10 kHz

•12 kHz

•14 kHz

•15 kHz

•16 kHz

•17 kHz

•18 kHz

•19 kHz

•20 kHz

•21 kHz

•22 kHz

மீண்டும் சந்திப்போம்.

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

குறைந்த தண்ணீரில் சரக்கடித்தல்






நண்பர்களே, சரக்கடிக்கும் பொழுது சிறிது தண்ணீர் மட்டுமே வைத்துகொண்டு, அதனுடன் சில சிப்சையோ, முருக்கையோ கடித்து கொண்டு வாந்தி எடுக்காமல் சரக்கடிப்பது எவ்வளவு கடினம் தெரியுமா ?



ஒரு புகழ் பெற்ற குடிகாரர் ஒரு பாருக்கு சென்றார். அங்கு அவர் குடிக்க அழைக்கப் படவில்லை. வேடிக்கை பார்க்க தான் சென்றிருந்தார். பார் திறந்த உடன் , அங்கு குழுமியிருந்த குடிகாரர்கள் இவரை அடையாளம் கண்டு, இவரை குடிக்குமாறு வேண்ட, சரக்கை எடுத்து, தாம் எவ்வளவு சரக்கடிக்க வேண்டும் என வினவினார். மக்களோ எவ்வளவு சரக்கு வேண்டுமானாலும் அடியுங்கள் எனக் கூற, குடிகாரரோ, அதிக சரக்கு குடிக்க அழைத்தீர்கள் என்றால் நான் எளிதாகப் குடித்து விடுவேன். ஒரு பிரச்னையுமில்லை. ஆனால் நாலு பெக் மட்டுமே அடிக்கவேண்டுமேனில், அதற்கு நான் ஒரு பீர் முழுவதும் அடித்து , பிறகு தான் சரக்கடிக்க வேண்டும் எனக் கூறினார். காரணம் என்ன வெனில், என்ன சரக்கு வேண்டுமானாலும் அடிக்கலாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அடிக்கலாம் என்றால் அது எளிது. கை வந்த கலை. ஆனால் குறிப்பிட்ட சரக்கை, அதுவும் குறைந்த தண்ணீரோடு அடிக்க வேண்டுமெனில், அது கடினமான செயல்.



ஏனெனில் குறைந்த தண்ணீரில் ஒரு பெக்கினை, ஒரு குவாட்டரை, ஒரு புல்லினை அடிக்க வேண்டுமெனில், அதற்கு அதிகம் பயிற்சி வேண்டும். குறித்த தண்ணீரில் , அடிக்க வேண்டியவைகளை எல்லாம் அடிக்க வேண்டும். போதை ஏற அடிக்க வேண்டும். எவ்வளவு குடித்தாலும் வாந்தி வராமல் இருக்கணும். அது அனுபவத்தில் தான் வரும். திட்டமிட்டால் தான் வரும்.
குவாட்டரை குடித்தேன்:உடல்வலி நிவாரணம் 1/4


சென்ற மாதம் எனக்கு காது வலி வந்தது. அதன் விளைவாக நடுவிரல் வீங்கிக் கொண்டது. நீண்ட நேரம் கீழே தொங்க விட்டிருந்தால் வீக்கம் அதிகமாகி ஆயிரம் டைனோசர் கடித்தது போல் வலித்தது; கடுத்தது. விரலை கீழே தொங்க விடாமல் மேல் நோக்கி வைத்திருந்தால் வலியும் வீக்கமும் குறைந்தது. அதனால் நடுவிரலை எப்போதும் மேல்நோக்கி வைத்து மற்ற விரல்களை மடக்கி இருக்கும் ஸ்டைலிலேயே வைத்திருக்க வேண்டி ஆனது. ஆனால் இதை மற்றவர்கள் தங்களுக்குத் தரப்படும் அவமரியாதை என்று எடுத்துக் கொண்டு விட்டார்கள்.



என்னை அடுத்து புஜ்ஜிகுட்டிக்கும் காதுவலி வந்து அதற்கும் நடுவிரல் வீங்கியது; ஆயிரம் டைனோசர் கடித்தது போல் கடுத்தது(உனக்கு எப்படி தெரியும்னு கேட்க கூடாது). அது வேறு கத்தல் திலகம் என்பதால் ஒரே ரகளை. (அதுக்கிட்ட கேட்டால் ‘வாலுதான் குரைத்தல் திலகம் ’ என்னும். அது குடிப்பதில்லை என்பதால் அதோட தரப்பு கேட்பார் இல்லாமல் போகிறது). வலியால் அது குரைப்பதை பார்த்துப் பார்த்து சலிப்படைந்து என் வலி பற்றி வெளியில் சொல்வதையே நிறுத்திக் கொண்டேன். ஒயின்ஷாப்பில் கேட்டதில் இந்த வலி சரக்கடித்தால் சரியாகும் என்றார். சரக்கடித்தல் என்பது குவாட்டரா, ஆஃபா, ஃபுல்லா என்று கேட்டதற்கு என்னை ஒருமாதிரி பார்த்து விட்டு “ஓரிரண்டு ஃபுல்கள் ” என்றார்.



மற்ற ஒயின்ஷாப்பில் விசாரித்த போதும் அந்த பதிலே கிடைத்தது. இரண்டு ஃபுல்லை எப்படி அடிப்பது? பல சமயங்களில் ராவா அடிக்கலாமா என்ற அளவுக்கு வலி. இதற்கிடையில் டிசம்பர் 31 அன்று நியூஇயர் கொண்டாட்டத்துக்கு டாஸ்மாக் போய் சரக்க அடிக்கவேண்டும்.



” சரக்கடிக்க வேண்டுமானால் டாஸ்மாக் செல்ல வேண்டுமே; இந்த விரலை வைத்துக் கொண்டு எப்படிச் செல்வது? ” யோசித்தேன்.



எப்படியோ மடக்கி மடக்கி மறைத்து சேர்ந்து விட்டோம். ஒயின்ஷாப் வாசல். சக குடிமகன்கள் சரக்கு வாங்கும் நேரம்.



என்னைப் பார்த்து ” என்னா வேணும்? ” என்று கேட்டார். நான் புஜ்ஜிகுட்டியை சுட்டிகாட்டி ” கடந்த ஐந்து நாட்களாக மாற்றி மாற்றி இதுக்கு கொட்டாவி வந்து நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது சேல்ஸ்மேன். இதை சரிப்படுத்த வேண்டும் ” என்றேன். அப்போதைய பிரச்சினையான காதுவலியை பற்றியும் சொன்னேன்.



” அப்படியா? புஜ்ஜிகுட்டி இதுபற்றி எதுவும் சொன்னதில்லையே? ” என்று சொல்லி விட்டு, கீழே குனிந்து ஒரு உருட்டைகட்டை மாதிரியான ஒரு தடியை புஜ்ஜிகுட்டியின் தலையில் ஒன்னு போட்டார்.



அடுத்து, சில அடிகள் காதில் விழுந்தது. அப்போது காலை மணி பண்ணிரெண்டு. காலையிலிருந்து அவருடைய நடமாட்டங்களை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். காலையிலிருந்தே ஒரு நிமிடம் கூட விடாமல் ராவாக சரக்கு அடித்தது போல் அங்கே ஒரு ஆட்டம், இங்கே ஒரு கும்மாளம் என்று ஆடிக் கொண்டிருந்தார். ஒரு வாய் சைடிஷ் கூட சாப்பிட்டிருப்பாரா என்பது சந்தேகம். இன்னும் பலர் சரக்குவாங்க காத்துக் கொண்டிருந்தார்கள். சரக்கு வாங்கி மீண்டும் பாருக்குள் செல்ல வேண்டும். அநேகமாக இரவு 12 மணிக்குத்தான் அவரால் சைடிஷ் சாப்பிடமுடியும்.



என்னைப் பார்த்து அந்த அற்பமான சிரிப்புடன் “புஜ்ஜிகுட்டிக்கு சரியாயிருச்சு. உனக்கும் ரெண்டு போடட்டுமா? ” என்று கேட்டார்.



“சேல்ஸ்மேன், இன்னும் நீங்கள் காலையிலிருந்து சாப்பிடக் கூட இல்லை என்று நினைக்கிறேன்... ”



“ஆமாம் என்ன இப்போ... ”



என்னதான் சேல்ஸ்மேன் என்றாலும் சரக்கடிச்சா சைடிஷ் சாப்பிடனும் தானே? இருந்தாலும் நாள் பூராவும் சைடிஷ் தண்ணீர் இன்றி குடிமக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தப் மகாகுடிமகன் மீது ஒரு குடிகாரனுக்கு தன் சரக்கின் மீது எத்தனை அன்பும், பாசமும் சுரக்குமோ அப்படி ஒரு உணர்வு ஏற்பட்டு என் மனம் நெகிழ விடை பெற்றேன்.



சொன்னால் நம்பவே மாட்டீர்கள். ஆனால் என் கண்களால் அந்த அதிசயத்தைக் கண்டேன். புஜ்ஜிகுட்டி எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சர்வ சாதாரணமாக தாவி தாவி ஓடியது.



வீடு திரும்பும்போது என் நடுவிரல் நீட்டி கொண்டிருப்பது பற்றி சேல்ஸ்மேனிடம் ஒன்றும் சொல்லவில்லையே என்று நினைத்தேன். மறுநாள் விடிந்ததும் சேல்ஸ்மேனுக்கு ஒரு போன் பண்ணினேன்.



போன் பேசியதும் நேரில் வந்து உருட்டைகட்டையால் காதிலும், கையிலும் செமத்தியா அடித்தார் அன்றே, அந்தக் கணமே காதுவலி சரியாகி விட்டது. நடுவிரலும் கொஞ்சம் கொஞ்சமாகக் மடங்கிப் போனது.



டாஸ்மாக் பார் என்ற பெயரால் அழைக்கப்படும் அந்த அற்புதமான சொர்க்கப்பூமியை நீங்கள் பார்க்க விரும்பினால் தினமும் காலை 10 மணியிலிருந்து மாலை 10 மணி வரை தெருவுக்கு தெரு பார்க்கலாம். அங்கே குடித்து கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுடனும் கலந்து கொள்ளலாம். அவர்களோடு பேசலாம். உங்கள் குடிபிரதாபங்களை சொல்லலாம். அவரது ஆலோசனைகள் பெறலாம். அடிதடி இலவசம்.



தொடர்புக்கு:டாஸ்மாக், ஊரெங்க்கும்
1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?


ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....

அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....



2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....

காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....

இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?



3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......

சீனாவுல தான் பிறந்தது.....

ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.



4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல்

தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்"

போடுவது என்கிறோம்....



5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....

நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..

நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....



6) மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?

b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?

c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?



7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...

என்ன கொடும சார் இது?....



8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...

தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....



9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...



10) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...

சொல்லட்டுமா?

பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...

ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....



11) True GK Facts:

** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.

** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.

** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.

** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....









12) ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !

அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!



13) மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...

கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?



14) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!

1. சிரிப்பு

2. அழகு

3. நல்ல டைப்

4. கொழந்த மனசு...

5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....



15) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.



16) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....

முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....



17) தத்துவம் 2010

"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!

"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!

இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....





18) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?

மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!



19) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?

?

?

?

?

?

?

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........
இந்த பதிவில் இருக்கும் கேள்விகளுக்கு என்னை தான் பதில் எழுத சொன்னாரு! எனக்கு ஆணி அதிகமா இருந்ததால என்னோட கேர்ள்பிரண்டு பதிலை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்! பார்த்து கலாய்ங்க மக்களே!






****************





அவசமாக டாய்லட் போக வேண்டிய தருணத்தில் கழிவறை கிடைக்காமல் திண்டாடியிருக்கிறீர்களா?



ஆமாம், ஒருமுறை என்னுடய கல்லூரியில் கேரளா சுற்றுலா அழைத்து சென்றனர். உணவு விடுதியில் நிறுத்திய போது நாங்க அனைவரும் ஓடியது அங்கே தான்!, அங்கிருந்ததோ இரண்டே அறை, ஒன்று ஜென்ஸ், மற்றொன்று லேடிஸ், நாங்க இருந்தது 20 பேர், வேற வழியில்லாம ஜென்ஸ் ரூமையும் நாங்களே ஆக்ரமிச்சிகிட்டோம்!, பசங்க தான் பாவம் முளிச்சிகிட்டே நின்னானுங்க!







யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள்?



நம்ம யாரை பார்த்து பொறாமை படுறது.நம்மல பாத்து தான் மத்தவங்க பொறாமை படனும்.கொஞ்சம் மொக்கையா இருக்குல.







எதிர்பாராமல் கிடைத்த கிளுகிளு அனுபவம் ஏதாவது?





ம்ம்ம்ம்.நெறய இருக்கு.நானும் என்னோட பிரண்டு கொடைகானல் போனோம்.நாங்க போனப்ப சீசன் டைம்.நல்ல கிளுகிளுன்னு குளிருச்சு.அத என்னால மறக்க முடியாது.அடுத்து முணாறு போனோம்.அங்க பார்த்தால் இன்னும் கிளுகிளுனு குளிருசு.இந்த மாதிரி நெறய கைவசம் இருக்கு.அடுத்து ஊட்டி போனோம்.. ஐயோ அடிக்க வர வேண்டாம்..(குளுகுளுன்னு தான் குளிரனும்னு சட்டமா என்ன?)







நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?



என்னோட முஞ்சியில எப்பவும் அசடு வழியும்.அத வேற ஒரு சம்பவமா சொல்லன்னுமாகும்.







இன்றளவும் உறுத்திக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு ஏதாவது இருக்கிறதா?



ஆமாம்.ஒன்னு இருக்கு.என்னோட காதலன் கிட்ட நான் வேண்டும் என்று சண்டை போட்டேன்(காரணம் இல்லாமல்).சண்டை போட்டு பிரிந்தோம்.அது தான் எனக்கு குற்ற உணர்வு உள்ள சம்பவம்.(தப்பிச்சிகிட்டானோ)









சினிமாவுக்கு பிளாக்கில் டிக்கட் வாங்கிச் சென்றிருக்கிறீர்களா?



காலேஜ் கட்டடிச்சிட்டு சினிமாவுக்கு போலாம்னு கிளம்ப லேட்டாயி போய் நின்னா பயங்கர கூட்டம்! ஒரு ஃப்ரெண்டு பேச்சை கேட்டு ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி உள்ளே போனபிறகு சொல்றா, ப்ளாக் டிக்கெட் வாங்கினா போலீஸ் பிடிக்கும்னு, அப்புறம் லைட் எரிஞ்சாலே பயம் வந்துசுருச்சு, யாருமே ஒழுங்கா படம் பார்க்கல! ப்ளாக்குனாலே அதிலிருந்து அலர்ஜி! அதுவும் வால்பையன் ப்ளாக்குனா செம அலர்ஜி!



நீங்கள் மீறியதிலேயே பெரிய சட்ட மீறல் எது?



என்ன தான் பிராக்டிகல் எக்ஸாம்னாலும் நமக்கு மொள்ளமாரித்தனம் கை வந்த கலை ஆச்சே, எப்படி தான் சிஸ்டத்துல ப்ரோக்ராமை அழிச்சாலும் நாம எப்புடியும் பாத்து தான் எழுத போறோம்.முக்கியமா எவ்ளோ தான் படிச்சுட்டு போனாலும் டீச்சர் முகத்த ஒரு தடவ பார்த்தா போதும்.எல்லா ப்ரோக்ராமும் மறந்து போயிரும்.நான் பரீட்சைல பிட் அடிச்சது தான் பெரிய சட்ட மீறல்.



அனானி கமெண்ட் போட்டிருக்கிறீர்களா? ஆமெனில் யாருக்கு? எப்போது?



கமெண்ட் போடுறது வால்பையன் ப்ளாக்குல மட்டும் தான், ஒரு தடவை ஸ்மார்ட்ங்கிறவர் பதிவுல கமெண்ட் போட்டேன்! அனானி கமெண்டுனா எனக்கு என்னான்னு தெரியல







அன்றைய சரோஜாதேவி இன்றைய மஜா மல்லிகா யாருடைய எழுத்து சூப்பர். ஒப்பிடவும்.





அன்பே வா படத்துல சரோஜாதேவி நடிச்சிருக்காங்க தெரியும், ஆனா அவுங்க புத்தகமெல்லாம் எழுதியிருக்காங்கன்னு தெரியாது!, மஜா படத்துல நடிச்சது அசின் தானே மல்லிகா யாரு?
இந்தியர்களின் அந்த கால வயர்லெஸ் தொழில்நுட்பம்






அமெரிக்கர்கள் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள் கிடைத்தன. உடனே அவர்கள் அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள் மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தியிருக்கிறார்கள்.”



இரஷ்யர்கள் அவர்கள் நாட்டில் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள் கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள், “எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே டெலிபோனை பயன்படுத்தியிருக்கிறார்கள்.”



இந்தியர்களும் தோண்டினார்கள். 1000 அடி தாண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை. உடனே அறிவித்தார்கள், “எங்களது மூதாதையர் வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்
பொங்கி வரும் காவேரி என


பொங்கட்டும் புது வாழ்வு

சீறிவரும் காளைபோல

சிரிக்கட்டும் புது வருடம்



வருகின்ற மகிழ்ச்சிகளை

மூளையில் வைப்போம்

வந்த துன்பங்களை

மூலையில் வைப்போம்



வீசுகின்ற தென்றலுக்கு

ஜன்னல் திறப்போம்

வீசிய சூறாவளிக்கு

வாதில் அடைப்போம்



வருகின்ற காலம்

வசந்த காலம் ஆகட்டும்

வீசுகின்ற காற்றெல்லாம்

தென்றல் காற்றாகட்டும்



வருகின்ற மழையால்

மரங்களெல்லாம் சிரிக்கட்டும்

வருடுகின்ற மகிழ்ச்சியால்

மனமெல்லாம் மகிழட்டும்



வருகின்ற புத்தாண்டு

புத்துணர்ச்சி கொடுக்கட்டும்

காழ்ப்புணர்ச்சி இல்லாமல்

விழிப்புணர்ச்சி உண்டாகட்டும்



கையில் காசு வைத்திருப்போர்

இல்லாதவர் பையில் வையுங்கள்

பையில் வைத்திருப்போர்

இல்லாதவர் கையில் கொடுங்கள்



கட்டுகின்ற கட்டிடமெல்லாம்

கல்விமையம் ஆகட்டும்

தீட்டுகின்ற திட்டமெல்லாம்

திறன்பட செயல்படட்டும்



சாதி மதம் இல்லையென

சான்றிதல் கொடுப்போம்

சமத்துவம் ஒன்றேயென

தம்பட்டம் அடிப்போம்



வறுமையே இல்லை என

வாழ்த்திடலாம் வாருங்கள்

திறமை இருக்கும் இடத்தை

போற்றிடலாம் வாருங்கள்



அநாதை இல்லங்களை

அரவணைக்க வாருங்கள்

ஊனமுற்ற குழந்தைகளுக்கு

ஊக்கம் கொடுக்க வாருங்கள்



அன்பிருக்கும் இடத்தை

ஆதரிப்போம் வாருங்கள்

குணம் இருக்கும் இடத்தை

கும்பிடலாம் வாருங்கள்



முதியோர் இல்லங்களை

மூட வைப்போம்

பெற்றோரை விரட்டியடித்த

மூடர்களை முதுகில் அடிப்போம்



பெற்ற தாய்க்கு

பெருமை சேர்ப்போம்

நற்ற மரக்கன்றை

நாளும் வளர்ப்போம்



கல்வி கற்றவரை

அரசியலுக்குத் தேர்ந்தெடுப்போம்

குடும்ப அரசியலுக்குக்

கொல்லிப் போடுவோம்



கலை வளர்க்கும்

கலைஞர்களை ஊக்குவிப்போம்

கொலை செய்யும் வெறியர்களை

கூண்டோடு அழிப்போம்



வேலையில்லாத திண்டாட்டத்தை

வேரறுக்க செய்திடுவோம்

பட்டினிஇல்லாத பாரதத்தை

பரந்து விரியச்செய்வோம்



நோயுற்றுக் கிடப்போரை

நோகாமல் கவனித்திடுவோம்

பாய் எனக் கிடப்போரை

பரம்பால் புடைத்திடுவோம்



இல்லம் இல்லாதவர்க்கு

இருக்க இடம் கொடுப்போம்

கல்வி கல்லாதவர்க்கு

கல்வி கற்றுக்கொடுப்போம்



படிக்காதவர்களே இல்லை என

பறை சாற்றிடுவோம்

இல்லாதவர்களே இல்லை என

இதயம் திறந்து சொல்லிடுவோம்



நிழல் தரும் மரங்களை

நெடுகெங்கிலும் வைப்போம்

நிஜம் சொல்லும் மனிதர்களை

நெஞ்சத்தில் வைப்போம்



சுவை தரும் கனியை

தினம் தோறும் உண்போம்

சுகம் தரும் பாடலை

தினம்தோறும் கேட்போம்
நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்..!


(ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்..!





1. ஆபீஸில் சும்மா உட்கார்ந்திருக்கும் போது பாஸூடைய கையெழுத்தைப் போட்டுப் பழகலாம். ஃப்யூச்சரில் உதவும்.

2. வெளியில் போய் நின்று கொண்டு போகிற வருகிற வண்டிகளை எண்ணிக்கொண்டிருக்கலாம்.

3. உங்கள் வைரி யாரேனும் இருந்தால் அவரது வண்டியின் பெட்ரோல் டேங்கில் கொஞ்சமாக சர்க்கரை போட்டு வைக்கலாம்.







4. நெட் கனெக்ஷ்ன் இருந்தால் சீரியல், சினிமா கதைகளை படித்து வைக்கலாம். வீட்டுக்குப் போய் டி.வி பார்க்கும் நேரம் மிச்சம்.







5. கடிகாரத்தைத் தூக்கிப் போட்டு ஒரே அடி... அதுதான் உண்மையிலேயே நேரத்தைக் கொல்வது.







6. பல்லிடுக்குகளை நாக்கினால் துழாவி ஏதேனும் உணவுத்துணுக்கு மாட்டுகிறதா என்று பார்க்கலாம், மாட்டினால் அதை மென்று கொண்டு இருக்கலாம்.







7. இன்டர்வியூவுக்காக வந்திருக்கும் ஏதேனும் ஒரு பிகரை பிக்கப் பண்ண டிரை பண்ணலாம். அவர் இன்டர்வியூவுக்காக வந்திருப்பதால் கண்டிப்பாக சிரித்துப் பேசுவார்.







8. கார்ட்டூன் போட்டுப் பழகலாம். முக்கியமாக உயரதிகாரிகளை. ஆனால் அந்தப் பேப்பர் அவரது கைகளில் மாட்டாமல் பார்த்துக்கொள்வது அதி முக்கியம்.







9. கண்களை மூடியபடி பகல் கனவு காணலாம், ஸ்கூல் நாட்களில் கணக்கு, பெளதீகம், ஹிஸ்டரி முதலிய வகுப்புகளில் செய்தது போல. கனவில் நமீதா, ரம்பா வகையறாக்களை வரவழைத்தல் நலம்.





10. கேஸ் எப்படி ஃபார்ம் ஆகிறது, கொட்டாவி, ஏப்பம் முதலியவை எப்படி உருவாகின்றன போன்றவற்றை யோசிக்கலாம்.



11. காபியைத் கை தவறிக் கொட்டி விட்டு ஹவுஸ் கீப்பிங் பையனிடம் அவன் தான் கொட்டி விட்டதாக வம்பிழுக்கலாம். இன்னொரு காபி கொண்டு வரச்சொல்லலாம். (ஆனால் இதை வீட்டில் முயற்சிக்கக் கூடாது.)





12. பேப்பரில் ஏரோப்ளேன், ராக்கெட் முதலிய கைவினைப் பொருட்களை செய்து பழகலாம். யார் அதிக தூரம் விடுவது என கொலீக்குடன் போட்டி வைக்கலாம். ஆனால், வேலை பார்க்கும் யார் மேலாவது மோத விட்டு பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.





13. இஷ்ட தெய்வத்தின் மேல் பாடல் எழுதலாம். இஷ்ட தெய்வம் இல்லையா? பிடித்தவர்கள் மேல் எழுதலாம். கானா எழுத முயற்சித்தால் நிறைய எழுத முடியும்.



14. ரெஸ்ட் ரூமுக்குப் போய் முகத்தை அஷ்ட கோணலாக ஆக்கி அழகு பார்க்கலாம். செல்போன் கேமரா இருந்தால் படம் பிடித்தும் வைக்கலாம்.







15. எல்லாவற்றையும் விட எளியதான ஒரே வழி தூக்கம்.





16. தொந்தியை வருடிக்கொடுப்பது போன்ற சிறு சிறு தேகப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.



17. கேஃபடேரியாவில் / கேன்டீனில் கூட்டம் அதிகமாக இருந்தால் ஸ்நாக்ஸை ஆர்டர் செய்ய குறுக்கு வழிகளை யோசிக்கலாம்.



18. வேறு யாராவது எழுதிய ஈ.மெயிலில் தப்பு கண்டுபிடிக்கலாம். முடிந்தால் அவரிடமே சொல்லி வெறுப்பேற்றலாம்.



19. யாரையாவது கம்பெனி சேர்த்துக் கொண்டு உங்கள் ஃப்ளோர் (தளம்) தவிர மற்ற ஃப்ளோர்களுக்கு ஒரு விஸிட் போய் வரலாம். லிஃப்டை தவிர்த்து படிகளில் நடந்து போனால் நேரமும் அதிகமாகும், அரட்டையும் அதிகமாகும்.



20. வீட்டிலுள்ள சுட்டிகளின் கம்ப்யூட்டர் கேம்ஸை கொண்டு வந்து டவுன்லோடு செய்து வைக்கலாம். போரடிக்கும் நேரங்களில் விளையாட உதவும்.



21. தொடக்கூடாத ஏதேனும் ஒரு பட்டனை தட்டிவிட்டு கம்ப்யூட்டரை ஹேங் செய்யலாம். சிஸ்டம் டிபார்ட்மெண்ட் ஆட்களை வரவழைத்தால் ஒரு முழு நாளையும் ஓட்டலாம்.



22. ஏதாவது ஒரு மியூஸிக் சேனலுக்கு போன் செய்து பிடித்த பாடல் கேட்கலாம். அதை உங்கள் சுபீரியருக்கு டெடிகேட்-டும் செய்யலாம்.



23. உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாருக்காவது போன் செய்து (ஆபீஸ் போனிலிருந்து தான்) நலம் உசாவலாம். முன்னதாக போன் உரையாடல் ரெக்கார்ட் ஆகிறதா என்பதை மட்டும் செக் செய்து கொள்வது உசிதம்.
"நேரத்திட்டமிடலில்” வெற்றியடைய 10 சுலபமான வழிகள்!!


வேகமான இன்றைய உலகில், நாமும் வேகமாவும், விவேகமாவும் இல்லையென்றால் வாழ்க்கை ஓட்டத்தில் மிகவும் பின்தங்கிவிடுவோம் என்பதுதான் நிதர்சனம். இந்தப் புரிதலினால், நம்மில் பலர் இன்று வாழ்வியல் முறைகளில் பலவகையான மாற்றங்களை அவ்வப்போது செய்துகொண்டு, வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை நோக்கி பயணிக்கிறோம்.



வாழ்வியல் முறை மாற்றங்களில் மிக முக்கியமானதும், எளிதில் கைவரப்பெறாததுமாய் ஒன்று இருக்குமென்றால், அது நேரத்திட்டமிடலே என்பது நம்மில் பலர் அறிந்திருக்கும் ஒன்று. நேரத்திட்டமிடல் குறித்த புரிதல்களையும், சில/பல நுணுக்கங்களையும் புத்தகங்கள், துறை வல்லுனர்கள், நண்பர்கள் மூலமாக எனப் பலவாறாக சேகரித்து வைத்திருப்போர் பட்டியலில் நம்மில் பலர் கண்டிப்பாக இருப்போம்!







நேரத்திட்டமிடல் குறித்த திட்டங்கள், ஆயத்தங்கள், முயற்ச்சிகள் என எல்லாம் இருந்தும் சில/பல சமயங்களில் அதில் வெற்றியடைவது என்பது நம்மில் பலருக்கு “கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட முடவன் கதையாய் போய்விடுகிறது!”. இதற்க்கு காரணம், நேரத்தை நாம் எப்படி அணுகுகிறோம் அல்லது நேரத்துடன் நம்மை நாம் எப்படி தொடர்புபடுத்திக்கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்!





நேரத்துடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வதென்பது கிட்டத்தட்ட முதலீடு செய்வதைப்போல. அதாவது, நேரத்துடனான நம் உறவு/தொடர்பு ஒரு கொடுக்கல்-வாங்கல் போலத்தானாம்?! தொடக்கத்தில் நாம் முதலீடு செய்யும் ஒரு குறிப்பிட்ட கால அளவானது இறுதியாக நமக்கு நல்ல லாபத்தைக் தரும் என்கிறார்கள் உளவியலாளர்கள்!





என்னங்க ஒன்னும் புரியலீங்களா? எனக்கும் அப்படித்தான் இருக்கு. அதுக்காக அப்படியே விட்றவா முடியும். வாங்க நேரத்திட்டமிடலா நாமளா அப்படீன்னு ஒரு கை பார்த்துடுவோம்……













நேரத்திட்டமிடலில் வெற்றியடைய முத்தான 10 சுலபமான வழிகள்!



நம்ம நேரத்தை நன்றாக திட்டமிட்டு செலவு செய்ய, அப்படிச்செய்தபின் அதற்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கும் 10 முத்தான, அதேசமயம் மிகவும் சுலபமான (?) வழிகளை பின்வரும் பட்டியலில் பார்ப்போம்…..



1.ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதை நிறுத்துங்கள் (Stop multitasking): சமீபகாலங்கள்ல, பொதுவாக பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது. அடிப்படையில், அறிவியல்ரீதியாக பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு தாவுவது/மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது என்பது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது!





2.முக்கியத்துவம் வாய்ந்த செயல்களை தேர்வு செய்து கொள்ளுங்கள் (Set your priorities): ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்துகொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைப்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, தீப்பற்றிக்கொண்ட ஒரு கட்டிடத்தை விட்டு வெளியேறுவதைவிட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்கவேண்டுமென்பது முக்கியமானதல்ல!





3.உடற்பயிற்ச்சி செய்யுங்கள் (Exercise): உங்கள் உழைப்புத்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மனநலம் என்பது மிக அவசியம்! அதனால், புதிய யுக்திகளை கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும், பணிக்கிடையில் நல்ல காற்றை சுவாசித்து காலாற நடந்துவிட்டு வாருங்கள்!





4.‘முடியாது’ என்பதை கனிவாக சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் (Learn to say ‘no’ with kindness): நம் பணிகளுக்கிடையில் நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம்தான் என்றாலும், அச்சிறு உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, அயற்ச்சியைத் தருபவையாக, முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக “என்னால் இவ்வுதவி செய்ய இயலவில்லை” எனச் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்! இது உங்கள் நேரத்தை சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும்!





5.காலையில் ஒரு 15 நிமிடம் முன்பாக எழ முயற்ச்சியுங்கள் (Get up fifteen minutes early): ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்கும்முன் தியானம் செய்யவோ, உங்களின் டைரிக் குறிப்பு எழுதவோ பழகிக்கொள்ளுங்கள். உடல் நலனைப்போலவே மனநலனும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது! உடற்பயிற்ச்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்!





6.போதுமான அளவு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் (Get enough rest): ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு மணி நேரம், உங்களின் அடுத்த நாளின் ஒரு மணி நேர வேலையை குறைப்பதில்லை. ஓய்வின்றி வேலைசெய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்கிறது உளவியல்!





7.எதிர்பார்ப்புகளை மேலான்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள் (Manage expectations): உங்கள் அறையக் குப்பையாக்கிவிட்டு, விழுந்து விழுந்து சுத்தம் செய்வதற்க்கு பதிலாக, குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்துவிட்டால், குப்பையை சுத்தம்செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படும்!





8.மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தை திட்டமிட்டு வைத்துக்கொள்ளுங்கள் (Check email at set times): ஒவ்வொரு மின்னஞ்சலும் குட்டி போடும் தெரியுமா உங்களுக்கு?! அதாங்க, நீங்க அனுப்புற ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் ஒரு பதில் மின்னஞ்சல் வருமே அதைச்சொன்னேன். அதாவது, மின்னஞ்சல்களை தினசரி சரியாக கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதேமாதிரி, வேறு வேலை செய்யும்போது மின்னஞ்சல்களை பார்க்காதீங்க, கவனச்சிதறல் ஏற்படுவதை தவிர்க்க!





9.தேவையில்லாதபோது இணையம்/செல்பேசியை அணைத்துவிடுங்கள் (Unplug): அசினும், நயன்தாராவும் அடுத்த எந்த படத்துல நடிக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கலைன்னா, ஒன்னும் குடி முழுகிப்பொயிடாது. அதனால, இணையத்தை உலாவுவதிலும், செல்பேசியில் குறுச்செய்தி அனுப்பவதிலுமே காலத்தைக் கழிக்காமல், இரண்டையும் சிறிது நேரம் அணைத்துவிட்டு, உடற்பயிற்ச்சியோ தியானமோ செய்து ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!





10.செயல்பட அதிக நேரம் இருப்பதாய் எண்ணிக்கொள்ளுங்கள் (Embrace time-abundant thinking): ஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம் இருக்கும்பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்கவேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். மாறாக, மனதுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபட்டு மனதையும் லேசாக்கி, நேரத்தையும் சரியாக செலவு செய்யவேண்டும்.





நாம் எப்போதும் இறந்தகாலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்வதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொண்டோமானால் மனஅழுத்தம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துபோகும். நேற்றும் நாளையும் மாயைகள். அவை இனி இல்லை, இந்தக் கணம்தான் உண்மை என்று எண்ணி வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்ளுங்கள். வெற்றி நமக்கே…..!! மீண்டும் சந்திப்போம்.







இது தவிர, உங்களுக்குத் தெரிந்த நேரத்திட்டமிடல் குறித்த உத்திகள், பரிந்துரைகள் எதாவது இருந்தா சொல்லுங்களேன்……
நினைத்ததை நடத்தியே முடிக்க ஆசையா?!


நினைத்ததை நடத்தியே முடிக்க ஆசையா?!







-சில முயற்சிகள், சிறப்புப் பயிற்சிகள்





'உங்களின் வெற்றி ரகசியம் என்ன?' என்று உலகப் புகழ் பெற்ற செய்தியாளர் டயானே சாயரிடம் ஒரு மாணவர் கேட்டபோது அவர் தந்த பதில், 'எதிலும் முழுமையான கவனம் செலுத்தினால் வெற்றி பெற முடியும். அதுவே நான் கற்ற பாடம்!'





நண்பர்களே உலகில் இரண்டே வகையான மனிதர்கள்தான் இருக்கிறார்கள். ஒரு வகையினர்-கழுத்தை நெரிக்கும் டெட்லைனில் முழுக் கவனம் செலுத்திக் காரியத்தை முடிப்பவர்கள். இன்னொரு வகையினர்- இந்தச் செயலுக்கு இந்த அளவு கவனம் போதும் என்று நிதானமாகச் செய்து முடிப்பவர்கள். சினிமா, செல்போன், டி.வி, இன்டர்நெட், கேர்ள்/பாய் ஃப்ரெண்ட் என உங்கள் கவனம் கலைக்க இன்று காரணங்கள் ஆயிரம். இந்த வெளிப்புறக் காரணிகள் போக... மன சஞ்சலம், பயம், தயக்கம், தாழ்வு மனப்பான்மை என உள்ளே இருந்து உருட்டி மிரட்டும் சாத்தான்கள் வேறு! இவற்றைத் தாண்டி எந்த ஒரு காரியத்திலும் முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்தினால்தான் வெற்றி வசமாகும். இந்த நிலையில் 'மன ஒருமைப்பாட்டை' வளர்த்துக்கொள்வது எப்படி?







மனசே... கவனம் ப்ளீஸ்!







"மன ஒருமைப்பாடு என்பது ஒரு வகையில் நல்ல நடத்தையைக் குறிக்கும். சிதறாத கவனம் இருக்கிறவர்களிடத்தில் நல்ல குணங்களும், வெற்றி பெறுவதற்கான தகுதிகளும் அதிகமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது!" என்று ஆரம்பிக்கிறார் உளவியல் நிபுணரான கீதாஞ்சலி ஷர்மா. "நல்ல கவனம் இருப்பவர்கள் எதையும் சரியாக உள்வாங்கிக்கொள்ள முடியும். உள்வாங்கிக்கொண்டதைச் சிந்தித்து அதன் மூலம் கிடைக்கின்ற காரணங்களை வைத்துக்கொண்டு சூழ்நிலைகளைச் சமாளித்துவிடுவார்கள்.







மன ஒருமைப்பாடு சமநிலையில் இல்லாவிட்டால், தங்களால் எது செய்ய முடியும், எது செய்ய முடியாது என்று வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாது. எந்த நேரத்தில் எதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற திட்டம் இல்லாததால் மனது அதைச் செய்யலாமா, இதைச் செய்யலாமா என்று அலைபாய்ந்துகொண்டே இருக்கும்.







உதாரணமாக, வகுப்பில் நீங்கள் அமர்ந்திருக்கலாம். ஆனால், உங்கள் மனம் நேற்று பார்த்த திரைப்படத்தில் லயித்திருக்கும். உங்கள் மேலதிகாரி உங்களிடத்தில் முக்கியமான விஷயத்தைப்பற்றிப் பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால், உங்கள் கண்கள் அறையை அளந்துகொண்டு இருக்கும். நீங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால், உங்கள் கைகள் வேறு எதையோ கிறுக்கிக்கொண்டு இருக்கும். இங்கே கவனம் எதிலும் பதியவில்லை. ஒப்புக்கு இருக்கிறீர்கள். இது ஒரு வகை.







உங்களுக்குப் பிடித்த சினிமா பாட்டைக் கேட்கிறீர்கள். உங்களை மெய்மறந்து அந்த வரிகளை முணுமுணுக்கிறீர்கள். யார் கூப்பிட்டாலும் உங்கள் காதில் விழுவது இல்லை. சேனலில் பரபரப்புச் செய்தி வாசித்துக்கொண்டு இருக்கும்போது, 'அவ போட்டிருக்கிற செயின் ரொம்ப நல்லாருக்குல்ல!' என்று கேட்கிறீர்கள். இங்கே உங்கள் மனம் ஒன்றில் மட்டும்... குறிப்பாக, உங்களுக்குப் பிடித்த ஒரு காரியத்தில் மட்டும் கவனம்கொண்டு இருக்கிறது. இது இன்னொரு வகை!







இந்த இரண்டு வகைகளிலும் அடிப்படை விஷயம் ஒன்றுதான். ஆனால், அது அமைந்திருக்கிற சூழ்நிலை, செயல்பாடுகள் வேறு வேறு. கான்சன்ட்ரேஷன் எனும் 'மன ஒருமைப்பாடு' வெறும் கவனித்தல் சார்ந்து இயங்குவது அல்ல. ஒரு செயல் செய்யப்படுகிற இடம், காலம், மனிதர்கள் ஆகியோரும் முக்கியம். அவற்றை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதில் இருக்கிறது சாமர்த்தியம்.







இப்போது மேற்சொன்ன இரண்டு விஷயங்களை வேறு விதத்தில் காண்போம். வகுப்பில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். ஆனால், பேராசிரியர் பாடம் எடுக்காமல் உங்கள் 'ஆளை' செமினார் எடுக்கச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது உங்கள் கவனம் முழுக்க அவர்கள் மீதே பதிந்திருக்கும் இல்லையா? இங்கு உங்களுக்குப் பிடித்த ஒரு விஷயமும் பிடிக்காத ஓர் அம்சமும் இணைந்திருக்கையில் நீங்கள் வெறுக்கும் ஒரு செயல் இனிமையாக இருக்கிறது. அதனால் கவனம் ஓர் இடத்தில் மட்டும் இருக்கிறது. அந்தக் கவனம் எதில் இருக்கிறது என்பதுதான் இங்கு கேள்வி. அவரின் அழகிலோ அல்லது பாடம் நடத்தும் விதத்திலோ இருக்கலாம். அவர் நடத்துகிறார் என்பதாலேயே உங்களுக்குப் பாடம் கவனிக்க விருப்பம் இருக்கலாம்.







உங்களுக்குப் பிடித்த சினிமா பாட்டை மெய்மறந்து பாடிக்கொண்டு இருக்கும் சமயத்தில் டி.வி-யில் கிரிக்கெட் மேட்ச் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்போது என்ன செய்வீர்கள்? இரண்டிலும் கவனம் செலுத்தியபடியே இருப்பீர்கள். காரணம், இரண்டும் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள். இங்கே கவனம் இரண்டிலும் சரிபாதியாகச் சிதறுகிறது. இதை 'ஸ்காட்டர்ட் திங்கிங்' என்பார்கள்.







நிமிடத்துக்குப் பல ஆயிரம் சிந்தனைகள் நம் மூளையில் தோன்றி மறைவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அப்படி இருக்கையில் ஏதேனும் ஒரு காரியத்தில் மட்டும்தான் கவனம் செலுத்த முடியும். இரட்டைக் குதிரை சவாரி செய்யலாம்தான். ஆனால், பாதுகாப்பாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் இலக்கை அடைவதும் முக்கியம். தியானம், யோகா போன்ற சில பயிற்சிகளைச் செய்வதன் மூலமும் திட்டமிடுதல் மூலமும் நம் மன ஒருமைப்பாட்டை மேம்படுத்திக்கொள்ள முடியும்!" என்கிறார் கீதாஞ்சலி ஷர்மா.







மனசே... நீ ஒரு மந்திரவாதி!







"தினமும் படிக்கும் பக்க அளவுகளைவிடக் கூடுதலாக ஐந்து பக்கங்கள் அதிகமாகப் படியுங்கள். அல்ஜீப்ரா கணக்குப் பாடத்தில் தினமும் போட்டுப் பார்க்கும் கணக்கு அளவுகளைவிடக் கூடுதலாக ஐந்து கணக்குகள் வொர்க்-அவுட் செய்யுங்கள். ஜிம்மில் கொஞ்சம் கூடுதலாக புல்-அப்ஸ் எடுங்கள். இவை மனதை ஒருமுகப்படுத்த உதவும் அடிப்படைப் பயிற்சிகள்!" என்று உற்சாகப்படுத்துகிறார் அஸ்வின். இவர் கல்லூரி மாணவர், கார்ப்பரேட் ஊழியர் களுக்கு 'மன மேம்பாடு' பயிற்சியளித்து வரும் 'வின் டிரெய்னிங்' நிறுவனத்தின் தலைவர் மற்றும் பயிற்சியாளர்.







"எப்படி ஒரு விளையாட்டு வீரர் தொடர்ந்து பயிற்சிகளை அதிகப்படுத்திக்கொண்டே இருந்து தன் சாதனை எல்லைகளை நீட்டித்துக்கொள்கிறாரோ, அதே போல மனதுக்கும் சில பயிற்சிகளை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும். ஆரம்பத்தில் இரண்டு விநாடிகள் கவனமாக இருக்கும் மனம், அடுத்த சில மைக்ரோ நொடிகளில் வேறு ஒன்றுக்குத் தாவிவிடும். ஆனால், தொடர் பயிற்சிகள் மூலம் 'இரண்டாவது மனதை' அடைந்துவிடுவீர்கள். அப்போது உங்கள் மன ஒருமைப்பாடு, கவனம் இன்னும் அதிகமாகும்!" என்பவர் அதற்கென சில பயிற்சிகளையும் பரிந்துரைக்கிறார்.







ஆப்பிள் அல்லது பென்சில் அல்லது உங்கள் குழந்தையின் போட்டோ இப்படி ஏதேனும் ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். ஓர் அமைதியான அறையில் அந்தப் பொருட்களை உங்கள் கண் முன்வைத்து அதையே ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு உற்றுப் பார்க்கவும். அப்படிப் பார்க்கும்போது கண்கள் மட்டும் அங்கேயே நிலைகுத்தி இருக்கும். மனம் வேறெங்கோ அலைந்துகொண்டு இருக்கும். மீண்டும் உங்கள் மனதை அதே பொருளின் மீது இழுத்து வாருங்கள். மீண்டும் மீண்டும் இதைச் செய்வதன் மூலம் மனம் எங்கே இருந்தாலும் அதை இப்போதைய, இந்த நிமிடத்தில் உங்களால் நிலை நிறுத்த முடியும்.







'இந்த செயலை என்னால் முடிக்க முடியுமா?' என்று உள்ளுக்குள் சந்தேகம் தோன்றியவுடனே நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் படம் பார்ப்பது! ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம். ஒவ்வொரு செயலைச் செய்யும் முன்பும் நீங்கள் படம் பார்க்க வேண்டும். ஆனால், இந்தப் படம் திரையரங்குகளில் ஓடும் படம் அல்ல. உங்கள் மனத் திரையில் ஓட்டிப் பார்க்க வேண்டிய படம். சந்தேகமோ, குழப்பமோ, நம்பிக்கை இழந்துபோகிற சமயங்களிலோ நீங்கள் செய்ய வேண்டிய செயல்களை மனத்திரையில் காட்சிகளாக ஓட விடுங்கள். எப்படிச் செய்தால் இது சரியாக வரும், அந்தச் செயலை முடிக்க முடியும் என்பது போன்ற விளக்கங்கள் இதில் தெரிய வரும்.







ஒரு கடிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எதைப்பற்றியாவது சிந்தியுங்கள். அடுத்த வாரம் தோழியை சினிமாவுக்குக் கூட்டிப் போவது, வோடஃபோன் நிறுவனத்தின் ஜூஜூ விளம்பரம் - இப்படி எதுவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம். அந்த சிந்தனை ஆரம்பிக்கிற நேரத்தைக் குறித்துக்கொள்ளுங்கள். அதே சிந்தனை எந்த இடத்தில் முடிந்து இன்னொரு சிந்தனை ஆரம்பிக்கிறதோ அந்த நேரத்தையும் குறித்துக்கொள்ளுங்கள். இப்போது அந்த நேர இடைவெளிதான் எவ்வளவு நேரம் நம்மால் ஒரு நினைவில் தாக்குப்பிடிக்க முடிகிறது என்பதை உணர்த்துவது. இந்தப் பயிற்சியை ஒரு நாளைக்கு 10 முறை செய்யும்போது ஒன்றின் மீது கவனம் செலுத்துகிற நேரம் அதிகரித்துக்கொண்டே இருப்பதை உணர்வீர்கள்!







'சும்மா இருப்பதே சுகம்' என்பது சித்தர்கள் வாக்கு. ஓர் அமைதியான அறையில் ஒரு நாற்காலி போட்டு அமருங்கள். அப்படியே 10 நிமிடங்கள் அமர்ந்திருக்கவும். உடலில் தன்னிச்சையாக எந்த ஓர் அசைவையும் ஏற்படுத்தாமல் உட்கார்ந்திருக்க வேண்டும். இயல்பாக, ரிலாக்ஸ்டாக இருங்கள். அதற்காக, 'ரிலாக்ஸாக இருக்க முயற்சிக்கிறேன் பேர்வழி' என்று உங்களைக் கஷ்டப்படுத்திக்கொள்ள வேண்டாம். இதனை தீவிரமான பயிற்சியாகச் செய்துவந்தால் உடல் அளவிலும், மனதளவிலும் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் உங்களால் ஒரு செயலில் முழுக் கவனம் செலுத்த முடியும்.







செய்தித்தாள் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வந்திருக்கும் கட்டுரையைப் படிக்கவும். படித்து முடித்தவுடன் எவ்வளவு வார்த்தைகள் அந்தக் கட்டுரையில் இருந்ததோ அவற்றில் சிலவற்றையாவது ஞாபகத்துக்குக் கொண்டுவர முடிகிறதா என்று முயற்சியுங்கள். அப்படி உங்கள் நினைவில் இருக்கும் சில வார்த்தைகளை ஒரு காகிதத்தில் எழுதவும். இப்போது மீண்டும் அந்தக் கட்டுரையைப் படிக்கவும். முடித்தவுடன் அதை எழுதவும். முன்பைவிட இரண்டு மூன்று வார்த்தைகள் கூடுதலாகி இருந்தால், உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக்கொள்ளுங்கள். இப்படி நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் பயிற்சி செய்வது உங்கள் கவனத்தை மட்டுமல்லாமல் நினைவுத் திறனையும் அதிகரிக்கும்.







ஒரு செயலைச் செய்துகொண்டு இருக்கும்போது தலையைச் சொறிவது, விரல் நக அழுக்குகளை எடுப்பது, பேனாவை உதட்டில் உருட்டி விளையாடுவது போன்ற தேவை இல்லாத அசைவுகளைத் தவிர்க்கவும். நேரம் மிச்சமாவதுடன் கவனமும் அதிகரிக்கும்.







முழுக் கவனத்துடன் ஒரு வேலையைச் செய்துகொண்டு இருக்கும்போது உங்கள் மனதில் வேறு ஏதேனும் எண்ணங்கள் தோன்றினால், உடனே அதை ஒரு காகிதத்தில் குறித்துக்கொண்டு, 'இந்தச் செயலை... இந்தத் தேதியில்... இத்தனை மணிக்குச் செய்ய வேண்டும்' என்று எழுதிவைத்துவிடுங்கள். உங்கள் திட்டங்களை வகுத்ததுபோலவும் இருக்கும், உங்கள் கவனம் சிதறாமலும் இருக்கும்.







இவை தவிர, எந்த ஒரு செயலைச் செய்யும்போதும் அதில் ஏனோதானோ என்று இல்லாமல், உங்களின் முழு ஈடுபாட்டையும் செலுத்துங்கள். காரணம், ஈடுபாடு இல்லாமல் போனால், மன ஒருமைப்பாடு வெறும் கனவு மட்டுமே!







"அர்ஜுனா! உன் கண்களுக்கு அந்தப் பறவை தெரிகிறதா?" என்று துரோணாச்சாரியார் கேட்க, "இல்லை... எனக்கு அந்தப் பறவையின் கண்கள் மட்டுமே தெரிகின்றன" என்றான் அர்ஜுனன். "அப்படியானால் அம்பைச் செலுத்து!" துரோணரின் கட்டளை காற்றில் கரையும் முன் அம்பை எய்தினான். குறி தப்பவில்லை.







ஆம் ... முழுக் கவனத்துடன் எய்தினால், வெச்ச குறி தப்பாது !
மொக்கையோ மொக்கை






மொக்கை1







ஹாக்கி பிளேயர் ஹாக்கி விளையாடலாம்;







கிரிக்கெட் பிளேய கிரிக்கெட் விளையாடலாம்;







சி.டி பிளேயர் சி.டி விளையாடுமா?







மொக்கை2







தங்கச் செயினை உருக்கினா



தங்கம் வரும்.







வெள்ளிச் செயினை உருக்கினா



வெள்ளி வரும்.







சைக்கிள் செயினை உருக்கினா



சைக்கிள் வருமா?







மொக்கை3







டிவியை



வாட்ச் பண்ணமுடியும்.







வாட்ச்சை



டிவி பண்ண முடியுமா?







மொக்கை4







ஹீரோவில சின்ன ஹீரோ பெரிய ஹீரோ இருக்கலாம்.



ஜீரோவில சின்ன ஜிரோ பெரிய ஜிரோ இருக்க முடியுமா?







மொக்கை5







கையால் போட்டால் கையெழுத்து;



காலால் போட்டால் காலெழுத்தா?







கைவெட்டு என்றால்



கைதுண்டாகும்







கால்வெட்டு என்றால்



கால்துண்டாகும்







மின்வெட்டு என்றால்



மின்சாரம் துண்டாகுமா?







மொக்கை6







முட்டை போடுற கோழிக்கு



ஆம்லெட் போடத் தெரியாது.







ஆம்லெட் போடுற நமக்கு



முட்டை போடத் தெரியாது.







மொக்கை7







மனிதனுக்கு வந்தால் அது



யானைக்கால் வியாதி!







யானைக்கு வந்தால்



அது மனிதக்கால் வியாதியா?







மொக்கை8







குக்கர் விசிலடிச்சா



பஸ் போகாது







கண்டக்டர் விசிலடிச்சா



சோறு வேகாது!
இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை!

நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகிற கேள்வி -ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும் ?



இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும்போதெல்லாம் புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம்.



அது ஒரு கிராமம்... சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று ! காப்பாற்று ! என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக்கதறுகிறது. உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் ! என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, நான் உன்னைச் சத்தியமாகச் சாப்பிடமாட்டேன் ! என்னைக் காப்பாற்று ! என்று கண்ணீர்விடுகிறது.



முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்... சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது. பாவி முதலையே... இது நியாயமா ? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க... அதற்கென்ன செய்வது ? இதுதான் உலகம்... இதுதான் வாழ்க்கை ! என்று சொல்லிவிட்டுச் சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்குச் சாவது பற்றிக்கூட கவலை இல்லை. ஆனால், நன்றிகெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்தத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.



முதலையின் வாய்க்குள் மெள்ளப் போய்க் கொண்டிருக்கும் சிறுவன், மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான் - முதலை சொல்வது மாதிரி... இதுதான் உலகமா ? இதுதான் வாழ்க்கையா ? அதற்குப் பறவைகள், எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம்... ஆனால், அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன... அதனால் சொல்கிறோம், முதலை சொல்வது சரிதான் !



ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதையைப் பார்த்து சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான்...



நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி நடை தளர்ந்துபோனபோது எனக்குத் தீனி போட முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை ! என்றது கழுதை.



சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ! கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான். இல்லை ! முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை ! முதலை பிதற்றுகிறது என்று முயல் சொல்ல... முதலைக்குக் கோபம் வந்து விட்டது. சிறுவனின் காலைக் கவ்வியபடியே வாதாடத் தொடங்கியது. ஊஹூம்! சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை என்றது முயல்.



பெரிதாகச் சிரித்த முயல் புத்தியில்லாத முதலையே ! உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய் ? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே. என்று நினைவுபடுத்த... முதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேசத் துவங்கியது. அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து நிற்காதே ! ஓடிவிடு ! என்று கத்த.. சிறுவன் ஓடுகிறான்.



முதலை, சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது. அதன் நினைவுக்கு வந்தது ! சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னது - புரிந்ததா... இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை !



சிறிது நேரத்துக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வர... அவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள். அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்தி... சிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது..சிறுவன் பெருமூச்சு விடுகிறான். இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை என்று சமாதானம் ஆகிறான்.



வாழ்கையின் அநேக விஷயங்களை நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது ! என்று இந்து மத ரிஷிகள் சொன்னதைத்தான் புத்தமதமும் சொல்கிறது.

..............

.......

....

..



இப்படியாய் போகின்றது சுவாமி சுகபோதானந்தாவின் (Swami Sukhabodhananda) "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" புத்தகம். இப்புத்தகம் இப்போது ஆடியோ வடிவிலும் (MP3) கிடைப்பது மிக அருமை. நிழல்கள் ரவி தன் சொந்த குரலில் இந்த புத்தகத்தை ஒலி வடிவாக்கியிருக்கின்றார்.

FRINDS

ஏய் தோழா! முன்னால் வாடா!

உயிர் காப்பான் தோழன் என முன்பு சொல்லி வைத்தார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது . ஆனால் கார்ப்பரேட் உலகில், வானளாவ உயர்ந்திருக்கும் அநேக கார்ப்பரேட்களுக்கு உயிர் கொடுத்தது தோழர்கள் தாம் என்றால் அது மிகையாகாது. இன்றைக்கு வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும் அநேக கார்ப்பரேட்களின் ஆரம்ப காலத்தை திரும்பிப்பார்த்தால் இரு தோழர்களின் விடா முயற்சி இருந்திருக்கும்.



மென்பொருள் ஜையண்ட் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவ பில்கேட்ஸுக்கு பால் ஆலன் உறுதுணையாய் இருந்தார். (Microsoft-Bill Gates and Paul Allen)























நம் எல்லாருக்கும் அபிமானமான கூகுள் தேடு பொறியை உருவாக்கியதில் நண்பர்கள் லேரி பேஜ்க்கும் செர்ஜி ப்ரின்-குக்கும் பங்கு உண்டு. (Google-Larry Page and Sergey Brin)





















போர்ட்டல் மன்னன் யாகூ உருவாக ஜெர்ரி யாங்-கும் டேவிட் பிலோவும் கூட்டு சேர வேண்டியிருந்தது. (Yahoo-Jerry Yang and David Filo)



டேட்டாபேஸ் புகழ் ஆரக்கிளை உருவாக்க லேரி எலிஸன், பாப் மைனர் என இருவர் தேவைப்பட்டார்கள். (Oracle-Larry Ellison and Bob Minor)

















சிறுசுகளை விளாசிக்கொண்டிருக்கும் இன்றைய ஹீரோ மைஸ்பேசை உருவாக்க தாமஸ் ஆண்டர்சனும் கிறிஸ்டோபர் டிவோல்பும் இணைந்து உழைத்தார்கள். (Myspace-Thomas Anderson and Christopher DeWolfe)



















இளசுகளை இசையால் மயக்கும் ஐபாட் உருவாக்கிய முண்ணணி நிறுவனமான ஆப்பிளை உருவாக்க ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு ஆரம்பகாலத்தில் இன்னொரு ஸ்டீவ் துணையாய் உடனிருந்தார். (Apple-Steve Jobs and Steve Wozniak)





























ஏன்? வன்பொருள் வித்துவான் கார்டன் மூர்-க்கு கூட இண்டெலை நிறுவ நண்பன் ராபட் நோய்ஸ்-ன் உதவி தேவையாய் இருந்தது. (Intel-Gordon Moore and Robert Noyce)



Single Founder கம்பெனிகளை விட இது மாதிரி Co-Founder சகிதம் வந்து கலக்கிய கம்பெனிகளே அதிகம் போல் தெரிகின்றது.



தனியே, தன்னம் தனியே சாதிப்பதை விட இருவராய் அல்லது சிறு குழுவாய் அதிகம் சாதிக்கலாம் என இவர்கள் எடுத்துக்கூறுகின்றார்கள். நம்மூரில் கூட இன்போஸிஸ், சன் டிவி நெட்வொர்க் போன்ற பல வளர்ந்த நிறுவனங்களின் வரலாற்றை திருப்பி பார்த்தால் கடுமையாய் உழைத்த இருவர் அல்லது ஒரு குழு கண்ணில் அகப்படும்.



அகத்தில் அசாத்தியமானதொரு கருவோடு, கொஞ்சம் கனவுகள், பெரிய தரிசனங்களுடன் அலைகின்றீர்களா?. நல்லதொரு தோழனைத் தேடுங்கள். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என சும்மாவா சொன்னார்கள்?

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

நீங்கள் ஒருவேளை பாலிவுட் ரசிகர்களானால் அல்லது ஹோலிவுட் ரசிகர்களானால் இந்த தளம் உங்களுக்கு உதவலாம்.புதுப் புது பாலிவுட்,ஹாலிவுட் திரைப்படங்களின் ரேப்பிட் சேர் சுட்டிகள் அல்லது பிற கோப்பு கிடங்குகளின் சுட்டிகளை இனி தேடவேண்டியதில்லை.இங்கே அப்பப்போ சூடாக சுட்டிகளை தேடி சுட்டு போடுகிறார்கள்.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கொடுக்கப்பட்ட சுட்டியை சொடுக்கி கோப்புகளை இறக்கம் செய்ய வேண்டியது தான்.கூடவே மென்பொருள்கள்,இந்தி இசை ஆல்பங்கள் மற்றும் கேம்ஸ் மென்பொருள்களும் அடக்கம்
உதாரணமாக இப்போது இறக்கத்துக்கு இருக்கும் சில கோப்புகள் கீழே.

Kabul Express
Apna sapna money money
Renaissance
AutoCad 2007
Dhoom2
Cyber Sunday
Umrao Jaan
Vivah
JaaneMann
Charlies Angels
The Fast and the Furiousn Tokyo Drift
The Black Dahlia
Microsoft Office 2007 Enterprise Edition
FIFA 2007
Mistress of Spices etc

போன்றவை இறக்கத்துக்கு உள்ளன.You got to register first.

ஆமாம்.எல்லாமே சுட்டவை.DVD Rip.பதிப்புரிமை படி சட்டவிரோதமே
இது நானா
இது நானா
எனை நானே ரசித்தேனா
மெய் தானா மெய் தானா
நான் மீண்டும் பிறந்தேனா
கண்ணாளன் வந்த நேரம்
நான் காற்றாய் கரைந்தேனா
என் வாழ்வில் நிறம் இல்லை
அவன் வண்ணம் சேர்த்தானா
ஓ ஓ
இது நான்னா
இது நான்னா
எனை நானே ரசித்தேனா
ஆ ஆ
ஆ ஆ
ஆ ஆ

என் வானில் மேற்க்கே போன மேகம் ஒன்று
மீண்டும் வந்து சேர்ந்ததே
என் காட்டில் வெல்லம் போட்ட வெள்ளம் வந்து
வேரைத் தேடி பாய்ந்ததே
பார்வையில் இனிமேல் பூ பூப்பேன்
ஸ்பரிசத்தினாலே காய் காய்ப்பேன்
என் ஆசை கனவே
எனை ஆளும் திமிரே
உன் கையின் நீளம் காலின் நொறுங்கி
மார்பின் ரோமம் மன்மத மச்சம்
தனி தனியே ரசிக்க விடு
தவணையிலே துடிக்க விடு
இது நானா
இது நானா
எனை நானே ரசித்தேனா

வாடா வா
ஒற்றை கட்டில்
ஒற்றை தலையணை
ஒட்டி கொண்டு சேருவேன்
வாடா வா
கற்றை கூந்தலை உந்தன் இடுப்பில்
கட்டிக் கொண்டு தூங்குவேன்
சமைத்ததை தருவேன் ருசி விளங்க
சமைந்ததை தருவேன் பசி அடங்க
என் தென்னங் குளமே
தினம் துள்ளும் அணிலே
என் தென்னங் குளமே
தினம் துள்ளும் அணிலே

கட்டில் மேலே ரெட்டை வாலே
உடல் வளர்த்தேன் எனக்காக
உயிர் வளர்த்தேன் உனக்காக

இது நானா
இது நானா
எனை நானே ரசித்தேனா
மெய்தானா மெய்தானா
நான் மீண்டும் பிறந்தேனா
கண்ணாளன் வந்த நேரம்
நான் காற்றாய் கரைந்தேனா
என் வாழ்வில் நிறம் இல்லை
அவன் வண்ணம் சேர்த்தானா
ஓ ஓ
இது நானா
இது நானா
எனை நானே ரசித்தேனா

TAMIL

NYtimes மூலம் சுட சுட நியூயார்க் டைம்ஸ் படிக்க முடிகின்றது.
Stitcher மூலம் பிபிசி முதலான ரேடியோ பாட்காஸ்ட்களை எப்போவேண்டுமானாலும் கேட்க முடிகின்றது.
Coolris மூலம் இணையத்திலிருக்கும் படங்களை யூடியூப் வீடியோக்களை 3டி எபக்டில் திகட்ட திகட்ட முழு ஸ்கிரீனில் பார்க்கமுடிகின்றது.
NetNewswire மூலம் பல செய்தி ஓடைகளை(RSS) படிக்க உதவுகின்றது.
Dictionaire மூலம் தெரியாத பல வார்த்தைகளுக்கு அர்த்தம் காண முடிகின்றது.
Units மூலம் தெரியாத பல அளவீடுகளை தெரிந்த அளவுகளாக மாற்ற முடிகின்றது.
Wikipanion மூலம் விக்கிபீடியாவை எளிதாக படிக்க முடிகின்றது.
Airsharing மூலம் கணிணியிலிருக்கும் கோப்புகளை ஐபோனுக்கு கொண்டுவர முடிகின்றது.
Box.net மூலம் இணையத்தில் சேமித்து வைத்திருக்கும் கோப்புகளை பார்வையிட முடிகின்றது.
Fring மூலம் இலவச அல்லது குறைந்த விலையில் சர்வதேச போன்கால்கள் செய்ய முடிகின்றது.
Flashlight மூலம் இருட்டில் வெளிச்சம் கிடைக்கின்றது.
Voicenotes மூலம் நம் குரலை எளிதாக பதிவு செய்ய முடிகின்றது.
Google mobile app-பிடம் சொன்னாலே போதும்.அது தேடி தருகின்றது.
Google earth ஒரு அமேசிங் எக்ஸ்பீரியன்ஸ்.Google Map-ல் இப்போது Streetview-ம் தெரிகின்றது.
புதிதாக வந்திருக்கும் The weather Channel தி அல்டிமேட்.
NYtimes மூலம் சுட சுட நியூயார்க் டைம்ஸ் படிக்க முடிகின்றது.
Stitcher மூலம் பிபிசி முதலான ரேடியோ பாட்காஸ்ட்களை எப்போவேண்டுமானாலும் கேட்க முடிகின்றது.
Coolris மூலம் இணையத்திலிருக்கும் படங்களை யூடியூப் வீடியோக்களை 3டி எபக்டில் திகட்ட திகட்ட முழு ஸ்கிரீனில் பார்க்கமுடிகின்றது.
NetNewswire மூலம் பல செய்தி ஓடைகளை(RSS) படிக்க உதவுகின்றது.
Dictionaire மூலம் தெரியாத பல வார்த்தைகளுக்கு அர்த்தம் காண முடிகின்றது.
Units மூலம் தெரியாத பல அளவீடுகளை தெரிந்த அளவுகளாக மாற்ற முடிகின்றது.
Wikipanion மூலம் விக்கிபீடியாவை எளிதாக படிக்க முடிகின்றது.
Airsharing மூலம் கணிணியிலிருக்கும் கோப்புகளை ஐபோனுக்கு கொண்டுவர முடிகின்றது.
Box.net மூலம் இணையத்தில் சேமித்து வைத்திருக்கும் கோப்புகளை பார்வையிட முடிகின்றது.
Fring மூலம் இலவச அல்லது குறைந்த விலையில் சர்வதேச போன்கால்கள் செய்ய முடிகின்றது.
Flashlight மூலம் இருட்டில் வெளிச்சம் கிடைக்கின்றது.
Voicenotes மூலம் நம் குரலை எளிதாக பதிவு செய்ய முடிகின்றது.
Google mobile app-பிடம் சொன்னாலே போதும்.அது தேடி தருகின்றது.
Google earth ஒரு அமேசிங் எக்ஸ்பீரியன்ஸ்.Google Map-ல் இப்போது Streetview-ம் தெரிகின்றது.
புதிதாக வந்திருக்கும் The weather Channel தி அல்டிமேட்.
உலகின் மிக பழமையான நகரத்தின் பெயர் "ஊர்" (Ur) என்கின்றார்கள். இது பற்றிய குறிப்பு பைபிளிலும் உள்ளது. அட இது நம்ம தமிழ் வார்த்தையல்லவா?.

சிங்கம்+ஊர்=சிங்கப்பூர் ஆச்சுதாம். Singam+Ur=Singapore. உலகில் ஒரு நாட்டின் பெயரே தமிழில் இருக்கின்றது நமக்கு பெருமையல்லவா?.

யானையையே கொல்லும் பாம்பு - அதை ஆனை கொன்றான் எனலாம்- அது ஆனைகொண்டான் ஆகி- அப்படியே Anaconda ஆனது- திரைப்படமும் வந்தது.

அரிசி (Arici) Rice ஆனது
கட்டுமரக்காரன் Catamaran ஆனது
காசு Cash என ஆனது
சுருட்டு Cheroot ஆனது
குருந்தம் அல்லது குருவிந்தம் Corundum ஆனது
கயிறு Coir ஆனது
கறி Curry ஆனது
கிடங்கு Godown ஆனது
பச்சை இலை Perfume Patchouli ஆனது

முன்பு மயில்-ஐ தோகை என அழைத்தார்களாம்- இதில் தோகை எனும் வார்த்தை Tuki ஆகி பின் மயில் போல் சிறகு விரிக்கும் வான்கோழியை பார்த்து ஏமாந்து Turkey என்றார்கள்.

அது போல்
இஞ்சிவேரிலிருந்து Ginger-ரும் ,
பப்பாளியிலிருந்து Papaaya-வும்,
சக்கவிலிருந்து Jack-கும்,
தேக்குவிலிருந்து Teak-கும்,
கொய்யாவிலிருந்து Guava-வும்,
வெற்றிலயிலிருந்து Betel-லும் வந்தது.

அது போல
Vettri (வெற்றி) தான் Victory ஆனதோ?
Parisu (பரிசு) தான் Prize ஆனதோ?
Idhara (இதர) தான் Other ஆனதோ?
Sarkkarai (சர்க்கரை) தான் Sugar ஆனதோ?
Pathukavar (பாதுகாவலர்) தான் Father ஆனதோ?
Tharai (தரை) தான் Terra ஆனதோ?
Akkam (அக்கம்) தான் Aqua ஆனதோ?
Tholai (தொலை) தான் Tele ஆனதோ?

"காசுக்கு எட்டு" எனும் தமிழ் வார்த்தை Cashew nut ஆன கதையை இங்கே படியுங்கள்.
அதே கொல்லாங்கொட்டை கப்பலண்டி ஆன சுவாரஸ்ய கதையை இங்கே படியுங்கள்.

இப்படி தமிழின் மகத்துவம் சொல்லித்தீராதவை.
என்ன, இலங்கையிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் வரும் செய்திகள் தான் இப்போது நம்மை கவலையுற வைக்கின்றன.

புதன், 4 ஆகஸ்ட், 2010

1.ரன்னிங் ரேஸ்ல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் பிரைஸ் கைக்குத்தான் கிடைக்கும்.

2.தண்ணீரை தண்ணினு சொல்லலாம் ஆனா பன்னீர பன்னினு சொல்லமுடியாது.

3.உலகம் தெரியாம வளர்ரவன் வெகுளி.கிரிக்கெட் தெரியாம விளையாடரவன் கங்குலி

4.என்னத்தான் மீனுக்கு நீந்த தெரிஞ்சாலும் அதால மீன் குழம்புல நீந்த முடியாது.

5.குவாட்டர் அடிச்சிட்டு குப்புர படுக்கலாம் ஆனா குப்புர படுத்துட்டு குவாட்டர் அடிக்கமுடியாது

6.வாழ்க்கை தத்துவம்-நீ எவ்ளோ பெரிய டான்சர்ரா இருந்தாலும் உன் சாவுக்கு உன்னால ஆட முடியுமா?

7.பணம் வரும் போகும்
பதவி வரும் போகும்
கவலை வரும் போகும்
காதல் வரும் போகும்
ஆனா எயிட்ஸ் வரும் போகாது.

8.பாய்சன் 10 நாள் ஆனா பாயாசம் ஆகாது.ஆனா பாயாசம் 10 நாள் ஆனா பாய்சன் ஆயிடும்.

9.பஸ்ல நீ ஏறினாலும் பஸ் உன் மேல ஏறினாலும் டிக்கட் வாங்கப் போறது நீதான்.

10.சைக்கிள் கேரியரில் டிபன் வைக்கலாம்.ஆனா டிபன் கேரியரில் சைக்கிள் வைக்க முடியாது

11.டிக்கெட் வாங்கிட்டு உள்ள போறது சினிமா தியேட்டர்.உள்ளே போய்ட்டு டிக்கட் வாங்கறது ஆப்பரேசன் தியேட்டர்

12.வாயால நாய்-னு சொல்ல முடியும் ஆனா நாயால வாய்னு சொல்லமுடியாது.
1.காலண்டர் ஏன் ரொம்ப பந்தா பண்ணுது?
Because it has a lot of dates!

2.கம்ப்யூட்டர் ஏன் தும்மிட்டே இருக்கு?
virus காய்ச்சலாம்!

3.Why did the parents put their son in the fridge?
Because they didn't want to spoil him!

4.Who built the ark?
I have Noah idea!

5.Which is faster: heat or cold?
Heat, becase you can always catch a cold!

6.What do you call a row of dolls?
A Barbieque!

7.What is the most dangerous city?
Electricity!

8.What is the capital of Washington?
The W!

9.What is full of holes but can still carry water?
A sponge!

10.What starts with T, ends with T, and is full of T?
A teapot!

11.What word is always pronounced wrong?
Wrong.
பிரபல வாகனங்களும் அதன் பிறப்பிடமும்
Alfa Romeo-இத்தாலி
Audi-ஜெர்மனி
Austin-பிரிட்டன்
Benz-ஜெர்மனி
BMW-ஜெர்மனி
Bristol-பிரிட்டன்
Chrysler-அமெரிக்கா
FIAT-இத்தாலி
FORD-அமெரிக்கா
General Motors-அமெரிக்கா
HONDA-ஜப்பான்
Hyundai Motor Company (HMC)& Kia- தென் கொரியா
ISUZU-ஜப்பான்
Jaguar-பிரிட்டன்
Kia- தென் கொரியா
Lambert-அமெரிக்கா
LAND ROVER-பிரிட்டன்
Lexus-ஜப்பான்
Mazda-ஜப்பான்
Mercedes-ஜெர்மனி
Mitsubishi-ஜப்பான்
Opel-ஜெர்மனி
Peugeot-பிரான்ஸ்
Porsche-ஜெர்மனி
Renault-பிரான்ஸ்
Standard-பிரிட்டன்
Subaru-ஜப்பான்
Suzuki-ஜப்பான்
Toyota -ஜப்பான்
Volkswagen-ஜெர்மனி
Volvo-ஸ்வீடன்
எல்லா ஆணும் ஒரு நாள் கல்யாணம் பண்ணியே ஆகவேண்டும்.பின்னே என்ன சிலர் மட்டும் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாய் இருக்கலாமா?


*பிரம்மாச்சாரிகள் கட்டாயம் அதிகம் வரிகட்ட வேண்டும்.பின்னே அநேகர் நொந்து போய் இருக்கும் போது இவர்கள் மட்டும் சந்தோஷமாய் இருப்பது நியாயமல்ல-ஆஸ்கார் வைல்ட் (மனுஷன் அனுபவபட்டிருக்கார்)

*தீவிரவாதம் பற்றி நான் கவலைப்படுவதில்லை.எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடமாகிறது-ஸாம் கினிசன்

*உங்கள் மனைவியின் பிறந்த நாள் நினைவுக்கே வருவதில்லையா?.அதை நினைவில் வைக்க ஒரு எளிய வழியுள்ளது.ஓரு முறை மறந்து பாருங்கள். :)

*திருமணமானவன் ஆயுள் அதிகம் என்பதெல்லாம் உண்மை அல்ல.ஆயுள் அதிகம் போல் தோன்றுகிறது.அவ்வளவுதான்.

*ஒரு ஆண் தனியாய் இருக்கும் வரை அவன் முழுமை அடையாதவன்.திருமணம் ஆனவுடன் சகலமும் முடிந்துபோய்விடுகிறது.

*பணத்துக்காக கல்யாணம் பண்ணாதே.இப்போதெல்லாம் சுலபத்தில் கடன் (அட்டை)கிடைக்கிறது.

*கார் கதவை மனைவிக்கு ,கணவன் திறந்து விடுகிறான் என்றால் ஒன்றை புரிந்து கொள்.ஓன்றில் கார் புதுசு.இல்லை மனைவி புதுசு.

*காதலுக்கு கண்ணில்லை.கல்யாணம் கண்ணை திறந்து விடுகிறது.

*பெண்துணை இல்லாத ஆண்,சைக்கிள் இல்லாத மீன் போல-யூ2

*இரண்டு விதத்தில் பெண்ணைவிட ஆண் கொடுத்து வைத்தவன்.தாமதமாக திருமணம் செய்கிறான்,சீக்கிரமாய் செத்துப்போகிறான் -ஏச்.எல்.மென்கென்

*பிரம்மச்சாரிகளுக்கு பெண்களைப் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கிறது.இல்லை என்றால் அவர்களும் திருமணம் செய்திருப்பார்களே-ஏச்.எல்.மென்கென்

*நானும் எனது மனைவியும் இருபதுவருடங்கள் சந்தோசமாய் வாழ்ந்தோம்.அப்புறமாய் இருவரும் சந்தித்தோம்.- ரொட்னெய் டய்ன்செர்பீல்ட்

*ஒரு நல்ல மனைவி தான் தவறு செய்யும் போது தன் கணவனை மன்னித்து விடுகிறாள்.-மில்டொன் பெர்லெ

*மகிழ்வான மணவாழ்வின் ரகசியம்,இன்னும் ரகசியமாகவேயுள்ளது- கென்ன்ய் யங்மன்

*உன்மனைவியை எவனாவது திருடினால் விட்டுவிடு.அப்படி தான் சரியாய் பழிவாங்கவேண்டும்.

*கடந்த இருவருடமாக என் மனைவியிடம் நான் பேசவில்லை.அவளை ஏன் நான் தடுக்க வேண்டும்.

*என் பெண்நண்பி என்னை கவர்ச்சியாய் இருக்க சொன்னாள்.இன்னும் இரு பெண்நண்பிகளை சேர்த்துக்கொண்டேன்

*கிரெடிட் அட்டை காணாமல் போன என் நண்பன் போலீஸில் புகார் செய்யவேயில்லை.மனைவியைவிட குறைவாய் தான் அத்திருடன் செலவளிக்கிறானாம்

*கல்யாணம் என்னும் கல்லூரியில் ஆண் தன் Bachelors பட்டத்தை இழக்கிறான்.பெண் தன் Masters பட்டத்தை பெறுகிறாள்.
முதலாம் ஆண்டு ஆண் பேசுகிறான் பெண் கேட்கிறாள்
இரண்டாம் ஆண்டு பெண் பேசுகிறாள் ஆண் கேட்கிறான்
மூன்றாம் ஆண்டு இருவரும் பேசுகிறார்கள் பக்கத்து வீட்டார் கேட்கின்றார்கள்.

*"எல்லாமேஇருந்தது.கைநிறைய பணம்,தேவதை போல ஒரு பெண்,அழகிய வீடு..ஊப்ஸ்..எல்லாமே ஒரே நாளில் போய்விட்டது."
"என்னாச்சு"
"என் மனைவி அதை கண்டுபிடித்துவிடடாள்"

*ஒருவன் சொன்னான் "என் மனைவி ஒரு தேவதை."
இன்னொருவன் சொன்னான் "நீ அதிஷ்டகாரன்.என் மனைவி இன்னும் உயிரோடு இருக்கிறாள்"
கடி வாங்கலையோ கடி
1.இரட்டை குழந்தைகளில் ஒருத்தன் பெயர் பீட்டர் என்றால் இன்னொருத்தன் பெயர் இன்னா?
Repeater

2.கடலை பாத்து tide என்னா சொல்லி இருக்கும்?
Long time no sea

3.கணக்கு புத்தகம் ஏன் பெஜாரா இருக்கு?
It has got lot of problems to solve

4.முருகனால நெட் ப்ரொஸ் பண்ணமுடில ஏன்?
Because mouse is with pillaiyaar

5.காக்கை ஏன் கருப்பா இருக்கு?
Because its mummy and dady is black

சனி, 31 ஜூலை, 2010

Related Topics: Tamilblog, Tamilblogs, தமிழ், Ashok, Jalsa, Ib06indic, Chennai, Pkp, Ib06, JeyamohanTop Tamil Blogs SitesThe Best Tamil Blogs Sites on the WebYou are in: Top Sites > Index > T Tamil Bloggers ListTamil Bloggers ListTop site in: Blog Tamil, Tamil Blogs, Tamilblogstamilblogs.blogspot.comIs this a Top Tamil Blogs Site? Similar Sites to tamilblogs.blogspot Enhance your browsing. Download our free Firefox add-on. Learn More Top Searches1Music 2News 3Video 4Games 5Blog We Recommend1Papercraft 2Cake 3Love 4Sugar 5Simpsons 2Doing Jalsa and Showing JilpaDoing Jalsa and Showing Jilpakrishashok.wordpress.comIs this a Top Tamil Blogs Site? 3tamilmanam.net : tamil blogs aggregatorweb portal for tamil blogstamilmanam.netIs this a Top Tamil Blogs Site? 4tamilmaNam.NET : Tamil Blogs Aggregatorதமிழ் வலைப்பதிவுகள் அரங்கம்thamizmanam.comIs this a Top Tamil Blogs Site? 5lazygeek.netcelebrating literature, fine arts and ofcourse life - lazy geek a.k.a guru subramanian is from chennai living in the showery seattle a software consultant by destiny loves creative arts yaps about…lazygeek.netIs this a Top Tamil Blogs Site? 6wordpress › errortamilblogstamilblogs.comIs this a Top Tamil Blogs Site? 7gilli.ingilli.ingilli.inIs this a Top Tamil Blogs Site? 8jeyamohan.injeyamohan.injeyamohan.inIs this a Top Tamil Blogs Site? 9யுவகிருஷ்ணாயுவகிருஷ்ணாluckylookonline.comIs this a Top Tamil Blogs Site? 10Thiratti.com - Tamil Blog Aggregator | திரட்டி.காம் - தமிழ் பத�Thiratti.com - Tamil Blog Aggregator | திரட்டி.காம் - தமிழ் பத�thiratti.comIs this a Top Tamil Blogs Site? Thank you for your suggestion.
Suggest a New Top Tamil Blogs Site
Top Site URL
Verificaton Code
Topics Related to "Tamil Blogs" Tamilblog Tamilblogs தமிழ் Ashok Jalsa Ib06indic Chennai Pkp Ib06 JeyamohanFind the best top sites quickly, straight from our browser toolbar©2010 SimilarGroup. Our Products:SimilarSites.comSimilarWeb Add-onToolbarContact UsAboutPrivacyTerms
Tamil Bloggers List

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ங | ச | ஞ | ட | ண | த | ந | ப | ம | ய | ர | ல | வ | ழ | ள | ற | ன | ஜ | ஷ | ஸ | ஹ |

--------------------------------------------------------------------------------

1 அ. ரா. மணிகண்டன் வானவில் சிறுகதைகள் - கவிதைகள்
2 அ.பசுபதி kalapathy kalapathy
3 அ.விஸ்ணு மனம்கவர்ந்த திரை பாடல்கள் சில.... மனம்கவர்ந்த திரை பாடல்கள் சில....
4 அகஸ்டாலின் கோயில் போஸ் என் பதிவுகள் எழுதப்போகிறேன்
5 அக்கினிக்குஞ்சு அக்கினிக்குஞ்சு நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே; வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்; துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத் துயர்ப்படுவார்; எண்ணிப் பயப்படுவார்
6 அக்பர் பாட்சா சுவடுகள் கதை, கவிதை, சமூக, அரசியல் மற்றும் ஆன்மீக கட்டுரைகள்
7 அஜீவன் AJeevan சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..........
8 அஞ்சலி ஒரு குட்டித் தேவதையின் தோட்டம் எனது சின்ன தோட்டம்
9 அண்ணாகண்ணன் அண்ணாகண்ணன் வெளி அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
10 அண்ணாகண்ணன் அண்ணாகண்ணன் கவிதைகள் அண்ணாகண்ணன் கவிதைகள்
11 அண்ணாகண்ணன் அமுதசுரபி 'புகப் புகப் புக இன்பமடா போதெல்லாம்!'- பாரதி
12 அண்ணாகண்ணன் அண்ணாகண்ணன் நேர்காணல்கள் செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்
13 அண்ணாகண்ணன் அண்ணாகண்ணன் புகைப்படங்கள் காலத்தை அறிவிக்கும் காட்சிகள்
14 அதிரைக்காரன் வெட்டிப்பேச்சு இதுதான் என்று இல்லை அனைத்தயும் பற்றி விவாதம் பண்ணலாம்
15 அனாதை ஆனந்தன் Anathaiyin Valaip pathivukaL Anathaiyin Valaip pathivukaL
16 அனி மனைவிமார்களே கவனிக்கவும் குடும்ப மேன்மைக்கு பாடுபடுவோம்
17 அனிதா அனிதா என்னை கவர்ந்த பாடல்வரிகள்
18 அனுராக் அகரவலை மனவெளித் துளிகளும் சில மதிவழிப் பதிவுகளும்...
19 அனுராக் அனுராகம் கதையும் கவிதையும் எழுத்தில் வனைந்த இன்னும் சிலதும்...
20 அனுராக் வலைமேடை என் உள்ளம் எழுப்பிய வினாக்களுக்கு விடை தேடி வலையில் கட்டிய விவாதமேடை
21 அனுராக் வலை-உலா...! இணையத் தமிழோடு இயங்கும் மனசு...
22 அன்பு குப்பை - குப்பை மட்டுமல்ல... குப்பை - குப்பை மட்டுமல்ல...
23 அன்பு THILEEPAN தமிழரசன்
24 அபிமன்யு puthaga vimarsanam book review
25 அபிமன்யு எண்ணங்களின் வண்ணங்கள் மனதில் தோன்றியவை
26 அபூ ஆதில் ஆசாத் என்னோடு என்னோடு உங்களை இணைக்கும் எண்ணங்களோடு...
27 அபூ உமர் இனிய மார்க்கம் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கான பதில்கள்
28 அபூ உமர் நபிமொழிகள் நபிமொழிகளின் தொகுப்பு
29 அபூ உமர் எழுதுகோல் ஆயுதம் ஒடுக்கப்பட்டோருடன் இணை, ஓட்டுக மதவெறி
30 அபூ முஹை விமர்சனம் - விளக்கம் இஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டுகளும் பதில்களும் - தமிழில்
31 அப்துல் குத்தூஸ் இந்துக்களே! விழிமின்! எழுமின்! விழிப்புணர்வு கட்டுரை
32 அப்துல் குத்தூஸ் தமிழகத்தில் இஸ்லாமியர் இஸ்லாம்
33 அப்துல்லாஹ் இஸ்லாம் ஓர் முழு அறிமுகம் விமர்சனம், விளக்கம்
34 அப்பாவி தெரியாமத்தான் கேக்குறேன்! தெரியாததை கேட்டு தெரிஞ்சுக்கணும்கிறதுதான் நம்ம பாலிசி!
35 அப்பாவி அப்பாவி எனக்குத் தெரிந்த நியாயம்
36 அமரன் Amaran Yennoda Yennangal
37 அமல சிங் எண்ண அலைகள் தமிழர் ஒருங்கிணைப்பு
38 அமைதிநேசன் விஷமங்களும் தக்க பதில்களும் இஸ்லாம் பற்றிய நிகழ்கால விமர்சனங்களுக்கு தக்க பதில்கள்
39 அரசு அரசு ரசிகன் ஒரு சோமாறி
40 அரவிந்தன் Nattunadappu A life of a Tamilian in Karnataka state
41 அருட்பெருங்கோ அமராவதி ஆத்தங்கரை ஆத்தங்கரைப் புலம்பல்கள்
42 அருணன் அலையோசை என் உணர்வுகளும் பத்திகளும்
43 அருணா ஸ்ரீனிவாசன் அலைகள் Aruna's Writings in Tamil
44 அருண் கிருஷ்ணன் Thamizh ThoNdan தமிழ் தொண்டன்
45 அருண் வைத்யநாதன் Arun Views Infotainment page for Politics,Cricket,Poems and Articles
46 அருண்குமார் அம்மா தமிழை வளர்க்க என்னால் முடிந்த சிறு முயற்சி!
47 அருமை அபத்தம் ரம்பம்
48 அருள் குமார் உணர்வின் பதிவுகள் எண்ணிலடங்கா உணர்வுகளில் என்னை பாதித்த, சொல்ல முடிந்த சில...
49 அருள் செல்வன் கந்தசுவாமி அண்டை அயல் கரவா கரைந்துண்ணும் காக்கை
50 அருள் செல்வன் கந்தசுவாமி அண்டை அயல் கரவா கரைந்துண்ணும் காக்கை
51 அருவி அருவி அறிந்து கொண்டவைகளும் அவை தொடர்பாக என்னுள் எழுபவைகளும்.................
52 அலெக்ஸ் பாண்டியன் Alex Pandian - காவிரிக் கரையோரம்..! அக்கம் பக்கம்
53 அல்வாசிட்டி அண்ணாச்சி போட்டுத் தாக்கு!!!! குற்றம் சொல்லித் திரிவதே எம் தலையாய பணி
54 அல்வாசிட்டி அண்ணாச்சி போட்டுத் தாக்கு!!! தசையினை தீச்சுடினும்
55 அல்வாசிட்டி சங்கர் இது என் வாழ்க்கை !!! இது என் வாழ்க்கை !!!
56 அல்வாசிட்டி விஜய் டிஜிட்டல் அல்வா தமிழில் டிஜிட்டல் அல்வாதுண்டுகளாக
57 அழகப்பன் அழகப்பன் அழகப்பன்
58 அவலங்கள் அவலங்கள் அவலங்கள்


1 ஆசாத் எண்ணம் எண்ணங்களை எழுதுகிறேன்
2 ஆசிப் மீரான் "சாத்தான்"குளத்து வேதம் ஒரு கிராம வாசியின் புலம்பல்கள் அவனது அடர்த்தியான மௌனம் கலைத்துப் புறப்பட்டு வருகிறது - உயிர்த்தெழும் மரத்தைப் போல
3 ஆச்சிமகன் கற்றலின் இனிமை கல்வி, அறிவியல், சமுதாயம் குறித்த எனது பார்வைகள்
4 ஆதிபன் கவிதை நான் கவிதை என்றுகிறுக்கியவை
5 ஆதிரை உள்ளல் ஆதிரையின் எண்ணங்கள்
6 ஆந்ரேயி குழவி தெரியவில்லை...குழப்பமாக இருக்கிறது
7 ஆனந்தன் JAFFNA TAMIL
8 ஆனந்த் இது எனது புகைபடங்களுக்கான வலைபூ எனது புகைபடங்கள
9 ஆனந்த் வினாயகம் ஆனந்த் புலம்பல்கள் photos, tamil news, cricket
10 ஆரோக்கியம் எண்ணம் = ஓ - போ எண்ணம் = ஓ - போ
11 ஆரோக்கியம் உள்ளவன் உள்ளொன்றும் புறமொன்றும் ஒடுக்கப்பட்டவனின் உரிமைக்குரல்
12 ஆர். வெங்கடேஷ் நேசமுடன் மடல் இதழ்
13 ஆற்றல் ஆற்றல் ஆற்றல் பொதுவாக மறைந்திருக்கும் - மிகவும் பிராயத்தனம் செய்து தான் வெளிக்கொணரவேண்டும்
14 ஆழியாள் விசேஷம் ஏதும் இல்லை ..............................................................................................!!&??


1 இ.இசாக் இ.இசாக் தமிழும் தமிழ் சார்ந்தவைகலளும்
2 இக்பால் ஆற்றங்கரை மணல்கள்... ஒரு கிராமத்தின் அமைப்பும், மக்களும்.
3 இசை விசிறி எண்ணப் பறவை சிறகடித்து மேற்கத்திய இசை பற்றி எழுதவொரு முயற்சி
4 இட்லி இட்லி வடை இட்லி வடை
5 இணைய குசும்பன் இணைய குசும்பன் என் கடன் குசும்பு செய்து கிடப்பதே... ஒன்றே இணையம் ஒருவனே குசும்பன்
6 இண்டி ராம் இண்டி ராமின் எண்ணங்கள் எதைப் பற்றியாவது எனக்குத் தோன்றியவை
7 இந்திராசெந்தில்ராஜ் அவர்கள்....? அவர்கள்....அவர்களால்......அவர்களுக்காக.....
8 இந்துராணி கருணாகரன் கமகம சுவை
9 இயற்பியல்2005 இயற்பியல் :: 2005 இயற்பியல் வருடம் 2005
10 இர. அருள் குமரன் உள்ளத்து ஓசை இர.அருள் குமரனின் உள்ளத்து ஓசை, பகிர்ந்துகொள்ளப்படும் எண்ண அலைகள்.
11 இர.வினோத் குமார் விசை எண்ணச் சிதறல்கள்...
12 இரத்தினவேலு அறிவாணந்தம் அறிவாணந்தம்
13 இரத்தினவேலு எனது எண்ணங்கள் Just another Tamilpayani.com weblog
14 இரமேசு தியாகராசன தமிழ் மொழி தமிழ் மொழியின் வரலாறு
15 இரவிகுமார் தூரிகை படிக்க, பேச, எழுத. இப்படி ரொம்பபிடித்த விஷயத்தை இதோ இந்த வலைப்பூவின் வாயிலாக வடிக்கப்போறேன்.
16 இரவிக்குமார் நீங்கள் கேட்டவை passtime
17 இரவிக்குமார்.பா சிந்தனைத்துளிகள் கவிதை
18 இரா.ஜெகன் மோகன் மனமும் நினைவும் மனமும் நினைவும்
19 இரா.முருகன் வேம்பநாட்டுக் காயல் தமிழ் - மலையாளக் கலை, இலக்கிய, கலாச்சார, வரலாற்றுப் பலகணி
20 இராஜ.தியாகராஜன் தமிழிலக்கியம் இலக்கியம்/திஸ்கி/யுனிகோட்
21 இராஜ.தியாகராஜன் தமிழ்மொழி தமிழ்க் கவிதைகள்
22 இராதாகிருஷ்ணன் நினைவோடை படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...
23 இராம.கி. வளவு Blog in TSCII
24 இராமநாதன் தெரியல! My personal biased opinions on the world in general. News, Stuff and Movies. Content appropriately bloated with sky-high ego and vanity.
25 இறை நேசன் பள்ளி சிறுவனும் கழைக்கூத்தாடிகளும் பள்ளி சிறுவனும் கழைக்கூத்தாடிகளும்
26 இறைநேசன் ஏகத்துவம் கோணல் பார்வை பார்க்கும் நேசகுமார்.
27 இளங்கோ கிறங்கியதும் கிறுக்கியதும் Poems, Essays, Short stories
28 இளவஞ்சி ஒலகம் பெர்சு மாமே... இலக்கியதரம்னு டுபாக்கூர் இல்லை! சிற்றிதழ் வணிக-இதழ்னு பம்மாத்து இல்லை! முன்/பின்னவீனத்துவம்னு அலப்பரை இல்லை! திரும்பி வருமோன்னு கவலை இல்லை! எல்லாதுக்கும் மேல ஆட்டோல ஆள் வரும்னு பயமும் இல்லை! அட்ச்சிகலாம்.. அப்பால புட்சிக்கலாம்... சலம்பலாம் வாங்க! மக்களே...
29 இளா Lollu Gounder Lollu Gounder
30 இளைஞன் குறும்பூ குறும்புக்-காய் ஒரு குறும்-பூ
31 இஸ்மாயில் என் மனவானில்.... படித்தவை,பார்த்தவை,பாதித்தவைகள் பற்றியது


1 ஈரோடு Erode Films Anything & everything
2 ஈழநாதன் ஈழநாதம் ஈழத்து இலக்கிய வரலாறு,ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகள் நூல்கள் பற்றிய அறிமுகம்,
3 ஈழநாதன் கவிதை எனது கவிதைகள்,நான் ரசித்த கவிதைகள் மற்றும் ஈழத்து இலக்கியங்கள் பற்றிய தகவல்கள்
4 ஈழநாதன் படிப்பகம் ஈழத்து நூல்கள்:படைப்பு,பார்வை
5 ஈழநாதன் படைப்பு ஈழத்து /புலத்து சிற்றிதழ்களின் அறிமுகமும் பகிர்வும்
6 ஈழநாதன் சலனச்சுருள் சலனப்படங்களின் அறிமுகமும் பகிர்வும்
7 ஈழமதி தமிழ் வாழ்வு அரசியல்,கலை இலக்கியம்.
8 ஈழம்-புனர்வாழ்வு சுனாமி பேரழிவின் பின்-ஈழம் சுனாமி பேரழிவின் பின்-ஈழம்
9 ஈஸ்வர ப்ரஸாத் அனுபல்லவி என் அனுபவ பல்லவி
10 ஈஸ்வர ப்ரஸாத் அனுபல்லவி என் அனுபவ பல்லவி


1 உதயகுமார் பாலக்கரை பாலனின் பால்ய பார்வை இளவயது அனுபவங்கள்
2 உதயகுமார் நளினசேகரன் தமிழ் குட்டிக் கதைத் தொகுப்பு எனக்குப் பிடித்த குட்டிக் கதைகள். (என் சொந்தக் கதைகள் அல்ல)
3 உதயகுமார். ந. என் கருத்துக்கள் நாட்டு நடப்புக்களைப் பற்றி என் கருத்துக்கள்
4 உதவி உதவி இலங்கையில் யுத்தத்தினாலும், வேறு காரணிகளாலும் தமது பெற்றோர், உறவினர்களை இழந்து அல்லது வருமானம் பெறும் குடும்ப உறுப்பினரை இழந்து சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு, கிடைக்கின்ற உதவியை சேர்ப்பிக்க உதவி- உருவாக்கப்பட்டுள்ளது.
5 உனைதா சில பேரின் சில பக்கங்கங்கள் சில பேரின் சில பக்கங்கங்கள்
6 உலகன் நெஞ்சு பொறுக்குதில்லையே அப்பாவி மானுடன் சந்திக்கும் அநீதிகள்


1 எதிரி என்றும் அன்புடன் வாழ்க்கை வாழ்வதற்கே
2 என்னமோ போங்க என்னமோ போங்க என்னமோ போங்க, நல்லா இருந்தா சரி.
3 எம். கே. குமார் நெஞ்சின் அலைகள் கரை கடந்த அலைகளின் தொகுப்பு
4 எம்.ஈ.ஏ எனது கிறுக்கல்ஸ் சுதந்திரமான எனது எழுத்து முயற்சிகள்
5 எம்.எஸ்.கே. சாளரம் என் வீட்டிற்கு ஒரு web சாளரம
6 எம்.குமரன் கர்நாடகம் தந்த காவிரி வெள்ளம் கர்நாடகம் அதிக அளவு நீரினை தமிழகத்திற்கு தந்துவிட்டதாக கணக்கு எழுதிவிடும்..!
7 எல் எல் தாஸு எண்ணங்கள் எண்ணங்கள்
8 எல்லாளன் மறுபடி வந்திருக்கிறான். . . * * * * *
9 எழில் எழிலுலா பயணக் கட்டுரைகள்
10 எஸ் ராமகிருஷ்ணன் அட்சரம் எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்துலகம்


1 ஏகலைவன் ஏகலைவன் தலித் இலக்கியம், தலித் அரசியல், தமிழக அரசியல்


1 ஐநோமீநோ ஐநோமீநோ நான் இல்லை நான் இல்லை
2 ஐயப்பன் ennangalum ezuththukalum few of my thoughts


1 ஒரு பொடியன் பொடியனின் மனப்பதிவு பொடியனுக்குப் பட்டவை அல்லது பொடியனின் அலசல்கள்
2 ஒரு யாழ்ப்பாணத்தான் ஈழ அலசல் இலங்கை அரசியல்
3 ஒலிக்கும் பறை ஒலிக்கும் பறை அரசியல்,உரிமை


1 கங்கா தினம் ஒரு ஸென் கதை தினம் ஒரு ஸென் கதை - ஸென் மத துறவிகளின் சிரிக்க மற்றும் சிந்திக்க வைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு ஆகும்
2 கணபதி நாளை நமதே இனி வரும் காலம் மிக இனிதாயிருக்கும் என்று எண்ணும் மனிதனின் பக்கம்
3 கணேசன் நினைவுகள் இந்த வலைப்பதிவு எனது அனுபவங்களையும் ஆதங்கத்தையும் பதிவுசெய்ய
4 கணேசு விடியல் சேதி சொல்ல வந்தேன்யா பாசக்காரப் பயல்களுக்கு
5 கணேஷ் ராம் விர்சுவல் கொலு நவராத்திரி 2005 க்கு புதுமையான் முயற்சி
6 கணேஷ் வெங்கிட்டு தமிழன் தகவல்கள்.....தலைவலிகள் travails of life...one at a time
7 கண்ணன் கண்ணனின் வலைமொட்டுகள் வாழ்க்கை, நிகழ்வுகள் மற்றும் பயணங்கள் பற்றிய எனது பதிவுகள்
8 கண்ணன் யளனகபக கண்ணன் தட்டினது...
9 கண்ணன் அரட்டைக் கச்சேரி கண்ணனின் இசை அரட்டைகள்...
10 கண்ணன் இராமநாதன் அறுபத்தைந்தாம் கட்டம் ஒரு செஸ் பாமரனின் புலம்பல்கள்
11 கண்ணம்மா கண்ணம்மா கவிதைகள்
12 கண்ணாடி கண்ணாடி என் எண்ணங்களும் , அதற்கு நான் அடிக்கும் வண்ணங்களும்
13 கண்ணாடி கண்ணாடி நகைச்சுவை,அரசியல்,திரைப்படம்
14 கனவு பனை அரசியல்,மாற்றுக்கருத்துகளின் தேட்டம்.
15 கனா கனா புதிய கனா
16 கமீலியான் - பச்சோந்தி வண்ணக்குழப்பம் ஒரு தெளிவைத் தேடி ...
17 கயல்வழி விழி சிறுவிழி
18 கயல்விழி விழி விழி
19 கரிகாலன் என் மனவெளியில்! அ-முதல் ஃ -வரை
20 கரு.மலர்ச் செல்வன் வள்ளுவம் நினைவாற்றலையும் சிந்தனைத் திறனையும் வளர்க்க..
21 கருணாகரமூர்த்தி Thamizhkudil Short stories & Poetries
22 கருணாநந்தன் தூண்டில் சமூகம்,அரசியல்,கலை-இலக்கியம்.
23 கருப்புபையன் விடாது கருப்பு கண்டதைச் சொல்கிறேன்!
24 கறுப்பி சொல்ல நினைப்பவை கறுப்பு
25 கற்பகம் யசோதரா ஆதிப் பாடல்கள் வைப்பு
26 கலாநிதிச்செல்வன் எண்ணத் தெளிவு தனியொரு மனிதனின் சமுதாய பார்வை
27 கலை அஞ்சு நச்சத்திரம் அவரவர் பதிவை அவரே தட்டினால் அஞ்சு நச்சத்திரப்பதிவாகுமாம் அது
28 கலையரசி கிறுக்கல்கள் எனது பக்கத்திற்குள் நுழைந்திருக்கும் உங்களுக்கு எனது அன்பான வணக்கம்!
29 கலையரசி சும்மா சும்மா!! சும்மா எதையாவது கிறுக்குவதுதான் நோக்கம்!
30 கலையழகன் Genral General
31 கல்வெட்டு கல்வெட்டு நல்லவற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவருவோம்.
32 கவிதன் கவிதை தோட்டம் கவிதை, ஈழ்ம், காதல், புரட்சி
33 கவிமதி கவிமதி ஒரு பூவிலிருந்து பூமி முழுவதற்கும் தூவும் மகரந்த சாரல்.
34 காங்கேயன் காங்கேயனின் கனவுத்தளம் கனவுகள் கலைவதில்லை - நானும் டேங்கோவும்
35 காசி அருணாசலம் யாழினும்மென்மொழி எனது பார்வையில்
36 காசி ஆறுமுகம் சித்தூர்க்காரனின் சிந்தனைச் சிதறல்கள் காசி ஆறுமுகத்தின் சிந்தனைச் சிதறல்கள். யுனிகோட் தமிழ் இயங்கு எழுத்துருவில்.
37 காசி ஆறுமுகம் தமிழ்மணம் - என்ன நடக்குது இங்கே? Whats going on in thamizmaNam.com? தமிழ்மணம் தளத்துக்கு வெளியிலிருந்து ஒரு வலைப்பதிவு
38 காஞ்சி பிலிம்ஸ் காஞ்சி பிலிம்ஸ் புலம்பல்
39 கான்டிவிட்டி சிந்தனைகள் - கருத்துகள் என்னுடய சிந்தனைகளையும் கருத்துகளையும் இந்த வலைப்பதிவின் மூலம் உங்கள் முன்வைக்கிறேன்.
40 காயத்ரி யாழிசை நான் பார்த்த,ரசித்த,என்னை பாதித்தவை பற்றி எழுதப்போ
41 காருண்யன் கொன்பூசியஸ் Poetry Tamil Poetry
42 கார்த்திகேயன் கதவு ....வந்து எட்டிப் பாருங்கள்
43 கார்த்திகேயன் ராமசாமி Karthik's Nothing But Blogs Anything and Everything
44 கார்த்திகேயன், எஸ் PonniyinSelvan's Blog
45 கார்த்திக் தூறல்கள் வாழ்க்கைத் துளிகள்
46 காலம் செல்வம் வாழும் தமிழ் வட அமெரிக்காவில் தமிழ்ப்புத்தகங்கள் கிடைக்குமிடம்
47 காவலன் காவலன் எனது பார்வையில் நீங்கள் பார்த்தவையும் கேட்டவையும்
48 கி.பி. அரவிந்தன் கி.பி.அன் எனது எண்ணங்கள் - எனது எழுத்துக்கள்
49 கிச்சா கிச்சாவின் கிறுக்கல்கள் என் சிந்தனைகளின் டிஜிட்டல் வடிவம்
50 கிச்சு கிச்சுவின் எண்ண அலைகள் கிச்சுவின் எண்ண அலைகள்
51 கிரிக்கெட் கூட்டுப்பதிவு கிரிக்கெட் கிரிக்கெட் செய்திகள், அலசல்கள், ஆட்ட வர்ணனைகள்
52 கிருபன் Kirubans கிருபன்ஸ்
53 கிருஷாந்தன் NORMANDS செய்திகள் NORMANDS செய்திகள்-கிரிக்கற் சார்பான தகவல்கள்
54 கிருஷ்ணசைதன்யா பஞ்சுமிட்டாய் ப்பா...
55 கிளியே எடி சகி நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, வஞ்சனை சொல்வாரடீ - கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி.
56 கிஸோக்கண்ணன் கணிதம் வாசித்தவை, பாதித்தவை, எனது ஆக்கங்கள், விமர்சனங்கள், கருத்துக்கள்...
57 கீதா GeethaS Kirukkals Geethas Little World
58 கீதா கீதாவின் கிறுக்கல்கள் என் மனதை பாதிக்கும் எதுவும் இருக்கும் இங்கே..
59 குகைமனிதன் குகைமனிதன் குகைமனிதனின் பதிவுகள்
60 குட்டிஹமாம் குட்டிஹமாம் வந்திருக்கேன் என் எண்ணங்கள்
61 குணா இளவேனில் ஆற்றினும் அருவி சுகம்
62 குமரன் என் கவிதைகளும் கருத்துக்களும் குழந்தைகளிடம் உள்ள ஆர்வம் போல் ஆர்வம் கொண்ட ஒருவனின் கிறுக்கல்கள்
63 குமரன் Vishnu Chitthan Periyaazhwaarin Paadalkal
64 குமரன் Koodal My thoughts
65 குமரன் Abiraami Bhattar Abiraami Anthaathi
66 குமரன் Maduraiyin Jothi Natana Gopaala Nakayi Swamikal Pattri
67 குமரன் பஜ கோவிந்தம் பஜ கோவிந்தத்தின் பொருள்
68 குமரன் திருவாசகம் ஒரடோரியொ திருவாசகம்
69 குமரன் பாட்டுக்கொரு புலவன் பாரதி மகாகவி சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்
70 குமரன் கோதை தமிழ் திருப்பாவை விளக்கம்
71 குமரவேல் ஜகசிவமணி குமகன் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள், படங்கள், அரசியல், தத்துவம் பற்றி ஆய்வு
72 குமரிமைந்தன் குமரிமைந்தன் படைப்புகள் தமிழ், தமிழர் வளம்பெற
73 குமரேசன் உணர்வுகள் கவிதை மற்றும் பல்சுவை
74 குமரேஷ் மனிதம் சமூகப் பார்வை, மனிதத் தன்மை பற்றி...
75 குமரேஸ் குமரேஸ் அறிந்ததும் அறியாததும்
76 குரல் குரல் குரலில்லாதவர்களின் குரல்
77 குருவிகள் தேடற்சரம் பலதும் பத்தும்
78 குழப்பி நெத்தியடி எனக்கு நானே அடித்துக் கொள்பவை
79 குழலி குழலி பக்கங்கள் சூடான இலக்கிய,அரசியல் விவாதங்கள், எமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள்
80 குழுப்பதிவு தமிழ் திறமூல மென்பொருட்கள் பதிவு தமிழ் திறமூல மென்பொருட்கள் பற்றிய கூட்டுப்பதிவு.
81 குழைக்காட்டான் குமிழி கற்றவை கண்டவை... என பலதையும் பகிர முயற்சிக்கிறேன்...
82 குழைக்காட்டான் சிதறல்கள் சிந்தையை கவர்ந்தவை சிதறல்களாக...
83 கூட்டு வலைப்பதிவு அறிவியல் அறிவியல், பொறியியல் மற்றும் நுட்பவியல் கட்டுரைகள்
84 கூட்டு வலைப்பதிவு தராகி தர்மரத்தினம் சிவராம்
85 கூட்டுப்பதிவு ட்சுனாமி மீட்பு பணி ஒருங்கிணைப்பு நண்பர்களே! இது ஒரு கூட்டு முயற்சி. நீங்களும் உங்களை இணைத்துகொள்ளுங்கள்!
86 கூட்டுவலைப்பதிவு கோயிஞ்சாமி க்ளப் உருப்படியாகச் சிந்திக்கும் கோயிஞ்சாமிகளின் மடம்
87 கூத்தாடி கூத்தாடியின் சிறைப்புறம என் எண்ணச் சிதறல்கள்
88 கே கே நகர் கிறுக்கன் கே கே நகர் கிறுக்கன் (K.K.Nagar Kirukan) இசை,சினிமா, உலகவியல் மற்றும் சுவையான தகவல்கள்
89 கே. செல்வப்பெருமாள் சந்திப்பு சந்திப்போம் - உரையாடுவோம் நாட்டு நலனை, அரசியலை, கல்வியை, விஞ்ஞானத்தை, விளையாட்டை, கவிதையை, இலக்கியத்தை... முடிவுக்கு வருவோம் மாற்று சிந்தனையுடன் கூடிய ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கிட.
90 கே. செல்வப்பெருமாள், திருவொற்றியூர், சென்னை-19 தேடல் தேடல்... அறிவுத் தேடல், விஞ்ஞானத் தேடல், அரசியல் மாற்றத்திற்கான தேடல், சமூகமாற்றுக்கான தேடல்...
91 கே.ஜே.ரமேஷ் Abithacharan அறிந்ததைப் பகிர்தல்
92 கேவிஆர் கொஸப்பேட்டை டாட் காம் கொஸப்பேட்டை குப்ஸாமியின் குசும்புகள்
93 கேவிஆர் கேவிஆர் பக்கங்கள் எனது எண்ணங்களை உங்கள் முன் வைக்க ஒரு சிறு இடம்
94 கைகாட்டி ஓடை தமிழ் நதியின் ஒரு சிறு கிளை
95 கொண்டோடி ஆழிப் பேரலை ஆழிப்பேரலைகள் முல்லையில் நடத்திய கோரத்தாண்டவம்
96 கொழுவி கொழுவுதலும் தழுவுதலும் கொழுவுதலும் தழுவுதலும்
97 கோ.இராகவன் மகரந்தம் மகரந்தம்.. ஈக்கள் அறியாமல் முதுகில் சுமப்பது. இருப்பதையும் ஏற்காது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. எனது கருத்துகளும் பொதுவாக ஒவ்வாதவை. அதனால்தான்......
98 கோ.இராகவன் இனியது கேட்கின் தமிழ்ப்பாக்களோ இனிமை. அந்தப் பாக்களை விளக்கச் சொல்வது இன்னும் இனிமை.
99 கோ.இராகவன் சுவைக்கச் சுவைக்க சுவைக்கச் சுவைக்கச் சிறந்த சமையல் குறிப்புகள். சுவைத்துப் பாருங்களேன்.
100 கோ.கணேஷ் CACHE - my cerebrations daily happenings, my interstss
101 கோ.கணேஷ் பக்திப் பாடல்கள் நின்னடி தவிர வேறொன்றறியேன்
102 கோ.வி.முத்துகுமார். பயணங்களில்... UniCode முறையில்.. தமிழில் பதிவு செய்யப்படும் பதிப்புகள்..
103 கோகுல் குமார் பூக்காடு தோணுறத சொல்றேன்
104 கோசல்யா kavithai kavithaikal
105 கோபி கணங்கள் அது ஒரு கனாக்காலம்
106 கோபி ப்ருந்தாவனம் கோபியின் எண்ணமும் எழுத்தும்
107 கோபிப்பவர் கோவிங்க அடப் போங்க! நான் ரொம்ப கோபமா இருக்கேன்!!!
108 கோபு என்னவிலை அழகே புரிந்து
109 கோமான் பாலாஜி கோமானின் எழுத்துக்கள் இராமயணம் மற்றும் இலக்கியம்
110 கோமான் பாலாஜி திவ்விய பிரபந்தம் நாலாயிர திவ்விய பிரபந்தம் யூனிகோடில்
111 கோமான் பாலாஜி என் கவிதைகள் கவிதைகள்
112 கோமான் பாலாஜி சமூக பார்வை சமூக பார்வையில் நான்
113 கோமான் பாலாஜி படித்துத் தொகுத்தவை ஒரு வாசகனின் மனப்பதிவு


1 சகாயன் ஸ்ரீரங்கன் Kinderweb குழந்தை மனம்
2 சக்தி சிந்தும் துளிகள் நேசிக்கும் அனைத்தும், எழுத்தில்.
3 சங்கரய்யா கிறுக்கனின் கிறுக்கல்கள் புதிய தேடல்கள்
4 சங்கர்.எஸ் எனது பார்வையில் நான் கற்றதும், பெற்றதும், ரசித்ததும், பாதித்ததும் ஆகியவற்றை
5 சஞ்ஜீத் Through My looking Glasses என் சிந்தனைகள், சிந்தித்த மொழியில் ...
6 சஞ்ஜெய் என் எண்ணங்கள் என் எண்ணங்கள்
7 சதயம் இயன்ற வரை இனிய தமிழில் தமிழை....தமிழால்....தமிழாய்.....
8 சதீஷ் படித்ததும் பிடித்ததும் படித்ததும் பிடித்ததும்
9 சதீஷ் பசிக்கு பலகாரம்... தமிழ்நாட்டு அரசியல், சினிமா மற்றும் என் கருத்துக்கள்
10 சத்தி சிந்தும் துளிகள் சிந்தும் துளிகள்
11 சத்தி சக்திதாசன் எண்ணங்களாலே பாலம் அமைத்து .... கவிதை , கதை , கட்டுரை. எண்னப் பரிமாறல்
12 சத்யன் ஓவியம் ஓவியம்
13 சத்யா முகவரி.......... தொலைந்து போனேனென்று நினைத்திருந்தேன்.....இதுதான் என் முகவரி என்று தெரியாமல்.....
14 சத்யா பொட்டீகடை யார் வேண்டுமானாலும் வரலாம், என்ன வேண்டுமானாலும் பேசலாம்...பிறர் மனது புண்படாதவரை!
15 சந்திரசேகரன் கிருஷ்ணன் அஞ்சறைப் பெட்டி சந்திரசேகரன் கிருஷ்ணன்-இன் அஞ்சறைப் பெட்டி
16 சந்திரலேகா புத்துயிர்ப்பு புத்துயிர்ப்பு
17 சந்திரவதனா படித்தவை பிடித்தவை - ரசித்தவை - சுவைத்தவை - பாதித்தவை
18 சந்திரவதனா புனர்வாழ்வு புனர்வாழ்வுச் செய்திகள்
19 சந்திரவதனா பெட்டகம் பன்முக ஆய்வுகள், கண்டுபிடிப்புகள், கட்டுரைகள், மருத்துவம்.............
20 சந்திரவதனா மகளிர் பெண்களுக்கான - உடல் உள ஆரோக்கியக் குறிப்புகள்
21 சந்திரவதனா மாவீரர்கள் வரலாறு
22 சந்திரவதனா மனஓசை உணர்வுகள், சிந்தனைகள், நினைவுகள், கட்டுரைகள், கவிதைகள்
23 சந்திரவதனா பெண்கள் ஆய்வுகள், கட்டுரைகள்
24 சந்திரவதனா துணுக்குச் செய்திகள் துணுக்குச் செய்திகள்
25 சந்திரவதனா குழந்தைகள் தாய்ப்பால் முதல் முதலுதவி வரை, உளவியல்
26 சந்திரவதனா சாதனை பெண்கள் தடை உடைத்து தலை நிமிர்ந்த பெண்கள்
27 சந்திரவதனா தீட்சண்யம் மறைந்த கவிஞர் தீட்சண்யனின் கவிதைகள்
28 சந்திரவதனா ஈழகானங்கள் ஈழத்துப் பாடல்கள். திரைப்படம், மெல்லிசை, பொப், பரணி... பாடல்கள்.
29 சந்திரவதனா மருத்துவம் மருத்துவக் குறிப்புகள்
30 சந்திரவதனா சினிமாப் பாடல்கள் திரைப்படப் பாடல்கள்
31 சந்திரவதனா புகைப்படங்கள் என் கமராவுக்குள் சிக்கியவை
32 சந்திரவதனா சிறுகதைகள் என்னைக் கவர்ந்த சிறுகதைகள்
33 சந்திரா இரவீந்திரன் ஆகாயி இலக்கியம்
34 சந்தோஷ சந்தோஷ் பக்கங்கள படித்ததில் பிடித்தவை
35 சந்தோஷ் குரு கசாகூளம் Potpourri - Medley - Collage - கசாகூளம்
36 சனியன் சத்தமில்லாமல் ஒரு சங்கு என் உள்மன உணர்வுகளின் குமுறல்கள்.
37 சன்னாசி சிக்கல் வேறென்ன?
38 சமுத்ர குப்தா Bharatha Varsh Blog for Indian Kings,Generals, and Wars
39 சமுத்ரா மெய்கீர்த்தி சத்தியத்திற்கு சமுத்ராவால் வந்த சோதனை
40 சம்பத் குமார் யதிராஜ விம்ஸதி மணவாள மாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஸதி
41 சயந்தன் Sajee About all
42 சயந்தன் சாரல் சிந்தனைகளின் சிதறல்
43 சரவணன் திரை அலசல் கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஒளிப்பதிவு இசை எடிட்டிங் நடனம் நடிப்பு இத்தனையும் சேர்ந்து கண்ணில் விரிவது திரைப்படம்
44 சரவணன் அண்ணாமலை கிறுக்கல்கள் சும்மா என் கைக்கு தோணியதை தட்டச்சு செய்கிறேன்
45 சரவணன் மு.கே. பதிவுகள் என் மனதில் பட்டவற்றை இங்கே பதிந்து வைக்கிறேன்.
46 சரவ் BBSarav's Blogs Tamil Blogs about things I see, learn and enjoy.
47 சராளினி - முற்றம் - நண்பர்கள் கூடும் இடம்
48 சர்தார் சுவாரஸ்யமான விஷயம்! சுவாரஸ்யமான விஷயம்!
49 சற்குணதேவா அஞ்சல் விதிமுறைகள் stamps
50 சலாஹ¤தீன் நினைவலைகள் நினைவில் நின்றவை
51 சலாஹ¤த்தீன் கேள்விகளும் பதில்களும் இஸ்லாம் குறித்த கேள்விகளுக்கு பதில்கள்
52 சலாஹுத்தீன் பொருளியல் குறிப்புகள் பொருளியல் உலக நிகழ்வுகள
53 சாகரன் சாகர அலை கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!
54 சாந்தி ரமேஷ் வவுனியன் உயிர் வாசம் மாவீரர்க்கு சமர்ப்பணமாய் உயிர்வாசம் உயிர்கொள்கிறது
55 சாய் கிருஷ்ணா மித்ராவின் வலைப்பதிவு தமிழ் மீது உள்ள ஆசையினால், ஆர்வத்தினால் வலையில் பதிக்க வந்துள்ளேன்.
56 சிகிரி வெளிச்சம் வெளியே இல்லை எனக்குப் பிடித்த கவிதை
57 சிகிரி இன்றொரு பொன்மொழி இன்றொரு பொன்மொழி
58 சிங். செயகுமார் பனித்துளி பயணங்கள்.............. உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...
59 சிங்கை நண்பர்கள் சிங்கை முரசு சிங்கப்பூர் கலை இலக்கிய நண்பர்களின் முரசம்
60 சித்தன் நீலமலர்கள் கவிதை
61 சித்தாமுரளி தமிழ் மக்களின் வலைப்பூக்கள் அனைவருக்கும் தமிழ் மக்களின் வலைப்பூக்களின் அன்பான வணக்கம்
62 சித்து சித்துவின் வலைப்பதிவு வெல்லத் தமிழ் இனி வெல்லும் தமிழ்
63 சித்ரன் புள்ளி சித்ரனின் சிந்தனைக் குறிப்புகள்
64 சித்ரா ரமேஷ் Autograph My Thoughts and Creations
65 சிந்து என் மனவானில் என் எழுத்துக்கள் - கவிதைகள், கதைகள்
66 சினேகிதி சினேகிதி தத்தக்க பித்தக்க
67 சினேகிதி சித்திரம் பேசுகிறது சித்திரம்
68 சின்ன பையன் என்னை பற்றி சில பார்த்தவை,கற்றவை,கேட்டவை
69 சின்னபொண்ணு சின்னபொண்ணு நடை, உடை, பாவனை, ஆடை, ஓடை, ஆசை, நிராசை, கனவு, நனவு, ஆசாரம், விசாரம், விகாரம், எண்ணம், திண்ணம், கடமை, காயம், பட்டறிவு, தொட்டறிவு, ஏக்கம், தூக்கம், அங்கம், அங்கதம், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, உயிர்ப்பு, நாய், சிங்கம், நகை, சுவை, நகைச்சுவை, கழுதை, புலி, கழுதைப் புலி
70 சின்னவனின் சின்னவனின் கிறுக்கல்கள சின்னவனின் கிறுக்கல்கள
71 சிமுலேஷன் அஸ்ஸாம் அனுபவங்கள் இந்தியாவின் வடகிழக்கிலுள்ள ஏழு சகோதரிகளில் மூத்தவள்தான் அஸ்ஸாம்.
72 சியாம் panamkuudal panamkuudal
73 சிறீகாந்தலக்சுமி அருளானந்தம் கருத்தூண் பல்சுவை
74 சிறுவர் பாடல்கள் சிறுவர் பாடல்கள் வயதிலும் மனதிலும் இளையருக்கு...
75 சிவகுமார் Katchi Pizhai Katchi Pizhai
76 சிவகுமார் TONE Thoughts On NEt
77 சிவகுமார் கா. இதுவும் கடந்து போகும் விழுந்ததும்.... எழுந்ததும்.... விழுந்தெழுந்ததில் தெரிந்ததும்....
78 சிவகுமார் சுப்புராமன் சித்த மருத்துவம் நான் படித்தறிந்த சில சித்த மருத்துவ குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
79 சிவகுமார் சுப்புராமன் தமிழில் குறுந்தகவல் தொகுப்பு தமிழ் நகைச்சுவை குறுந்தகவல் தொகுப்பு
80 சிவசங்கரன். இரா. Siva's Blogs Selected Reflections of my thoughts
81 சிவராஜ் தாகம் புகைப்படக்கலை
82 சிவா கீதம்..சங்கீதம் திரை இசை - எனது பார்வையில்
83 சிவா சிவா புராணம் என் புராணங்கள்..எண்ணங்கள்
84 சிவா பெரியண்ணன் sivaperianan கவிதைகள் poems, thoughts ....
85 சீனு கோழி கிருக்கல் கோழி கிருக்கல்
86 சீமாச்சு My Thoughts My Thoughts
87 சு. க்ருபா ஷங்கர் S Krupa Shankar's thamizh blog உதவாக்கரை
88 சுகா எழுதுவது சுகா தமிழ்
89 சுகீ சுகீ சுகீ
90 சுடர் சுடர் செஞ்சுடரின் சிந்தனைகள்
91 சுதந்திரா தாய்மடி வாசம் உணர்வின் அதிர்வுகள் உயிராகும் நினைவுகளும் நிசங்களும்
92 சுதர்சன் வானம்பாடி இது பற்றி அது பற்றி என்றில்லாமல் எல்லாவற்றைப் பற்றியும்!
93 சுதர்சன் கோபால் கொஞ்சம் கொஞ்சம் படித்த,கேட்ட,பார்த்த,உணர்ந்த நிகழ்வுகள் இங்கே கொஞ்சம் கொஞ்சம் பதிவுகளாய்...
94 சுதாகர் க. enngangalsudha My thoughts and impacts of life on it
95 சுதாகர் க. srimangai My thoughts and impacts of life on it
96 சுதேசமித்திரன் அர்த்தமண்டபம் சுதேசமித்திரன்
97 சுந்தரமூர்த்தி மு. எண்ணக் குமிழ்கள் TN லிருந்து TN வரை - கண்டதும், கேட்டதும், படித்ததும், நினைத்ததும்
98 சுந்தரம்பிள்ளை திருப்பரங்குன்றன் Kunran's Tamil Poems தமிழ்க் கவிதைகள்
99 சுந்தரராஜன் என் மூக்கு Opinions are like Noses. Everyone has one and they all SMELL
100 சுந்தரராஜன் பத்மநாபன் அகர முதல சிந்தனையூற்றுக்களை எழுத்துளி கொண்டு நான் செதுக்கும் தமிழ்ச் சிற்பம் இது
101 சுந்தரராஜன் பத்மநாபன் (அ)கவிதை எனது சிந்தனையில் உதித்த (அ)கவிதைகள் இவை
102 சுந்தரவடிவேல் சுந்தரவடிவேல் காட்சியும் கனவும் எழுத்தும்
103 சுந்தர் பத்மநாபன் ராஜ பார்வை விழியில் விழுந்து இதயம் நுழைந்து மனதில் தங்கிய காட்சிகள்
104 சுபமூகா சுபமூகா பக்கங்கள் சுபமூகாவின் எண்ணங்கள்.. சுபமூகாவின் எண்ணங்களைப் பற்றி உங்கள் எண்ணங்கள்.. இன்ன பிற..
105 சுபா ஜெர்மனி நினைவலைகள் ஜெர்மனியில் நடக்கின்ற நிகழ்வுகள், மற்றும் எனது இனிய அனுபவங்கள் இங்கு பதிவு காண்கின்றன. எனது மற்றைய வலைப்பூவான Germany in Focus பகுதியின் தொடர்ச்சி இந்த பதிவகம். முந்தைய பதிவுகளைக் காண அங்கே செல்லலாம். { Germany in Focus - http://subaonline.log.ag }
106 சுப்ரமணியன் இந்து மதத்தில் அறிவியல் இந்து மதத்தில் அறிவியல்
107 சுரதா ஆயுதம் தமிழ்த் தட்டல் தகவல்கள்
108 சுரதா மருத்துவம் நல செய்திகள்
109 சுருசால் தடாகம். சமுதாயம், அறிவியல், இசை (வலைப்பதிவில், இலக்கணப் பிழை இருந்தால் மன்னிக்கவும்).
110 சுரேஷ் மெளனம் மெளனத்தயும் பேசவைப்பது
111 சுரேஷ் இங்கிலாந்திலிருந்து சுரேஷ் இங்கிலாந்திலிருந்து சுரேஷ்
112 சுரேஷ் -எ- ஞாயிரு அசுரன் பகுத்தறிவு இந்த வலைப்பதிவு அடிப்படையான மானுட கேள்விகளுக்கு பகுத்தறிவுடன் *குழுவாக* விடை கான விளைகிறது.
113 சுரேஷ் கண்ணன் பிச்சைப்பாத்திரம் எல்லாம் எல்லோருக்கும்
114 சுரேஷ்பாபு பினாத்தல்கள் சும்மா.. நானும் இருக்கேன் இணையத்திலே!
115 சுவேதா வானவில் கவிதை
116 செங்கள்ளுச் சித்தன் சித்தன் கொட்டில் செங்கள்ளுச் சித்தன் அவ்வப்போது எழுதுவது இங்கு சேகரமாய்
117 செந்திலான் செந்திலானின் சிந்தனைகள் சிறுகதை மற்றும் பயணக் கட்டுரைகளின் தொகுப்பு
118 செந்தில் யாத்திரீகன் போய்சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்திரிகன் நான், செல்லும் பயணங்களையும், சந்திக்கும் மனிதர்களையும் பின்னால் என் நினைவுக்காக, என் மொழியில் பதிவு செய்கின்றேன்.
119 செந்தில் குமார் தீந்தமிழ் பார்க்க...படிக்க...சிந்திக்க...
120 செந்திவேல் அருள்செல்வன் தாமிரபரணி Lab journal of Manonmaniam Sundaranar University, Tirunelveli
121 செந்து என் சிந்தனை எல்லாம்
122 செல்வநாயகி நிறங்கள் வழியெங்கும் சிதறிக்கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள்
123 செல்வம் கொப்பரமுழுங்கி வடிகால்
124 செல்வராஜ் என் எண்ணக் கிறுக்கல்கள் Tamil Blog of Selvaraj in Unicode format
125 செல்வா எண்ணச்சிதறல்கள் எண்ணச்சிதறல்கள்
126 சேகு சேகு சந்திக்க- சிந்திக்க
127 சேது நெல்லை மைந்தன் நெல்லை அரிய தகவல்கள்
128 சோழியான் சோழியான் மன உணர்வு
129 சொ மணியன் வெண்பாப் பதிவு (Venbaa Blog) எனக்குத் தெரிந்த வெண்பாவில், எனக்குத் தெரிந்த உலகம்! (Daily happenings in Tamil Venbaa)
130 சொக்கலிங்கம் \\\\\\\\\\\\\\\'சொ\\\\\\\\\\\\\\\' பேசுகிறேன்! கொஞ்சம் சிந்திக்கிறேன்!!!
131 சோபனா வண்ணப் பூங்கா. கதைகள்
132 சோமிதரன் சோமிதரன் All about
133 சோலை தமிழ்ச்சோலை என் எண்ணச்சிதறல்களை ஹைக்கூ,புதுக்கவிதை,மரபுக்கவிதை வடிவங்களில் பதிவு செய்கிறேன்.
134 சௌந்தர் சௌந்தர் : வலைப்பதிவு எண்ணங்கள்; பார்த்தது, படித்தது மற்றும் கேட்டதில் ரசித்தது.


1 ஞானசேகர் நிராகரிக்கப்பட்ட சாட்சிகள் கொஞ்சம் கனவு நிறைய நிஜம்
2 ஞானதேவன் ஞானதேவன் வானுக்கும் பூமிக்கும் நடுவில்...
3 ஞானதேவன் தப்பு தப்பைத் திருத்திக்கொள்!
4 ஞானபீடம் ஞானபீடம் ஞானபீடம்
5 ஞானவெட்டியான் ஞானவேள்வி ஞானம்
6 ஞானவெட்டியான் ஞானவெட்டியானின் ஞானவேள்வி ஞானம்
7 ஞானவெட்டியான் ஞான முத்துக்கள் ஞானத்துளிகள்
8 ஞானவெட்டியான் சிவவாக்கியர் பாடல்கள் சித்தர் இலக்கியம்
9 ஞானவெட்டியான் ஞானரத்தினக் குறவஞ்சி சித்தர் இலக்கியம்
10 ஞானவெட்டியான் ஞானம் எட்டி ஞானம்
11 ஞானவெட்டியான் பிரபுலிங்க லீலை ஞானம்


1 டண்டணக்கா டண்டணக்கா 1-10-11-10-00-10-11-01-0
2 டயனில் ஜீவா தோணி நாவாந்துறை டானில் ஜீவா எழுதுவது
3 டாக்டர் அ.சாந்தா MKU Journalism Dept Lab Journal Dept Communication Lab Journal
4 டானியல் ஜீவா thonee danieljeeva
5 டி ராஜ் வசந்தத்தைத் தேடி... வசந்தத்தைத் தேடி களைத்த என் கால்கள் ஓய்வேடுக்கும் போது என் கைகள் கிறுக்குபவை.
6 டி.பி.ஆர். ஜோசஃப் என்கதையுலகம் சிறுகதை, கவிதை
7 டி.பி.ஆர்.ஜோசஃப் என்னுலகம் சிறுகதை,என் பார்வை
8 டிசே படம் காட்டுதல் அல்லது பயமுறுத்துதல் Photos & Photos Only
9 டிசே தமிழன் DISPASSIONATED DJ எல்லாம்... எதுவும்..
10 டிஜிடல் தமிழன் Tamil Sangam Bringing Tamil to the next generation
11 டுபாக்கூர் பார்ட்டி டுபாக்கூர் எல்லாமே டுபாக்கூர்
12 டுபுக்கு டுபுக்கு என்னத்த சொல்ல?
13 டோண்டு Dondus dos and donts Dondu's Musings


1 த.கருப்புசுவாமி பதிவுகள் என் புத்தகப் பயணங்களின் பதிவுகளே இந்த வலைப்பூ! நான் படிக்கும் புத்தகங்கள் என் வாழ்க்கையை அமைப்பதாக நான் உறுதியாக எண்ணுகிறேன். என்னையே அறியாமல் என வாழ்க்கைய புத்தகங்கள் செழுமைப்படுத்தியுள்ளன. உங்கள் வாழ்க்கையையும் புத்தகங்களால் செழுமைப்படுத்த இயலும்!
2 தங்கமணி E(n)-முரசு சக்தி யென்ற மதுவையுண் போமடா! தாளங்கொட்டித் திசைகள் அதிரவே.
3 தங்கவேல் புளியமரம் தனித்திரு, விழித்திரு, பசித்திரு - வள்ளலார்
4 தமிழன் லெமுரியா கண்டம் - உண்மையா ? லெமுரியா கண்டம்
5 தமிழரசன் Tamileelam Tamileelam
6 தமிழரசன் தலித் இலக்கியம் தலித் இலக்கியம்
7 தமிழரசு பார்வைகள் செய்தி விமர்சனம்
8 தமிழினி தமிழினியின் தளம் வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்
9 தமிழினி காதல் கவிதைகள் வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்..!
10 தமிழினி நினைவேடு பதிவுகள்
11 தமிழீழம் தமிழீழம் தமிழீழதகவல்
12 தமிழீழம் தமிழீழம்செய்திகள் தமிழீழம்
13 தமிழ் கிறுக்கன் பாலம் தமிழ் சிந்தனைகள் மற்றும் அனுபவ பகிர்வு
14 தமிழ்சசி சசியின் டைரி என் சிந்தனைகள்
15 தமிழ்சசி பங்குச் சந்தை அழகுத் தமிழில் பங்குச் சந்தை குறிப்புகள்
16 தமிழ்ச்செல்வன் ஆசிரியர் துணைவன் தமிழ்மொழி, தமிழக ஆசிரியர்கள், தமிழ்ச்சமுதாய சிக்கல்கள் தொடர்பானவை
17 தமிழ்ப்பாம்பு கீத்துக்கொட்டாய் பயாஸ்கோப்பு உலக சினிமா பற்றிய தமிழ் வலைப்பதிவுகளின் தொகுப்பு
18 தமிழ்ப்பாம்பு கீத்துக்கொட்டாய் பயாஸ்கோப்பு உலக சினிமா பற்றிய தமிழ் வலைப்பதிவுகளின் தொகுப்பு
19 தமிழ்வாணன் தமிழ்வாணன் தமிழ்வாணன்
20 தமிழ்வாணன் திருவள்ளுவர் தமிழ் எழுதி திருவள்ளுவர் தமிழ் எழுதி
21 தமிழ்வாணன் மதவடி மதவடி
22 தம்பிகள் அறிவுமதி -வருமானம் போனாலும் தமிழ் மானம் போகக்கூடாது-என்பதை உயிர்மூச்சாய் கொண்டு இயங்கும் இலட்சியக் கவிஞர்
23 தயாள சுந்தரம். க சுந்தரத் தமிழிலே..... என் எழுத்து இகழேல்!
24 தருமி தருமி கேள்விகள் கேட்பதன்றி வேரொன்றும் அறியேன், வலைஞர்களே..!
25 தருமி தருமி கேள்விகள் கேட்பதன்றி வேரொன்றும் அறியேன், வலைஞர்களே..!
26 தர்சன் தமிழ்க்கவிதை என்னுடைய சொந்த ஆக்கங்களும் என் நன்பர்களுடைய ஆக்கங்களும் நான் படித்துச்சுவைத்தவை.....
27 தர்சன் இணைப்பு பயனுள்ள இணைய இணைப்புக்கள்
28 தாசரதி முயற்சிகள் தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் -குறள் 619
29 தாணு நட்புக்காக நட்புக்காக
30 தான்யா காகித மலர்கள் பலதும் பத்தும்
31 தாரா சிறகுகள் நீண்டன எண்ணச் சிறகுகளை நீட்டி இணைய வெளியில் பறக்கிறேன்...
32 தினேஷ் தினேஷின் பார்வை அவ்வப்போது என் கண்ணிலும் என் கேமராவிலும் பதியப்பட்டவை
33 தினேஷ் ம. தமிழன் தமிழன் கருத்துக்கள்
34 திரன் திறன் About all
35 திரிபுரசுந்தரி கொடைக்கானல் இலக்கியம் மற்றும் சமூக நோக்கு
36 திரு ஆலமரம் ஆலமரம்போல் வாழவேண்டும்!!
37 திரு பனித்துளி கவிதை புலம்பல்கள்
38 திருகாந்தன் thamizhil (e) galatta thamizhil (e) galatta
39 திருக்குறள் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு திருக்குறள் மாநாடு 2005 Thirukkural Conference 2005
40 திருவள்ளுவர் ஆலமரம் சிந்தனையின் பட்டறை! கருத்துக்களின் ஊற்று!! கவிதைகளின் குடியிருப்பு!!!
41 திலகபாமா சூரியாள் சொல் புதிது சுவை புதிது, ஜோதிமிகு நவகவிதை என்றும் புதிது
42 திலீபன் நதி கதை கவிதை கட்டுரை
43 திலீப்குமார் ஆல்தோட்டபூபதி சினிமா பற்றி எழுதுபவன் சாதா பூபதி சாமி பற்றி எழுதுபவன் விபூதி எல்லாத்தயும் கலந்து கட்டி எழுதுபவன் தான் இந்த ஆள்தோட்டபூபதி
44 திவாகரன் நிலா முற்றம் தமிழ் வலைப்பூ
45 தீபக் வெங்கடேசன் காற்று வெளியிடை... எண்ணச் சிதறல்கள் - கண்டதும் கேட்டதும்!
46 தீபன் தேவதாசன் வணிகமடல் வணிகத்துறை சார் தகவல்கள்
47 தீவு theevu தீவு
48 துர்கா துர்கா துர்கா
49 துர்க்கா கிளைகளின் மறைவில் வரிகள்
50 துளசி கோபால் துளசி தளம் துளசிதளம்
51 தெக்கிக்காட்டான் ஏன் இப்படி... எனக்குத் தெரிந்தவரை
52 தெய்வீகன் அங்குசம் தெய்வீகனின் ஆக்கங்கள்
53 தெருத்தொண்டன் தெருத்தொண்டன் நடிப்புச் சுதேசிகள்
54 தெருவாசி தாங்க முடியல சில தாங்க முடியாத சமாச்சாரங்கள்...சர்ச்சைகள்..சுட்டவை..சுடாதவை
55 தேசிகன் தேசிகன் வலைப்பதிவுக்கு வாரீகளா தேசிகன் வலைப்பதிவு
56 தேசிகன் தேசிகன் பக்கம் தேசிகன் பக்கம்
57 தேனீ அகராதி தமிழ் - ஆங்கில அகராதி
58 தேவன்கள் நினைவுகள் என்றென்றும் நினைவுகள் என்றென்றும்
59 தோட்டம் துளிர் சிறுவர் ஆக்கங்கள்
60 தோழன் தோழனின் தும்மல் தூறலில் நனைந்த தோழன் துவட்டமுன் தும்ம வருகிறான்
61 தோழா எதிர்வினை.. சமூகம், அரசியல் மற்றும் இலக்கிய நடப்புகளின் எதிர்வினையே 'தோழனின்' பதிவுகள்
62 தோழி தோழி.காம் செய்திகள் தோழி.காமின் புதிதாகச் சேர்க்கப்படும் உள்ளடக்கம் பற்றிய வலைப்பதிவு
63 தோழியர் தோழியர் யாதுமாகி நின்றாய்!
64 த்ரிவிக்கிரமன் த்ரிவிக்கிரமன் வேதங்கள் மற்றும் புராணங்கள்
65 த்ரிவிக்கிரமன் பகவத் கீதை பகவத் கீதை பாரதியின் மொழிபெயர்ப்பில்...


1 ந.இரத்தினவேலு ennar குட்டிராஜா
2 நஞ்சுண்டோர்க்கினியன் முறைசாராக் குறிப்புகள் படைப்புப் பிளாகு, சித்திரப் பிளாகு
3 நட்சத்திரன் செவ்விந்தியன் எப்போதாவது ஒருநாள் கவிதைகள், கட்டுரைகள், குறிப்புகள்
4 நட்புடன் ஐ.என்.எல்.கே அமைதியும் அன்பும் ஈழமும் சிங்களமும்
5 நண்பன் நிகழ்வு நண்பனின் செய்திகளும்,சிந்தனைகளும்
6 நந்தன் மூக்குக்கண்ணாடி என் பார்வையின் பதிவுகள்
7 நந்தலாலா நந்தலாலா தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
8 நந்தா நிலா முற்றம் மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு !
9 நமச்சிவாயம் நமச்சிவாயா நடப்பு விவகாரங்கள்!
10 நம்பி Vaanthi vaanthi
11 நரேஸ்குமார் வளர்ந்தவன் கற்றது கைமண்ணலவு
12 நற்கீரன் எனக்குள் உலகம் பகிர்தல், புரிதல், தேடல்
13 நல்லடியார் எதிரொலி கருத்துக்களால் ஒரு களம் அமைப்போம்
14 நல்லார்க்கினியன் சுட்டுவிரல் நல்லவற்றை சுட்டுவதும் அல்லாதவற்றை குட்டுவதும் எம் பணி
15 நளாயினி தாமரைச்செல்வன் உயிர்கொண்டு திழைத்தல்....! எனது எண்ணங்கள்
16 நளாயினி தாமரைச்செல்வன். விடியலின் கீதம் இத்தளம் சிறுவர் சிறுமியரின் திறமைகளை வெளிப்படுத்துவதில் அதிக அக்கறை கொண்டு நறுமணம் பரப்பவுள்ளது. நீங்களும் இச் சிறார்களோடு கை கோர்த்துக்கொள்ளுங்கள்.
17 நவன் Navan's weblog Navan's weblog
18 நவீன் ப்ரகாஷ் ஆதலினால் பணிமொழி வாலெயிரு ஊறியநீர்
19 நா . கண்ணன். K's world From the Desktop of Na.Kannan - in Tamil Unicode.
20 நா . கண்ணன். Third Eye Photo Journal
21 நா. கணேசன் தமிழ்க் கொங்கு மனங்கவரும் மரபு இலக்கியம், புத்திலக்கியக் கடலிலிருந்து சிறு துளிகளைச் சுவைப்போம்
22 நா.கண்ணன் நா.கண்ணன் கலை, இலக்கியம், கணினி, அறிவியல், சேர்ப்பு
23 நாகரத்தினம் இந்தியாவில் எய்ட்ஸ் இந்தியாவில் எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் தொடர்பான செய்திகள், தகவல்கள், கருத்துக்கள் உள்ளிட்டவற்றை வழங்கும் இருமொழி வலைப்பூ
24 நாகூர் ரூமி NagoreRumi's Writings All writings like poems, stories, articles in Tamil and English
25 நாடோடி ஈழத்து அகதியின் நாடோடிப் பயணம் ஈழத்து அகதியின் நாடோடிப் பயணம்
26 நாடோடி நாடோடிப் பதிவுகள் கண்ணில் பட்டது; காதில் கேட்டது
27 நாத உபாசணை Nadopasana Carnatic music songs which I like
28 நாராயணன் உருப்படாதது இந்த பக்கம் என் Alter-ego ;-)
29 நாலாவது கண் நாலாவது கண் ஒரு பத்திரிகையாளனின் பார்வை
30 நாலு பேர் நாங்க நாலு பேர் நாங்கள் தனியர்கள். ஆனால் இனியர்கள்.
31 நித்தியகீர்த்தி அம்மா தாய் அன்பு
32 நித்தியா சுடுவானம் மயிலிறகாய் வருடிய நினைவுகள்
33 நித்தில் எண்ணப்பின்னல்கள் பொய்மையும் வாய்மையிடத்த
34 நித்தில் எண்ணப்பின்னல்கள் எண்ணப்பின்னல்கள்
35 நியோப்ரபு உலகத்தமிழ் கலை இலக்கியம் கலாச்சாரம் பண்பாடு தமிழ் தமிழகம் சென்னை சமூகம் மற்றும் பல
36 நிருபா புழுதி Dust In writings
37 நிரோசன் Niro\\\'s Court கவிதைகள் பாடல்கள் எண்ணங்களிற்கான தளம்
38 நிர்மலா ஒலிக்கும் கணங்கள் நிசப்தம் கலையும் நேரங்கள்
39 நிர்வியா நிர்வியம் எனது பார்வை, சிந்தனை, எண்ணங்கள், ஆக்கங்கள்
40 நிலா நிலவிலிருந்து... நிலாவின் படைப்புகளும் எண்ணங்களும்
41 நிலாச்சாரல் நிலாச்சாரல் கதை, கவிதை, கட்டுரைகள்
42 நிலாச்சோறு நிலாச்சோறு சமையல் cooking
43 நிழல்மனிதன் நிழல்மனிதன் ஒளியில் தெரியாதவன்..இருளில் பிரியாதவன்
44 நிவேதா ரேகுப்தி குரல்வளைதனில் சிக்குண்ட கானங்கள்
45 நிஷா நிஷா என் தமிழ் பதிவுகள்
46 நெடும்பூரான் பழைய சோறும் புது ஊறுகாயும் வேறென்ன சொல்ல...
47 நெற்றிக்கண் நெற்றிக்கண் எனது கோபத்தின் வெளிப்பாடு
48 நெல்லை ஜிஷ்ணு செம்புலம் அ முதல் ஃ வரை
49 நெல்லையன் நெல்லையனின் எண்ணங்கள் எனது எண்ணங்கள்
50 நேச குமார் இஸ்லாம் ஓர் முழு அறிமுகம் இஸ்லாம் பற்றிய எதிர்மறை விவாதங்கள், கருத்துக்கள் - தமிழில்
51 நேசகுமார் எண்ணச் சிதறல்கள் - நேச குமார் நாட்டு நடப்பு, சினிமா, கலை, இலக்கியம் என எனது எண்ணச் சிதறல்களின் பிரதிபலிப்பு


1 ப.வி.ஸ்ரீரங்கன் The point Social stady
2 பகலவன் சொன்னார்கள் . . . அன்று சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
3 பகுத்தறிவாளன் சிந்தனைச் சிதறல்கள் மிருககாட்சிசாலையும் மேஜிக் ஷோவும்
4 பதிவுகள் kathala Cinema
5 பத்ம ப்ரியா மா. siragugal kavithaigal
6 பத்மா அர்விந்த் தேன் துளி நிஜங்களின் அவலம்
7 பத்மினி Decades Ago Flash Back into Tamil way of life decades ago
8 பத்ரி சேஷாத்ரி எண்ணங்கள் பத்ரியின் வலைப்பதிவு
9 பனசை நடராஜன் புரியல! என் பாமரத்தனமான பார்வையில்
10 பரங்கிப்பேட்டை ஹ.பக்ருத்தீன் எழுத்தோவியங்கள் என் இதயத்துடிப்புகளை தமிழில் இங்கு தருகிறேன்
11 பரசுராமன் த. கொஞ்சம் பேசலாம் வாங்க...! சும்மா அரட்டைதாங்க. பயப்படாம பேசலாம் எதைப்பத்தி வேணாலும்...
12 பரஞ்சோதி பரஞ்சோதியின் சிறுவர் பூங்கா சிறுவர் சிறுமியர்களுக்கான பகுதி, கதைகள், கட்டுரைகள், புதிர்கள் போன்றவற்றை இங்கே காணலாம்.
13 பரஞ்சோதி பரஞ்சோதியின் பக்கம் கடந்த காலத்தை நினைவுக்கூறவும், நிகழ்காலத்தில் நடப்பதை சிந்திக்கவும்
14 பரணீ thulithulijai kavithai & some thoughts........
15 பரணீதரன் கடலோடியின் வலைப்பதிவுகள் எனது கடற்பயண அனுபவங்கள்
16 பரி (மேலழகர்) சில எண்ணங்கள் கிறுக்கல்களாக தான்தோன்றித்தனமாக கிறுக்குகிறேன்
17 பலூன் மாமா பலூன் மாமா பயனுள்ள பொழுது போக்கு
18 பவித்ரா ஸ்ரீனிவாசன் சில நேரங்களில், சில பயணங்கள்... சரித்திரப் பயணக்கட்டுரைகள்
19 பவித்ரா ஸ்ரீனிவாசன் (a) Princess Shangri - La இது என் சொர்க்கம்.
20 பவுல் ரவிசங்கர் தமிழ்மாலை என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
21 பா.ராகவன் மனத்துக்கண் சிந்தித்ததையெல்லாம் சேமித்துவைக்கிறேன்
22 பாடலங்கம்பை கவிதையமுதம் கவிதைத்தொகுப்பு
23 பாண்டி பாண்டியன் பக்கம் மனதில் பட்டதை சொல்கிறேன்
24 பாண்டியன் பகல் வெளிச்சம் pagal velicham
25 பானுவாசன் லிட்டில் வோர்ல்ட் ஆஃப் பானுவாசன் (சிறு) கதைகள்
26 பாபு அறுசுவை.com தினம் ஒரு புது உணவு வகை, மொத்தத்தில் அறுசுவையும் இங்கே பரிமாறப்படும்.
27 பாரதி என் குரல் குறள்சொல்ல ஆசைதான் ஆனால் இதிலென் குரல்மட்டும் விட்டுவைப் பேன்
28 பாரதி தமிழ் நிதி தமிழில் நிதி பற்றிய செய்திகள்
29 பால சுப்ரா Tamil Scribbling கண்டதை சொல்கிறேன் (What I see is what you get)
30 பாலசுப்ரமணி தும்பை towards my beloved society
31 பாலசுப்ரமணியன் . எஸ் லாடு லபக் தாஸ் பஞ்ச் பாலாவின் பதிவு
32 பாலச்ந்தர் கணேசன் Onnun Onnum Rendu Onnun Onnum Rendu
33 பாலதர்ஷன் தமிழ்க்காற்று வாழ்க தமிழ்
34 பாலன் புரியாத புதிர்கள்! இந்த தளத்தில் என்னை நானே கேட்டுக்கொள்ளும் கேள்விகளை இங்கு நீங்கள் பார்க்கலாம், என்னோடு கலந்துறையாடலாம். Blogging க்கு என்னை அறிமுகப்படுத்திய என் அருமை உடன்பிறவா தமக்கை
35 பாலன்தர்ஷன் thamilkkatu Thamil
36 பாலமுருகன் வண்ணம் வண்ணக் கிறுக்கல்கள்
37 பாலமுருகன்.க பாலாவின் பதிவுகள் என் எண்ணங்கள் இங்கே எழுத்துகளாகின்றன
38 பாலமுருகன்.க பாலாவின் படக்களஞ்சியம் புகைப்படங்களின் அணிவகுப்பு
39 பாலா Cogito Ergo Bala இறைவா, எழுத்துப் பிழை கண்டு பிடிப்பவர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று.. கருத்துப் பிழை சொல்பவர்களை நான் பார்த்துக் கொல்கிறேன் ;-)
40 பாலாசிறீ இந்துமதம் எங்கே போகிறது இந்துமதம் எங்கே போகிறது
41 பாலாசிறீ கலைஞரின் சிலப்பதிகாரம் கலைஞரின் சிலப்பதிகாரம்
42 பாலாஜி என்றென்றும் அன்புடன், பாலா என் தமிழ் சார்ந்த முயற்சிகளுக்கு உருவம் கொடுக்க இந்த BLOG பயன்படும் என்று திடமாக நம்புகிறேன்!
43 பாலாஜி (bb) Of Cabbages and Kings Balaji's blog on Movies, Literature, Sports and Politics
44 பாலாஜி-பாரி உருமி மேளம் சமூக அறிவியல், பொது அறிவியல், கவிதைகள், அழகியல் கட்டுரைகள்
45 பாலு மணிமாறன் பாலுவின் பதிவுகள் கடந்து நடந்த பாதையில் கிடந்தவையும் கிடைத்தவையும்
46 பாவை பாவையின் பக்கம் குறிப்பாக எதுவும் இல்லை
47 பாஸிடிவ்ராமா எண்ணத்தில் உதித்தவை! கவிதை மற்றும் கட்டுரை
48 பி.இரயாகரன் தமிழரங்கம் சமூக விஞ்ஞானம், இலங்கை மற்றும் சர்வதேச அரசியல்விவகாரங்கள், விவாதங்கள், கலாச்சாரம், இலக்கியம், மனித உரிமை, பெண்ணடிமை போன்றவைகளையிட்ட விவாதங்கள்
49 பிகேபி ப்ரியமுடன் பிகேபி பிகேபியின் எழுத்தோவியங்கள்
50 பிரகாஷ் Prakash's Chronicle cannot describe :-)
51 பிரதீபா.தி புனைவு 01 ...a fiction
52 பிரதீபாதி An Utopian பிரதிகள் மட்டும்
53 பிரதீப் மழை பெய்யெனப் பெய்யும் மழை
54 பிரதீப் பிரதீப்பின் பக்கங்கள் திரை விமர்சனங்கள்
55 பிரபு கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு... Welcome. This is a tamil blog. வணக்கம். ஆசை, கனவு, கவிதை, என்னைக் கவர்ந்தவை, கணிப்பொறி....அட, போதும் வாங்க உள்ளே :)
56 பிரபு இதுவும்... கடந்து போகும் இங்கிலாந்தில் வாழும் ஒரு இந்தியனின் வலைப்பதிவு.
57 பிருந்தன் பிருந்தனின்பக்கம் கவிதை,கட்டுரை,கதை,செய்திகள்
58 பிருந்தா சரன் தமிழ் கவிதைகள் தமிழ் கவிதைகள்
59 பிரேம் கவிதை என் கவிதைகள்
60 பிழை பிழை பிழை
61 பீர் முகமது ஷாஜஹான் NANBAN LOTS OF POETRY, NEWS AND DISCUSSIONS
62 புதிய கனா உனது உலகம் pothu
63 புதியஅக்னி புதியஅக்னி பொதுத் தேர்தலில் யாருக்கு வெற்றி?
64 புதுவை சீன வானொலி நேயர் மன்றம் சீனத் தமிழொலி சீன வானொலி நேயர்கள் கலந்துரையாடும் களம்
65 புத்தகவாசம் புத்தகவாசம் Tamil Book Club
66 புத்திசாலி புத்திசாலி புத்திசாலி
67 புலம்பல்ஸ் புலம்பல்ஸ் நாட்டு நடப்பு குறித்து எமது புலம்பல்களை இங்கு கொட்டுவதாக உத்தேசம். அது மட்டுமல்ல .....
68 பூ... பூக்கள்.... புதுவைப்பூவின்வலைப்பூ..
69 பூ... கவிதை மலர்கள்... புதுவைப்பூவின் வலைப்பூ..
70 பூ... கவிதைப்பூக்கள்... புதுவைப்பூவின் வலைப்பூ..
71 பூமாலை பூமாலை கவிதை தொகுப்புகள்
72 பெடியன்கள் பெடியன்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகளின் எண்ணங்கள்
73 பெட்டை பெட்டைக்குப் பட்டவை பத்திகள்
74 பெண்; பெண் மட்டுமே மாடர்ன்கேர்ள் கண்சிமிட்டல்கள் மாடர்ன் மற்றும் கேர்ள் பார்வைகள்
75 பெண்மதி நிலவின் கறைகள் நிலவின் கறையும் அழகாய்ப் பாடப்படுவதுண்டு..
76 பெயரிலி. (-/) நிகழ்வுகள் ¾Á¢ú ¿¢¸ú׸û ÀüȢ ŢÀÃí¸¨Ç (¯¨ÃÅÊÅ¢§Ä¡ «øÄÐ À¼ÅÊÅ¢§Ä¡) ¯ûÇ¢¼
77 பெயர் சொல்லா விரும்பாத பதிவர் Any Name Goes தமிழ்மணப் பதிவுகளின் மீதான குறும்புப் பகடிகள்
78 பெரின்பம் webtime தமிழில் கட்டுரைகள்
79 பேய் எ ரீலி Pay A Reeli\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s Vector nonZENzone
80 பொறியாளர் நெருப்பாய் இரு நண்பா..! நெருப்பாய் இரு நண்பா..!
81 பொறுக்கி சுட்டதும், சுடாததும்! பாதித்ததும், பாதிக்காததும் அல்லது பொறுக்கியதும், பொறுக்காததும்…
82 பொள்ளாச்சி நசன் தமிழம் நான் சந்தித்த...
83 ப்ரியன் ப்ரியன் கவிதை


1 மஞ்சுநாத் கதை பட்டறை கதை பட்டறை
2 மஞ்சுளா ராஜாராமன் எனது புகைப்படங்களின் தொகுப்பு My Photo Gallery
3 மஞ்சூர் ராசா மஞ்சூர் ராசாவின் பக்கங்கள் நிழல்களும் நிஜங்களும்
4 மணியன் மணிமலர் அந்தரங்கம் பேசுதே!
5 மணிஷ் tamil genaral writings
6 மதன் யாழ் To லண்டன் புலம் பெயர் அனுபவங்கள்
7 மதி கந்தசாமி எண்ணங்கள்! சந்திரமதி கந்தசாமியின் எழுத்துப்பயிற்சிக் கூடம்
8 மதி கந்தசாமி தி ரை ப் பா ர் வை Movietalk
9 மதுமிதா kaatruveli kavithaikaL
10 மதுரபாரதி மதுரமொழி தமிழும் தமிழ் சார்ந்த புலமும் குறித்துப் பேச, சிந்திக்க ஒரு குடில்
11 மதுரை மல்லி மதுரை மல்லி ரௌத்ரம் பழகு, ருத்ரம் ஆடு
12 மதுரைக்காரன் வில்லங்க கூத்தாடிகள்..... ரெண்டு பெரிசுமே((அ)தி.மு.க)பெரிசா அலட்டிக்கிட்ட மாதிரி தெரியல, திருமா,ராமதாசு மாதிரி குட்டிப்பசங்க(ஹி..ஹி...அடிக்கடி சேட்டை பண்றாங்கல்ல...அதான் செல்லமா...)தான் புலம்பிட்டு திரியறாங்க.
13 மதுரைக்காரன் அளக்கலாமா.... கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம்...நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் அளவை முறை பத்தி தெரியும்....அப்படி ஒன்னு இருந்ததான்னு
14 மனசு மனப்பத்தாயம் எனது நாட்குறிப்பின் திறந்த பக்கங்கள்...
15 மனுஷ்ய புத்திரன் உயிர்மை ஊருக்கு நல்லது
16 மனுஷ்ய புத்திரன் உயிர்மை பதிப்பகம் உயிர்மை பதிப்பக நூல்கள் பற்றிய அறிமுக வலைப்பதிவு
17 மனோஜ் Pallavar Pallavar
18 மன்னிக்கவும் Quarter Biriyani Matter Over Thamaasu
19 மன்னை மாதேவன் மன்னை மாதேவன் உணர்வலைகள் உள்ளத்து உணர்வுகளில் சில
20 மன்மதன் மன்மதன் பக்கம் மன்மதன்
21 மயிலாடுதுறை மகரந்தம் Mayiladuthurai
22 மயிலாடுதுறை சிவா மணிக் கூண்டு மணிக் கூண்டு
23 மயில்வாகனம் பேரின்பம் பேரின்பம் வெப் கவிதைகள் கவிதைகள்
24 மயூரன்.மு ஈழநூல் ஈழத்தவர் தமிழ் நூல்களின் மின் உரை வடிவங்களை இணையத்தில் ஏற்றும் சிறு முயற்சி
25 மரம் வந்திட்டா மகராசி வலைதளத்திற்கு புதிதாய் வந்திருக்கிறேன்
26 மரம் அப்பிடிப்போடு அடிசில் வாங்க சமைக்கலாம்!
27 மரம் சமையல் சமைக்கலாம் வாங்க
28 மரம் சமையல் கோழி சமையல்
29 மரவண்டு மரவண்டின் ரீங்காரம் ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரை
30 மரிய குமாரன் இடி,மின்னல் சத்தமில்லாமல் ஒரு இடி.!
31 மறவன்புலவு க. சச்சிதானந்தன் மறவன்புலவு க. சச்சிதானந்தன் காட்டில் மழை
32 மறவன்புலவு க. சச்சிதானந்தன் தமிழர் கால்வாய் தமிழர் கால்வாய்
33 மறவன்புலவு க. சச்சிதானந்தன் பதிப்புத் தொழில் பதிப்புத் தொழில்
34 மல்லிகா-யாஸ்மின் மல்லிகை மணம் மல்லிகைப் போலொரு மனம், மணத்தோடு
35 மா. இரவிசங்கர் மா. இரவிசங்கர் Super Star Rajinikanth
36 மாதங்கி பெரிதினும் பெரிது கேள் anything and everything
37 மாது காண்பதுவே Maadhoo's Photo Album
38 மானஸாஜென் கூவத்தில் நிலவு -
39 மாயவரத்தான்... Third Vision மாயவரத்தான்...
40 மாரி எனக்குப் புரிந்த உலகம் பொது - முன்னுதாரண மனிதர்கள்
41 மார்க்சி°ட் தமிழ் மார்க்சி°ட் தமிழ் மார்க்சி°ட் தமிழ்
42 மாலன் என் ஜன்னலுக்கு வெளியே... மாலனின் வலைப்பூ
43 மாலன் வாசகன் மாலன் என்ற ஒரு வாசகனின் மனப்பதிவு
44 மாலன் திசைகாட்டி திசைகள் மின்னிதழின் த்கவல் மையம்
45 மாலன் என் ஜன்னலுக்கு வெளியே எழுத்தாளர் இதழாளர் மாலனின் வலைப்பதிவு
46 மாவுருண்டை ஹால் வீடு சுட்டவையும் சுடாதவையும்
47 மின்னம்பரன் theiveekam munivarkal
48 மியாவ்.... மியாவ்.... ஒரு பூனையின் முனகல்கள்
49 மீனாக்ஸ் Meenaks' Musings என் கவிதைகள், கதைகள் மற்றுமான creative படைப்புக்கள்
50 மீனாக்ஸ் திரை விமர்சனம் தமிழ்த் திரைப்படங்களின் மீதான விமர்சனங்கள்
51 மீனாக்ஸ் எளிய தமிழில் இனிய மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங் சிந்தனைகளை தமிழில் பகிர்ந்து கொள்ள ஒரு வலைப்பதிவு
52 மீனாக்ஸ் எழுத்தென்னும் தவம் என் எழுத்தை உருவாக்கும் பிறர் எழுத்துக்கள் பற்றி
53 மு. மாலிக் விளம்பி இங்கே சொல்லப்படும்
54 மு. ராஜ்குமார் என் மன வானில் என் இணையப் பயணம்
55 மு.மயூரன் ம்.. விட்டு விடுதலையாகிநிற்போம்
56 மு.முகிலன் Tamil Podcast Tamil Podcast Show
57 முஃப்தி நிகழ்வுகள் இணையம் சார்ந்த பதிவுகள்
58 முஃப்தி விமானம் இணைய வீதியில் நான் பயின்ற பாடங்கள்
59 முகமூடி முகமூடி 'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்
60 முகில் துடிப்புகள் முகிலின் எழுத்துக்கள்
61 முகுந்த் தமிழனின் பார்வையில்... தமிழனின் பார்வையில்...
62 முச்சங்கர் கூட்டணி மேல்kind பேச்சுலர் ஆண்களின் கூட்டு வலைப்பதிவு
63 முதல்வன் தகர முதல்வன் நிஜார் போட்ட மனிதனின் பேஜார்
64 முத்து முத்து பனிப்பூக்கள் நகைச்சுவைகள் , சுவையான விஷயங்கள் ..
65 முத்து முத்து வலைப்பூக்கள் - Muthu Tamil weblogs கட்டுரைகள்,எண்ணங்கள்,அலசல்கள் இன்னும் பல..
66 முத்து மணிமொழி மணிமொழி
67 முத்து முத்து tamil literature
68 முத்து நவீன தமிழ் இலக்கியம் கள், சாராயம், சிகரெட் மற்றும் நவீன தமிழ் இலக்கியம்
69 முத்து நெடுமாறன் செல்லினம் செல்லினம் மென்பொருள் பயனர்களுக்கு தகவல்களும், பொதுவான தமிழ் இணையம்/கணிமை சிந்தனைகளும்
70 முத்துகுமரன் முத்துகுமரன் கவிதைகளுக்காக
71 முத்துகுமரன் தீபங்கள் பேசும் காதலாகி சில கவிதைகள்
72 முத்துகுமரன் என் பார்வையில் என் பார்வையில் சமுதாய நிகழ்வுகள் பற்றிய பதிவுகளுக்காக
73 முத்துராமன் நல்ல நிலம் நல்ல நிலம்
74 முனியப்பன் வேப்பமரமுனி பித்தலாட்டம், பேயாட்டம், பொம்மலாட்டம்
75 முனிவன் தமிழ் செம்மொழி அரசு ஆணை செம்மொழி
76 முபாரக் முடிவற்ற அன்பின் தேடல் கவிதை, கட்டுரை, கடிதங்கள்
77 முரளி Walk to the light. வெளிச்சம் நோக்கி...
78 முரளி வெங்கட்ராமன் Murali Venkatraman's blogs music, vedanta
79 முருகபூபதி Boopa's view தேதியில்லா குறிப்புகள்
80 முல்லை குறிஞ்சி எண்ணங்கள், பார்வைகள், நினைவுகள், நிகழ்வுகள்........
81 மூனா கிறுக்கல் கிறுக்கல்
82 மூனா துகிலிகை ஓவியம்
83 மூர்த்தி மூர்த்தியின் வலைப்பூ எல்லாம் நம் கிறுக்கல்கள்தான்
84 மூர்த்தி Moorthy's blogs Moorthy's blogs
85 மெய்யப்பன் பார்வை அகமும், புறமும் , இருப்பும், விருப்பும்.
86 மெய்யப்பன் (அனாமிகா) அனாமிகா பாமரனின் பிதற்றல்கள்
87 மைதிலி நிரா தெரிகிறதா பெண்ணே
88 மோகன் இதய பூக்கள் என் எண்ணங்களின் தொகுப்பு
89 மோகன்தாஸ் மோகன்தாஸ் Kathai, Kavithai, Thamizh


1 யக்ஞா கனவுகள்::கருத்துக்கள்::கற்பனைகள் என் சிந்தனைச் சிதறல்கள், நேரடி இனையம் வழியே! கொஞ்சம் மெய் மீதி மை...
2 யாழ் கோபி தமிழ்பித்தன் கவிதை நகைச்சுவை இணையவிமர்சனம் என பலதும் பிதற்றும் பித்தன்
3 யாழ் கோபி பித்தன் நகைச்சுவை,கவிதை,என பலதும் உளறுகிறான் இந்த பித்தன்
4 யாழ் சுதாகர் yazhkavi kavithai
5 யாழ் நடராஜ் கண்ணப்பு இலக்கியச்சோலை கவிதை, சிறுகதை
6 யாழ்சுதாகர் yazhsuthakar pathilkal யாழ்சுதாகர் பதில்கள்
7 யாழ்சுதாகர் ksrajah
8 யாழ்சுதாகர் TMS டிஎம்எஸ் ஆளுமை
9 யாழ்சுதாகர் இங்கே நிம்மதி ஆன்மீகம்
10 யூனா யூனா கொஞ்சம் தமிழ்
11 யோசிப்பவர் யோசிங்க யோசிங்க! யோசிங்க!! யோசிச்சுகிட்டே இருங்க!!!
12 யோசிப்பவர் கதை எழுதுகிறேன் யோசிப்பவரின் கதைகள்


1 ரங்கநாதன் மனதைக் கவர்ந்த புத்தகங்கள் மனதைக் கவர்ந்த புத்தகங்கள்
2 ரங்கநாதன் இதர எண்ணங்கள் மனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களின் தொகுப்பு
3 ரங்கநாதன் பிதாவின் கதைகள் என் தந்தையிடம் கேட்ட கதைகள்
4 ரங்கராஜன் Sindhanaigal Thanimai
5 ரசிகவ் ஞானியார் Nilavunanban Poem and my college thoughts
6 ரஜினி ரசிகர்கள்(www.rajinifans.com) ரசிகனின் குரல் It's all about Super Star Rajinikanth
7 ரமணி சிலந்திவலை ஒரு சிலந்தி வலை பின்னுகிறது
8 ரமணிதரன் Pay A Reeli's Vector nonZENzone
9 ரமணிதரன் (-/பெயரிலி) Aging Wanderer's Raging Rambles: Focus Ó¾¢Õõ «¨Ä»É¢ý Ó¾¢Ã¡ «¨Ä¸û: ÌÅ¢Âõ
10 ரமா சங்கரன் மாலனின் இலக்கியப் பூக்கள் மாலனின் படைப்புலகம் மீதான பார்வைகள்
11 ரமேஷ் கவுந்தியடிகளின் வலைப்பூ சிலப்பதிகாரம் - மணிமேகலை ஆய்வு
12 ரமேஷ் நான் ரமேஷ் எண்ணங்கள் சிந்தனைகள் மற்றும் உளறல்கள்
13 ரமேஷ் தியாகராஜன் பெயரில் என்ன இருக்கு? பெயரில் என்ன இருக்கு?
14 ரமேஷ் வவுனியன் தேடல் தமிழன்
15 ரம்யா நிகழ்வுகளின் தாக்கங்கள் நிகழ்வுகளின் தாக்கங்கள்
16 ரவி பாலா பொம்மலாட்டம் ஆடுகிற ஆட்டத்தில், எனது அசைவுகள். கூத்தடிக்கும் கூட்டத்தில், எனது கதாபாத்திரங்கள். வாசம் செய்ய வந்த இடத்தில், எனது வேஷங்கள்.
17 ரவி ஸ்ரிநிவாஸ் சிந்தனை books,articles,URLs -suggested by me
18 ரவி ஸ்ரிநிவாஸ் கண்ணோட்டம் கருத்துகள்,குறிப்புகள்,விமர்சனங்கள்
19 ரவிசங்கர் தமிழ்த் தென்றல் எனக்குப் பிடித்தவை, என்னை பாதித்தவை
20 ரா.சுப்புலட்சுமி மழைச்சாரல் இந்த மழைச்சாரல் உடலை மட்டுமல்ல மனதையும் குளிர்விக்கும்.
21 ராகினி raahini kavithaigal kavithaigal
22 ராகுலன் சிறிதரன் அம்மா நான் படம் காட்ட போறேன் . . . படம் காட்டுவது
23 ராசா ஒன்னுமே புரியல உலகத்திலே.... குப்பை..
24 ராஜ சிம்ஹன் கமாண்டோ என் கருத்துக்களும் அதன் எதார்த்தங்களும்
25 ராஜகணேஷ் என் ஜே சிந்தனைசிலந்திகள் பட்டய கிளப்பு !
26 ராஜா நினைத்தேன் எழுதுகிறேன் சிந்தனை குறிப்புகள்
27 ராஜா ராஜா About Myself
28 ராஜா நினைத்தேன் எழுதுகிறேன் சமூக, அரசியல் நிகழ்வுகள் மீதான் என் கருத்துகள்
29 ராஜா இன்பசாகரன் வரிகள் வலைக் கிருக்கல்கள்
30 ராஜா திருச்சி Trichy Raja Raja vin paarvai
31 ராஜாகார்த்திக் ::என் பார்வையில் என் பார்வையில் பதிவானவை, எனது புகைப்படங்களுக்கான வலைபூ
32 ராஜாச்சூலான் கடாரம்நெட் இனியவை நாலு லட்சம்
33 ராஜேஷ் சந்திரா கரும்பலகை My thoughts...
34 ராஜ்காந்த். இ. ஒரு தமிழ் கணினி நண்பனின் இணைய இல்லம் தமிழில் கணினிக்கட்டுரைகள், தகவல்தொழிநுட்பம், தமிழில் பொதுவான அறிவியல் ஆக்கங்களுடன் கூடியதளம்
35 ராணி Sindhamani Sindhamani
36 ராமசந்திரன் உஷா நுனிப்புல் எல்லாருக்கும் எல்லாம் தெரியும் என்பதேயில்லையே
37 ராம் வோச் தமிழில் ராம்வோச் ராம் வோச்
38 ராம்கி ஸ்டேஷன் பெஞ்ச் அரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம் குறித்து விவாதங்கள் நடந்த இடம் இந்த ஸ்டேஷன் பெஞ்ச்.
39 ராம்வோச்சர் RamWatch ஊடகக்கண்காணிப்பு
40 ரோஸாவசந்த் ஒரு குட்டிபூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும், சில நல்லிணக்க முயற்சிகளும்..! நமக்கு தொழில் முடிந்தவரை கலகம். கலகிய பின் எண்ணுதலும், பரிசீலித்தலும். அதற்கு பின்னும் சூழல் சாதகமாயிருந்தால் சில நல்லிணக்க முயற்சிகளை அவ்வப்போதாவது முன் வைப்பதுவும்.


1 லப்டப் My Poems : labdab - எனது கவிதைகள் : லப்டப் My Poems - எனது கவிதைகள் : லப்டப்
2 லலிதா ராம் கமகம் இசை விமர்சனம்
3 லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் Los Angeles Ram நீயும் blog நானும் blog, நெனச்சுப் பாத்தா எல்லாம் blog
4 லொள்ளு சிந்தனைகள் சிந்தனைகள்


1 வ.அன்சாரி இதையும் படிங்க இது ஹதீஸ் இல்லிங்கோ என் கருத்துங்கோ
2 வசந்தன் வசந்தன் பக்கம் எனக்குப் பட்டவை
3 வசந்தன் வசந்தம் சும்மா பொழுது போக்குக்காக
4 வந்தியத்தேவன் தொடரும் குளம்பொலி கதை, கவிதை, கட்டுரை
5 வந்தியத்தேவன் சரித்திரப் பதிவுகள் சரித்திரக் கட்டுரைகள்
6 வன்னியன் பூராயம் என் அனுபவங்கள்
7 வன்னியன் படிகளின் பதிவுகள் படியெடுக்கப்பட்ட பதிவுகள்.
8 வலைப்பதிவன் எண்ணங்களின் குரல்வடிவம் மனக்கசப்புகளும், ஏமாற்றங்களும் படைக்கும் காவியங்கள்
9 வளவன் ஐ-தோடா எளிமை*இனிமை - பகிர்ந்து கொள்ளத்தக்க எதுவும்...
10 வழிப்போக்கன் valipokkan வாழ்வெனும் வழித்தடத்தில் நான் காணும் காட்சிகள்
11 வா. மணிகண்டன் பேசலாம் விமர்சனங்கள்,கவிதைக்கென ஒருவலைப்பதிவு
12 வாகீசன் கிறுக்கல்கள் படித்துச் சுவைத்தவை
13 வாசன் பிள்ளை கொள்ளிடம் அமேரிக்காவில் தமிழன்
14 வாசன் பிள்ளை கொள்ளிடம் அமேரிக்காவில் தமிழன்
15 வாசுதேவன் இலட்சுமணன் விவேகம் விவேகச் சிந்தனை, ஆன்மீகம், நகைச்சுவை
16 வாமதேவன் Vamadevan Pakkangal Spiritualism,religion,poems,articles,tamil,saivam,advaita,vedanta,ramana
17 விகடகவி TAMILTOONS பேசும் படம்
18 விகடன் மறுபக்கம் எல்லாம் கலந்தது
19 விக்னேஷ் thaNdooraa ... அன்றாட நிகழ்வுகளை என் பார்வையில் பதிவு செய்யும் ஒரு முயற்சி
20 விக்னேஷ் அண்ணாமலை என்னுள்ளே என்னைத்தேடி ... தலைப்பே சொல்லும் கருப்பொருளை...இது எனக்குள்ளே என்னை தேடும் ஒரு முயற்சி...
21 விக்னேஷ்.அ Ennulle .... EnnaiThedi Everything abt me ...Straight away from the heart
22 விசிதா Expressions-எண்ணமும், எழுத்தும் விசிதாவின்எண்ணங்கள்,படைப்புகள்-Wichita\\\'s Writings in Tamil Unicode
23 விசுவனாதன் நெய்வேலி வலைப்பூ ஒரு நெய்வேலிக்காரனின் எண்ண ஓட்டங்கள்
24 விஜய் நினைவலைகள் விஜயின் நினைவலைகள்
25 விஜய் வெட்டிவம்பு வெட்டி எண்ணங்கள்
26 விஜய் திறவுண்டவாசல் பூங்கா நகரத்தில் இருந்து.....
27 விஞ்ஞானம் தேடிக் குருவிகள் விஞ்ஞான மற்றும் அறிவியல் செய்திகள் - Science News விஞ்ஞான மற்றும் அறிவியல் செய்திகள் - Science News
28 விடாக்கண்டன் விடாக்கண்டன் விடாக்கண்டன்
29 வித்யா சுரேஷ் துளிர் துளிர்
30 வினிதா விஜயன் P A Y A N A M Place where some of my thoughts are reflected in tamil. The phases my life takes me through....
31 வினையூக்கி வினையூக்கி வினையூக்கி
32 வினோபா பரிசல் தமிழ் நதியில் ஒரு பயணம்
33 விபூஷணன் அரவிந்தநாதன் Ulai உருவில்லா சிந்தனைகள் கருக்கட்டி, வேலி உடைத்து ஓடும்போது பிடித்து வைத்தவை
34 விமர்சகன் விமர்சகன் வலைப் பக்கம் கட்டுரைகள்
35 விவசாயி விவசாயி விவசாயி
36 வீ.எம் அரட்டை அரங்கம் மனதில் பட்டதை எழுதுகிறேன்
37 வீரமணி இளங்கோ வைகை நதிக்கரையில் நான் வியந்தவையும் என்னுள் விளைந்தவையும்
38 வீரவன்னியன் வீரவன்னியன் சாதி வளர்க்கும் சில சமுதாய ஏமாற்றுக்காரர்களின் துகிலூரிக்கும் பதிவு
39 வெங்கடரங்கன் வெங்கடரங்கன் வலைப்பதிவு படித்தவை, பார்த்தவை மற்றும் நடந்தவை
40 வெங்கட் Domesticated Onion ஒரு நாடோடியின் வடதுருவ வலைக்குறிப்புகள்
41 வெங்கட் கண்ணதாசன் தேடல் தேடல், உயிர் வாழ்தலின் ரகசியம்........
42 வெங்காயம் வெங்காயம் பக்தி மணம்
43 வெட்டிபயல் கருத்து கந்தசாமி கருத்து கந்தசாமி கற்றதும் எண்ணங்ளும்
44 வெற்றி திருமலை எனக்குள் ஒருவன்........... என்னுள் கேள்விகள் எழுப்பும் என் மனசாட்சிக்கான தேடல்
45 வே. சபாநாயகம் நினைவுத்தடங்கள் நினைவுத்தடங்கள்


1 ஜகன் தமிழ் வயல் தமிழ் வயல்
2 ஜனநாயகம் ஜனநாயகம் மனிதர்களும்,சமாதானவாழ்வும்.
3 ஜமால் முஹ்ம்மத் காத்திரு கவிதை
4 ஜயராமன் வைதிகஸ்ரீ இந்து மத சாஸ்திர விளக்கங்கள்
5 ஜான் போஸ்கோ John Bosco ஜான் வலைப்பூக்கள் சிந்தனைச் சிதறல்கள், எழுச்சிப் படைப்புகள், கட்டுரைகள்...
6 ஜாபர் அலி நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்களே! இஸ்லாம் சம்பந்தமாக மட்டும்.
7 ஜாபர் அலி இறுதி இறை வேதம் திருமறை குர்ஆன்
8 ஜாவாகுமார் Tamil Tevaram Hymns for various occasions தமிழ் தேவாரம் மற்றும் சைவ சித்தாந்த கருத்துக்கள் பற்றிய தமிழ் பதிவு
9 ஜிகிடி ஜிகிடி எல்லாமே பகடி தான்
10 ஜிதிராவிட் Gdravid’s Warehouse ஜிதிராவிடின் கிடங்கு
11 ஜீவா வெங்கடராமன் Self Checkout வருக, வருக, வாசிக்க!
12 ஜெ. ரஜினி ராம்கி சில்லுண்டியின் சிந்தனைகள் மயிலாடுதுறை ஜெ. ரஜினி ராம்கி
13 ஜெகதீஸ்வரன் ஊத்துக்குளி வெண்ணெயிடாடோய் !!! ஜெகதீஸ்வரனின் ஆக்கங்கள்
14 ஜெய. சந்திரசேகரன் 'மரபூர்' ஜெய.சந்திரசேகரன் பக்கங்கள்... தமிழ் கவிதைகள், கட்டுரைகள்..
15 ஜெயக்குமார் ஜேகேவின் சில குறிப்புகள் எல்லாவற்றையும் பற்றிய என் குறிப்புகள்
16 ஜெயச்சந்திரன் குமிழி கற்றவை கண்டவை... என பலதையும் பகிர
17 ஜெயந்தி சங்கர் வல்லமை தாராயோ ஜெயந்தி சங்கரின் எண்ணமும் எழுத்தும்
18 ஜெயஸ்ரீ உள்ளோட்டம் என் மனதின்னுளோடும் எண்ண ஓட்டங்களின் பதிப்பு
19 ஜெய்சங்கர் மனப்பதிவு என் மனதில் பதிந்தவை
20 ஜெய்சங்கர் ஜன்னல் என் பார்வை
21 ஜேசுராஜ் இன்னாசிமுத்து தமிழ்க்களம் தமிழ்க்களம்
22 ஜோசப் இருதயராஜ் காலக்கிறுக்கன் சமகால தகவல்கள், செய்திகள், நிகழ்வுகள், விமர்சனங்கள், முதலியன
23 ஜோ கணியம் நாஞ்சிலான்
24 ஜோ.ஆ. கிறிஸ்டோபர் ஜாண் கிறிஸ்டோபர் பதிவுகள் என் எண்ணங்கள்
25 ஜோதி kavithaikKaL kavithaikaL
26 ஜோதி ஜோதி கவிதைக்கள் கவிதைக்கள்
27 ஜோதி. சுவாமிநாதன் சோம்பேறி பையனின் எண்ணங்கள் சோம்பேறி பையனின் எண்ணங்கள் இந்த வலைப்பதிவில் தொடர்ந்து வெளியாகும்
28 ஜோதிராமலிங்கம் ஜோதிராமலிங்கம் கவிதைகள்
29 ஜோதிராமலிங்கம் & உதயச்செல்வி மனமுற்றம் கவிதைகளும் மற்றவையும்


1 ஷங்கர் சுவடுகள் தேடியவை, பார்த்தவை, பதித்தவை
2 ஷங்கர் இருக்கிறது*இல்லை குப்பனுக்குக் குவாண்டம் இயற்பியல். மியாவ்!
3 ஷண்முகி ஷண்முகி எண்ணங்களின் வடிவங்கள்...
4 ஷண்முகி நகைச்சுவை சிரிக்க சிந்திக்க
5 ஷ்ரேயா மழை சின்னச் சின்ன அழகான தருணங்கள்


1 ஸ்ரீகாந்த் சிறுவனின் பதிவுகள் (புனிதமானதையே காதுகள் கேட்கட்டும் - புனிதமானதையே கண்கள் பார்க்கட்டும்)
2 ஸ்ரீகாந்த் மீனாட்சி மனம் ஒரு குரங்கு தமிழ் சமுதாயம் மற்றும் இலக்கியம்
3 ஸ்ரீதரன் தமிழ் வலையின் மினி-நூலகம் தமிழ் வலையின் மினி-நூலகம்
4 ஸ்ரீராம் Ennangal உள்ளமே ப்ரபஞ்சம்...ப்ரபஞ்சமே உள்ளம்!
5 ஸ்ரீஷிவ் pathivugal ithu oru karutha ilaignanin velutha ithaya pathivugal...l
6 ஸ்வரவல்லி ஸ்வரவல்லி tamil blog


1 ஹபிபுல்லா இஸ்லாமிய சிந்தனை இஸ்லாத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்திற்காண பதில்
2 ஹரன்பிரசன்னா நிழல்கள் General
3 ஹரி புலம்பல்ஸ் நாட்டு நடப்பு குறித்து எமது புலம்பல்களை இங்கு கொட்டுவதாக உத்தேசம். அது மட்டுமல்ல .....
4 ஹரி கிருஷ்ணன் மரபிலக்கியம் தமிழும் தமிழ் மரபும்
5 ஹரிராஜேந்திரன் உணர்வின் வரிகள்.....! புதுவை இரத்தினதுரை அவர்களின் உணர்வின் வரிகள்
6 ஹோல்ட் அட் 9000 எளிமையே இனிமை எளிமையே இனிமை


--------------------------------------------------------------------------------
List generated on Fri, 02 Dec 2005 05:31:19 -0500
Total Blogs in the list: 841


posted byமதி கந்தசாமி (Mathy Kandasamy) 8/13/2006 02:49:00 AM
Top of the page


Related Links
Thamizarhal
Tamil Blogs - Tips&Tricks
How to view TamilBlogs
Valaippoo - Tamil Bloggers' Journal (NEW)
சங்கம் - தமிழ் பல்துறை விவாதக்களம்
Valaippoo - Tamil Bloggers' Journal(OLD)
Tamil Links
தமிழ் மென்பொருட்களுக்கு
Murasu
E-Kalappai
Reader and Converter(Unicode)
Puthuvai tamil writer